Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தனை 'வெள்ளையடிப்பு' செய்த இலங்கை

Featured Replies

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

EGc64PcW4AIXxJR__1_.jpg

பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது.

இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் 148 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாகர் சமான் டக்கவுட்டுடனும், பாபர் அசாம் 27 ஓட்டத்துடனும், ஹரிஸ் சொஹெல் 52 ஓட்டத்துடனும் சப்ராஸ் அஹமட் 17 ஓட்டத்துடனும், இமாட் வஸிம் 3 ஓட்டத்துடனும், அஷீப் அலி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க இப்திகார் அஹமட் 17 ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வசிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை இலங்கை அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/66559

  • தொடங்கியவர்

தி20 இல் பலமான பாகிஸ்தான் அணியை வீழ்ந்துள்ள இளம் அணியினர்.

  • தொடங்கியவர்

பாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் - தேவராஜன் கருத்து

வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றிக் கொண்டுள்ளமையானது, இலங்கை கிரிக்கெட் சபைக்கே சவாலாக மாறியுள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த பல வருடங்களாக பின்னடைவை சந்தித்த வந்த நிலையில், மூத்த வீரர்கள் இன்றி ஒரு சாதனையை இளம் வீரர்கள் படைத்துள்ளமையானது வரவேற்கக்கூடிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இளம் வீரர்கள் இவ்வாறான சாதனையை படைத்துள்ளமையை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாரிய சவால்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திறமையான வீரர்கள் அணிக்குள் இருக்கின்றமையை அறிந்தும், அவர்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தெரிவு செய்யாதது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள்ளேயே கேள்விகள் எழுப்பப்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இனிவரும் காலங்களில் மூத்த வீரர்களும், இளம் வீரர்களை கண்டு அஞ்சுவதற்கான சாத்திம் ஏற்பட்டுள்ளதாக நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.

உலகக் கோப்பை போட்டிகளுக்கு இவ்வாறான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், இலங்கை அணி வெற்றியீட்டியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எதிர்வரும் 10 வருடங்களுக்கான இலங்கை அணி தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனி இலங்கை அணி குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் நல்லையா தேவராஜன் குறிப்பிடுகிறார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20-20 கிரிக்கெட் போட்டிகளை கொண்ட தொடர் கடந்த 27ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10 வருடங்களாக நடைபெறவில்லை.

இந்த நிலையில், 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணை மீண்டும் இலங்கை அணி சென்றடைந்தது.

எனினும், இலங்கை அணி இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை மாத்திரமன்றி சர்வதேச அளவில் இது ஒரு பாரிய சர்ச்சையாக காணப்பட்டது.

பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த நிலையில், இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தை புறக்கணித்திருந்தனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தமக்கு இந்த போட்டியில் விளையாட முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுபவம் குறைந்த வீரர்களுடனான அணியொன்றை தெரிவு செய்து, பாகிஸ்தான் விஜயத்தை எதிர்கொள்ள தயாரானது.

இதற்கமைய பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி சர்வதேச ஒரு நாள் போட்டியில் தோல்வியை சந்தித்த போதிலும், 20-20 கிரிக்கெட் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்றால் மாத்திரம் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே அனுப்பி வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.

எனினும், இந்த அணி உலக சாதனையை படைக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கை 20-20 அணித் தலைவர் தசுன் ஷானக்க மிக திறமையான முறையில் அணியை வழிநடத்தியதாகவும், அவருக்கு கீழ் விளையாடிய அனைத்து வீரர்களும் சிறந்த முறையில் தலைமைத்துவத்திற்கு கீழ்படிந்து போட்டியை எதிர்கொண்டதாகவும் நல்லையா தேவராஜன் தெரிவிக்கிறார்.

பாகிஸ்தான் மண்ணில் வைத்தே பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரொன்றை வெற்றி கொண்ட அணியாக இலங்கை அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49988867

1 minute ago, ampanai said:

திறமையான வீரர்கள் அணிக்குள் இருக்கின்றமையை அறிந்தும், அவர்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தெரிவு செய்யாதது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள்ளேயே கேள்விகள் எழுப்பப்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இனிவரும் காலங்களில் மூத்த வீரர்களும், இளம் வீரர்களை கண்டு அஞ்சுவதற்கான சாத்திம் ஏற்பட்டுள்ளதாக நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்

இந்த கருத்தை ஆதரிக்கின்றேன். இவ்வாறான நிலைமை இலங்கையில் மட்டுமல்ல பல நாடுகளில் கூட உள்ளது. ஆனால், ஒப்பீட்டளவில் மேற்கைத்தைய நாடுகளில் ' விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை' கொஞ்சம் அதிகம்.
 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

