Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரங்கட்டப்படும் ஆதிவாசிகள்

Featured Replies

a4.jpg?itok=-fRPpwaR

 

சர்வதேச பழங்குடிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு

உயிர் வாழ்வதற்காக போராடும் அவலம்!

சர்வதேச பழங்குடிகள் தினம் இன்று (ஓகஸ்ட் 9) உலகில் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று இத்தினம் அனுஷ்டிக்கப்படுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1994ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இது, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த வருடத்திலிருந்து தொன்மைமிகு பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்தினர் பழங்குடியினர். ஆனால், மொத்த ஏழைகளில் இவர்கள் 15சதவீதம் அளவில் உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இந்த மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். இவர்கள் வாழும் பகுதிகள் வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக பெரும்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்டையாடுதல் குற்றம் என்று சட்டம் இயற்றியதால், காலம்காலமாக வேட்டையாடுதலைத் தொழிலாகச் செய்து வந்த பழங்குடியின மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் இவர்கள் தங்களது வாழ்விடமான வனம் மற்றும் மலைப்பகுதியில் இருந்து அரசினால்  வெளியேற்றப்பட்டுள்ளனர்.பழங்குடியின மக்கள் இக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.

நகரத்திற்குள் வசிப்பவர்களை விட சுற்றுச்சூழல் பராமரிப்பிலும் வன விலங்குகளைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது பழங்குடியினர்தான். ஆனால் அவர்களை கொத்தடிமைகளாகவும், சொற்பப் பணத்துக்கு உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் பணியாட்களாகவும் பயன்படுத்தி வருகிறது இப்போதைய சமூகம். உலகம் முழுக்க இந்த நிலையே தொடர்கிறது.

சுதந்திரம் என்பதையே வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த மேற்படி மூத்த குடிகளின் வாழ்க்கைக்கு உரிய உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்பதே உலகளாவிய ரீதியில் வேண்டுகோளாக இருந்து வருகிறது. அவர்களின் தனித்த கலாசாரம் காக்கப்பட வேண்டும்.  தனித்தன்மையைத் தொலைத்துவிடாமல், புதிய உலகின் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் அச்சமூக மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் முடிந்தவரை பாடுபட்டு உலகமெங்கும் 'மரபின் மக்கள்' என அழைக்கப்படும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டன.  உலகமெங்குமுள்ள பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு செயல்திட்டங்களை ஐ.நா வகுத்து செயல்படுத்தி வருகிறது.

இதில், ஆதிவாசி பழங்குடி சமூகங்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக மேம்பாடு, கல்வி, பொருளாதார மேம்பாடு, கலாசார மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனினும் மாறிவரும் உலகச் சூழலில் ஆதிவாசி பழங்குடி சமூகங்கள் புதுப்புது சவால்களையும், பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி சமூகங்கள் உள்ளன. ஆதிவாசி சமூகங்களின் பொருளாதார- சமூக முன்னேற்றம், கலாசார- சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, சுகாதாரம் பேணல், மனித உரிமைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்கு பல தரப்பினரும் கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதே இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

ஆதிவாசிகளின் பிரச்சினைகளை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில்  ஊடகங்கள் பணியாற்ற வேண்டியது அவசியம். 5ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி பிரிவினர் உலகம் முழுவதும் வாழ்கின்றனர்.கானா பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஃேபார் சோசியல் ெபாலிசி’ நடத்திய ஆய்வில் உலகில் அதிகரித்து வரும் நகர மயமாக்கலே ஆதிவாசி மக்களை ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

உலகமெங்கும் உள்ள ஆதிவாசிகள் வாழ்வதற்காக போராட வேண்டிய நிலைமையில் தற்போது உள்ளனர்.

ஆதிவாசி மக்களின் இருப்பு, வாழ்க்கை சூழல், பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலைக் கொள்கிறது. உலகில் வறுமையில் வாடுவோரில் 15சதவீதமும் பழங்குடியினர் ஆவர்.இந்தியாவில் 'மாவோயிஸ்ட் வேட்டை' என்ற பெயரில் ஆதிவாசி மக்கள் பாதுகாப்புப் படையினராலும் பொலிசாராலும் தாக்கப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் நகரமயமாக்கல், காடழிப்பு மற்றும் புதிய சட்டங்களால் ஆதிவாசிகளான வேடுவ மக்கள் தங்களது கலாசார பாரம்பரயங்களை இழந்து வருகின்றனர்.

காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும் ‘வளர்ச்சித் திட்டம்’ என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருவதால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்விந்திய பழங்குடி மக்களின்  இனசுத்திகரிப்பை அரங்கேற்றிவிட்டு உருவானதுதான் அமெரிக்கா என்ற தேசம். இன்று அமெரிக்கா-, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யெமன் போன்ற நாடுகளில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் இடம்பெறுகின்ற கொடுமைகள் அதிகமாகும். 'தீவிரவாத வேட்டை' என்ற பெயரால் தாக்குதல்களை நடத்தி அப்பாவிகளை அழிக்கும் நடவடிக்ைககள் தொடர்ந்து வருகின்றன.

மரபின மக்கள் குறித்து ஆண்டுக்கு ஒரு தினம் மட்டுமே கவலை கொள்ளும் ஐ.நா, இத்தாக்குதல்கள் குறித்தெல்லாம் வெறும் ஒரு பார்வையாளராகவே இருந்து வருவதாக உலகளவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

https://www.thinakaran.lk/2019/08/09/கட்டுரைகள்/38468/ஓரங்கட்டப்படும்-ஆதிவாசிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.