Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.jpg

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 529 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அதேபோன்று தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றிருந்தனர்.

இரண்டாயிரத்து 995 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புலமைப்-பரிசில்-பரீட்சை-3/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Scholarship-Exam.jpg

மட்டக்களப்பில் இம்முறை அதிக மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 53 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளனர்.

அத்துடன் ஒரு மாணவர் 193 புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதேபோன்று பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன் ப.பவுஸ்தினி என்னும் மாணவி 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இதேபோன்று களுதாவளை மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

http://athavannews.com/மட்டக்களப்பில்-இம்முறை-அ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-St.John-Boscos-Vidyalaya.jpg

யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் 171 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

யாழ்ப்பாணம், புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 258 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இதில் 171 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

அத்தோடு பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 194 புள்ளிகளை கேசவன் தர்ஷன் என்ற மாணவன் பெற்று தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் 50 வீதமான மாணவர்கள் சித்தி அடைந்ததாகவும், இம்முறை 66 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து உள்ளதாகவும் கல்லூரி அதிபர் தெரிவித்தார்.

பரீட்சை முடிவுகளை www.results.exams.gov.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/யாழ்-பொஸ்கோ-வித்தியாலயத/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

jaffna.jpg

தரம் 5 புலமைப்பரிசில்: யாழில் சாதனை படைத்த மாணவனின் எதிர்கால இலட்சியம்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆருஷன்,  2019ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழில் சாதனை படைத்த குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கையில், “தந்தை, தாய் இருவரும் மருத்துவர்கள். அவர்களின் வழியில் தானும் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கடந்த கால வினாத்தாள்களை செய்துகொள்ளுவன். புரியாதவற்றை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்

பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை அன்றைய தினமே மீளக் கற்றுக்கொள்வேன். இதுவே எனது சிறந்த பெறுபேற்றுக் காரணமாக அமைந்தவை. என்னை வழிப்படுத்திய பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்” என்று மாணவன் ஆருஷன் தெரிவித்தார்.

பரீட்சை முடிவுகளை www.results.exams.gov.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/தரம்-5-புலமைப்பரிசில்-யாழ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.