Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..!

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர். 

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை தேர்தல் ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல் உச்­ச­ம­டைந்­தி­ருக்­கி­றது.

இந்­த­ நி­லையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிடப் போகும் பிர­தான வேட்­பாளர் யார் என்­பதே, இப்­போது முதன்­மை­யா­னதும் பிர­தா­ன­மா­ன­து­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

ஏனென்றால், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள், ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பது இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. 

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவா, சஜித் பிரேம­தா­ஸவா, கரு ஜய­சூ­ரி­யவா அல்­லது பசில் ராஜபக் ஷ கூறு­வது போல, இவர்கள் மூவரும் அல்­லாத இன்­னொரு சவால்­மிக்க வேட்­பா­ளரா என்ற கேள்­வியே இப்­போது ஊட­கங்­களின் கவ­னிப்­புக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கி­றது.

இந்தப் பர­ப­ரப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்டே இருந்­தாலும், ஐ.தே.க.வின் தலை­வர்கள்  ஒன்றும் அவ­ச­ரப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. 

virakesari.jpg

தமக்­கி­டையில் உள்ள முரண்­பா­டு­களை ஜன­நா­யக ரீதி­யான போட்­டி­யாக காட்டிக் கொள்­கின்­றனர். அதில் ஒரு வகை­யான நியா­யமும் இருக்கத் தான் செய்­கி­றது.

எவ்­வா­றெனின், இலங்கை, இந்­தியா போன்ற நாடு­களின் ஜன­நா­ய­கத்தில் தான், கட்­சி­களின் தலை­வர்கள் ஆயுள் காலம் வரை அல்­லது ஆட்சிக் கவர்ச்சி இழக்கும் வரை, அர­சி­யலில் நீடிப்­பதும் -உயர் பத­விக்குப் போட்­டி­யி­டு­வதும் வழக்­க­மாக இருக்­கி­றது.

ஆனால், மேற்­கு­லக ஜன­நா­ய­கத்தில் நிலைமை அவ்­வா­றில்லை. கட்­சி­களின் தலைமைப் பத­வியை துடிப்­புள்ள தலை­வர்­களும், ஆற்றல் கொண்­ட­வர்­களும் அடிக்­கடி நிரப்­பு­கின்­றனர். தகை­மை­யற்­ற­வர்கள் அர­சியல் அரங்­கி­லி­ருந்து வெளி­யே­று­கின்­றனர்.

பிரித்­தா­னிய அர­சி­யலில் இருந்து டோனி பிளேயர் வெளி­யே­றிய போது அவ­ருக்கு 54 வயது, தான்.

தேர்­தல்­களில் தோல்­வி­ய­டையும் போது, அர­சி­யலை விட்டு அவர்கள் வில­கு­கின்­றனர். மீண்டும் மீண்டும் போட்டிக் களத்­துக்கு வரு­வ­தில்லை. அதை­விட, வாரிசு ரீதி­யாக தலைமைப் பத­வி­களைக் கைப்­பற்­று­வ­து­மில்லை.

அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடக்க முன்னர், குடி­ய­ரசுக் கட்­சி­யிலும், ஜன­நா­யக கட்­சி­யிலும் யார் வேட்­பாளர் என்­பதை தீர்­மா­னிக்கும் வாக்­கெ­டுப்­புகள் நடக்கும். அதில் யார் வேண்­டு­மா­னாலும் போட்­டி­யி­டலாம். கட்­சிக்குள் பல­மான ஆத­ரவை நிரூ­பிப்­பவர், ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­டுவார்.

அது­போல பிரித்­தா­னியா போன்ற நாடு­களில் பிர­தமர் பத­விக்­கான போட்­டி­யிலும் உட்­கட்சி தேர்தல், வாக்­கெ­டுப்பு எல்லாம் சகஜம்.

அண்­மையில் பிரித்­தா­னிய பிர­தமர் தெரெசா மே பதவி வில­கிய போது, பிர­தமர் பத­விக்கும் கொன்­சர்­வேட்டிவ் கட்­சிக்குள் 12 பேர் போட்­டி­யிட்­டனர். அவர்­க­ளுடன் போட்­டி­யிட்டே பொறிஸ் ஜோன்சன் பிர­த­ம­ரா­கவும் கட்­சியின் தலை­வ­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார்.

