Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Featured Replies

மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி இன்று திங்கட்கிழமை  மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

01__9_.JPG

 

கிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூயடி சிங்கள தமிழ் மதகுருமார் மற்றும் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முனைவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு புணாணைப் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் நிருமானிக்கப்பட்ட பல்லைக்கழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும்.

தோழிற்பயிற்சி நிலையமொன்றினை ஆரம்பிப்பதாக கூறி தான் தலைவராக நிருவகிக்கும் ஹிரா நிறுவனத்தினூடாக பெற்றிகலோ கம்பஸ் என்ற பெயரில் ஷரியா பல்கலைக்கழகமொன்றை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கோட்பாடு ஷரியாசட்டம் அரபிய மொழி, கலாசாரம் ஆகியவற்றை கற்பிப்பதன் மூலம் இலங்கையை யுத்த பூமியாக மாற்றும் மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலையாக இதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் இதனை உடனடியாக தடை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவோம், கிழக்கு மாகாணத்தின் மக்களை முஸ்லீம் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்போம், போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

01__11_.JPG

 

01__3_.JPG

 

01__1_.JPG

https://www.virakesari.lk/article/62949

 

  • கருத்துக்கள உறவுகள்

அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

thera.jpg

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் மட்டக்களப்பு புணானையில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தலைமையில் மட்டக்களப்பு நகரில் குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது.

l.jpg

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பௌத்த பிக்குகள், மத குருமார்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

k.jpg

j.jpg

g.jpg

f.jpg

e.jpg

d.jpg

c.jpg

b.jpg

a.jpg

 

 

https://www.virakesari.lk/article/62974

  • கருத்துக்கள உறவுகள்

என் புத்திமதி கேட்டால் நீங்க நல்லா இருப்பிங்க! இல்லாடி நாசமாக போங்க ! கருணா அறிவுரை

_21254_1566324379_7AE96CB5-7CBA-4DE8-8FEE-4FA0BF209530.jpeg

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் பயங்கரவாததை முற்றாக நீக்குவதற்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிவேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாட்டின் பாதுகாப்பு கருதி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹிஸ்புல்லாவினால் புனாணையில் நிருமானிக்கப்பட்டுவரும் பல்லைக்கழகத்தை அரச உடமையாக்க கோரி திங்கட்கிழமை (19) மட்டக்களப்பு கிரானில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்லைக் கழகத்தில் முஸ்லிம்களின் தத்துவங்கள் அவர்களது சட்டங்கள் மாத்திரமே போதிக்கப் போகிறார்களே தவிர இது ஒரு பல்லைக் கழகமாகவோ அல்லது தொழில்நுட்ப கல்லூரியாகவோ இயங்கப்போவதில்லை.

கடந்த ஏப்பிறல் மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குததில் அதிகமாக தமிழ் மக்களே கொல்லப்பட்டுள்ளார்கள். மைத்திரிபால ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நம்பி தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் அவர்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. இவர்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக முஸ்லிம் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்கதலில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தரப்பு வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷவை வேட்பாளராக அறிவித்துள்ளார். அவரை ஜனாதிபதியாக்க வேண்டும்.

ஏப்பிரல் மாதம் நடைபெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்கள் தமிழர்கள். இவ்வாறான பங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கும் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஸ்ரீம் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் கோட்டாபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக வேண்டும்.

கோட்டபாய ராஜபக்ஷ யுத்தத்தை முன்னின்று முடித்தவர் யுத்த குற்றவாளி என பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்படுகின்றன. யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சீருடை தரித்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு கூறினார்கள். யுத்தத்தினை நடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களிக்க முடியுமானால் ஏன் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க முடியாது.

தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது மக்கள் விடுதலை முன்னணி அவர்களுடைய வேட்பாளரை அறிவித்துள்ளார்கள். எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது இதை உணர்ந்துகொண்டு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

 

http://www.battinaatham.net/description.php?art=21254

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.