Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்கள் மீது இராணுவத்தினர் 15 தடவைகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mullaitheewu-2-720x450.jpg

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்கள் மீது இராணுவத்தினர் 15 தடவைகள் துப்பாக்கிச்சூடு!

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய நால்வர் மீது இராணுவப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த நால்வரில் மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் மீது 15 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும் அவர் உயிர் தப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அம்பகாமம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக நால்வர் மணல் ஏற்ற முற்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற இராணுவத்தினர் நால்வர் அவர்களை தாக்க முற்பட்ட வேளை, மணல் ஏற்றிக்கொண்டிருந்த மூவர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சாரதியை நோக்கி 15 தடவைகள் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் வாகன சாரதியை சிறைபிடித்த இராணுவத்தினர், இராணுவத் துப்பாக்கியால் அடித்து அவரை காயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வெடிச்சத்தம் கேட்டு குறித்த இடத்திற்கு மக்கள் சென்றுள்ளதோடு, பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் மக்களின் வருகையையடுத்து இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் இராணுவத்தினரை கைது செய்யுமாறு மக்கள் கோரியுள்ளனர். எனினும் பொலிஸார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும்  காயமடைந்த நபர் அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரை கைது செய்யுமாறு கோரி மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் மக்கள் குழுமியதுடன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான மு.முகுந்தகஜன், சத்தியசீலன் ஆகியோரும் மக்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

எனினும் அதன் பின்னர் பொலிஸாருடன் இடம்பெற்ற உரையாடலைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து களைந்துச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Mullaitheewu-5-428x241.jpg

Mullaitheewu-3-428x241.jpg

http://athavannews.com/சட்டவிரோதமாக-மணல்-ஏற்றிய/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.