அவ்­வா­றா­ன­தொரு போட்டிக் களத்­துக்குள் தான், ஐக்­கிய தேசியக் கட்­சியும் நுழை­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.

கடந்த காலங்­க­ளிலும் ஜனா­தி­பதி பத­விக்­காக ஐ.தே.கவுக்குள் முரண்­பா­டுகள் போட்­டிகள் இருந்­தி­ருக்­கின்­றன.

குறிப்­பாக, 1988 ஜனா­தி­பதித் தேர்­தலில், ரண­சிங்க பிரே­ம­தாஸ, காமினி திச­நா­யக்க, லலித் அத்­துலத் முதலி என மூன்று முக்­கிய தலை­வர்கள் ஜனா­தி­பதி பத­வியைக் குறி­வைத்­தி­ருந்­தனர்.

அந்தப் போட்­டியில் ரண­சிங்க பிரேம­தா­ஸவே வெற்றி பெற்று, தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.

அதற்குப் பின்னர், ஐ.தே.கவுக்குள் ஜனா­தி­பதி பத­விக்­காக காமினி திச­நா­யக்­க­வு­டனும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் யாரும் போட்­டி­யி­ட­வில்லை. 1994இல், காமினி திச­நா­யக்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்ட நிலையில், குண்டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்டார்.

அதற்குப் பின்னர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பெரும் சவா­லான தலை­வர்கள் யாரும் உரு­வா­க­வில்லை.

எனினும், ஐ.தே.கவின் தலைமைப் பத­விக்­காக சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் ரணில் விக்கி­ர­ம­சிங்க அடிக்­கடி மோதிக் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது, அதனை அவர் வெற்­றி­க­ர­மா­கவே சமா­ளித்து வந்தார்.

இப்­போது ஐ.தே.கவுக்குள் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக எழுந்­தி­ருக்­கின்ற முரண்­பா­டு­களை, தீர்ப்­பது கடி­ன­மா­ன­தொரு முயற்­சி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

வெளியே இருந்து பார்த்துக் கொண்­டி­ருக்கும் ஐ.தே.க ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும், பங்­காளிக் கட்­சி­க­ளுக்கும், ராஜபக் ஷ எதிர்ப்பு அணி­யி­ன­ருக்கும் இது பதற்றம் நிறைந்த ஒரு விளை­யாட்­டாக இருக்­கி­றது.

இந்த விளை­யாட்டில் யார் வெற்றி பெறப் போகிறார் என்­பதை விட, அவரால் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைப் பெற­மு­டி­யுமா என்­பதே பல­ரதும் கவ­லை­யாக உள்­ளது.

தேர்­தலில் வெற்­றி­பெற முடியும் என்ற நிலை இருந்தால் தான், போட்­டி­யி­டுவேன் என்றும் இல்­லையேல் ஒதுங்கி விடுவேன் என்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கிறார்.

அவர் தனது ஆர்­வத்தை பகி­ரங்­க­மாக கூறவும் முடி­யாமல், அடக்­கவும் முடி­யாமல் தவிக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர். 

சஜித் பிரே­ம­தாஸ, தனது விருப்­பத்தைக் கூறி­விட்டார். கண்­டிப்­பாக போட்­டி­யி­டுவேன் கட்சி அதற்கு அனு­ம­திக்கும் என்­கிறார். 

அவ­ருக்கு அடி­மட்ட மக்­களின் ஆத­ரவு இருந்­தாலும், நகரப் புறங்­க­ளிலும், சிங்­கள பௌத்த உயர்­மட்­டங்­க­ளிலும் ஆத­ரவு குறைவு. சிறு­பான்­மை­யின மக்­களின் கவ­னத்தை கவரக் கூடிய தலை­வ­ராக அவர் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இப்­போது கரு ஜய­சூ­ரிய தானும் களத்தில் இருக்­கிறேன் என்று கூறி­யி­ருக்­கிறார். அவ­ருக்கு பௌத்த பீடங்­களின் ஆத­ரவு இருப்­ப­தாக தெரி­கி­றது. அத்­துடன் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டி­யவர் என்ற வகையில் மக்­களின் ஆத­ரவு பெற்ற ஒரு­வ­ரா­கவும் இருக்­கிறார்.

இவர்கள் மூவரில் இருந்து யாரேனும் ஒருவர் தான் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க முடியும். இவர்­களில் ஒரு­வரை ஐ.தே.க செயற்­கு­ழுவும் பாரா­ளு­மன்றக் குழுவும் தான், வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்யப் போகி­றது.

இந்தப் போட்­டியில், சஜித் பிரே­ம­தாஸ முன்­ன­ணியில் இருப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அல்­லது கரு ஜய­சூ­ரி­யவோ வெற்­றியைப் பெற்­றாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

இர­க­சிய வாக்­கெ­டுப்பில் எதுவும் நடக்­கலாம் என்ற நிலை இருக்­கி­றது, இது பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம் அல்ல. அதற்கு அப்பால் தான் பிரச்­சி­னையே இருக்கப் போகி­றது.

உட்­கட்சி வாக்­கெ­டுப்பின் மூலம் தெரி­வாகக் கூடிய ஜனா­தி­பதி வேட்­பா­ளரால், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு முழு அள­வி­லான போட்­டியைக் கொடுக்க முடி­யுமா என்­பதே அந்தக் கேள்வி. முழு அள­வி­லான போட்­டியைக் கொடுப்­பது என்­பது, தனியே அந்த வேட்­பா­ளரின் பின்­னணி, ஆத­ரவுத் தளம், என்­ப­ன­வற்­றினால்  மாத்­திரம் தீர்­மா­னிக்­கப்­படும் விடயம் அல்ல. அவ­ருக்கு கட்­சிக்குள் கிடைக்கக் கூடிய ஒத்­து­ழைப்பும் மிக அவ­சி­ய­மா­னது,

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவேன் என்று அறி­வித்து விட்ட சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­டா­விட்டால், அவர் வேறொரு கட்­சியில் கள­மி­றங்கக் கூடும் என்­றொரு வதந்­தியும் உள்­ளது.

குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியைத் தோற்­க­டிப்­ப­தற்கு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி  அவரைப் பயன்­ப­டுத்திக் கொள்ளக் கூடும் என்­றொரு கருத்தும் உள்­ளது.

ஐ.தே.கவில் இருந்து வில­கிய போது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினால், சஜித்­துக்கு ஆத­ர­வ­ளிப்­பது குறித்து பேசத் தயார் என, தூண்டில் போட்­டி­ருக்­கிறார்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் வீர­கு­மார திச­நா­யக்க.

ஆனால், ஐ.தே.கவில் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட வாய்ப்புக் கிடைக்­கா­விட்டால். இன்­னொரு கட்­சியில் சென்று போட்­டி­யி­ட­மாட்டேன் என்று சஜித் பிரே­ம­தாஸ கூறியிருக்கிறார்.

இது கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஆறு­தலைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில், இப்­போது எழுந்­துள்ள நெருக்­க­டியை எவ்­வாறு சமா­ளிக்கப் போகி­றது என்­பது முக்­கி­ய­மான எதிர்­பார்ப்­பாக மாறி­யி­ருக்­கி­றது,

வரும் நாட்­களில் ஐ.தே.க மூன்று துண்­டு­க­ளாக உடையும் என்று மஹிந்த அணி­யினர் கூறி வந்­தாலும், அந்தக் கட்­சிக்குள் காணப்­படும் ஒரு­வித இணக்க மனோ­நிலை, அவ்­வா­றான ஒரு நிலை தவிர்க்­கப்­படும் வாய்ப்­புகள் உள்­ள­தையே வெளிக்­காட்­டு­கி­றது,

ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிக சோத­னை­யாக கட்­டங்­களைத் தாண்டி தலைமைப் பத­வியைத் தக்­க­வைத்துக் கொண்­டவர். இந்த முறை அவ­ரது பிரச்­சினை தலை­மைத்­துவம் மாத்­திரம் அல்ல. கட்­சி­யையும் பாது­காக்க வேண்­டி­யது.

இந்த வாய்ப்பை அவரோ அவ­ரது கட்­சி­யி­னரோ தவ­ற­விட்டால், இன்னொரு வாய்ப்புக்காக அவர்கள் பல காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். 

-சத்­ரியன் 

 

https://www.virakesari.lk/article/65324

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.