பாகிஸ்தானை தோற்கடித்த இளம் சிங்கங்களுக்கு பெருந்தொகை பணம்

(நெவில் அன்தனி)

சர்வதேச இருபது கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக (3-0) வெற்றிகொண்டு தங்களது அற்புத ஆற்றல்களால் தேசத்துக்கு புகழும் பெருமையும் ஈட்டிக்கொடுத்த இளம் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மொத்தமாக 145,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

EGhxnOgUUAARvCU.jpg

இதில் இருபது 20 கிரிக்கெட்டில் ஈட்டிய ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 15,000 அமெரிக்க டொலர்கள் ஊக்குவிப்புத் தொகை அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெகுமானத்தை வென்ற இருபது 20 கிரிக்கெட் வீரர்களில் பலர் இலங்கை அணியில் தமது இருப்பை உறுதிசெய்வதற்கான வாயிலைத் திறந்துகொண்டதுடன் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தான் செல்ல மறுத்த பத்து வீரர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியும் பலம்வாய்ந்த அணியுமான பாகிஸ்தானை முழுமையாக வெற்றிகொண்ட தசுன் ஷானக்க தலைமையிலான அணியில் இடம்பெற்று அபரிமிதமாகப் பிரகாசித்த வீரர்களைக் கொண்டு புறம்பான இருபது 20 இலங்கை அணியை அமைக்கும் திட்டம் உள்ளதா என தெரிவுக் குழுத் தலைவர் அஷன்த டி மெல்லிடம் பிரத்தியேகமாகக் கேட்டபோது, அது குறித்து ஆழமாக சிந்தித்து வருகின்றோம் என பதிலளித்தார்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமைய கேட்போர்கூடத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னரே எமது பிரத்தியேகக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

"பாகிஸ்தானில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆறு பேருடன் இன்னும் சில வீரர்கள் எம்மைப் பெரிதும் கவர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் சர்வதேச அரங்கில் விளையாடுவதை நான் முதல் தடவையாக பார்வையிட்டேன். இத்தகைய ஆற்றல்களும் அர்ப்பணிப்புத் தன்மை நிறைந்தவர்களும் இதற்கு முன்னர் இலங்கை அணிக்குள் ஈர்க்கப்படாதது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. நான் கடந்த ஒரு வருடமாகத்தான் தெரிவுக் குழுவில் இடம்பெறுகின்றேன். சிரேஷ்ட வீரர்கள் பத்து பேர் பாகிஸ்தான் செல்ல மறுத்ததாலேயே இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிப்பிடித்துக்கொண்டார்கள். அவுஸ்திரேலியாவுக்கான இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு இந்த வீரர்களுடன் மூன்று சிரேஷ்ட வீரர்களை இணைக்க எண்ணியுள்ளோம். மேலும் இருபது 20 வகை கிரிக்கெட்டுக்கு என தனியான ஓர் அணியை உருவாக்குவது குறித்தும் ஆழமாக சிந்தித்து வருகின்றோம்" என அஷன்த டி மெல் தெரிவித்தார்.

அதற்கு முன்பதாக ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அஷன்த டி மெல், "சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தபோது புதியவர்கள் பிரகாசித்தால் நீங்கள் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என அவரகளிடம் கூறியிருந்தேன். அந்தப் புதியவர்களும் அற்புதமாக விளையாடிய தத்தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். அதன் மூலம் எம்மிடம் சிறந்த வீரர்கள் பலர் இருப்பது உணர்த்தப்பட்டதுடன் அவர்களிலிருந்து தேசிய அணியைத் தெரிவு செய்யும் நிலை இப்போது தோன்றியுள்ளது. எமது அணியில் பலம் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. ஐந்து மாற்றங்களுடன் கடைசி இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் அது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் தொடர்ந்து வெற்றிகள் ஈட்டுவதைப் பழக்கமாக்கிக்கொண்டால் அவுஸ்திரேலியாவில் நிச்சயமாகத் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றார்.

இதற்கு முன்னர் உரிய வீரர்களைத் தெரிவு செய்வதில் சிக்கலை எதிர்கொண்டதாகவும் தற்போது அந் நிலை மாறியுள்ளது எனவும் அஷன்த டி மெல் தெரிவித்தார்.

"முன்னர் உரிய வீரர்களைத் தெரிவு செய்வதில் சிக்கலை எதிர்கொண்டோம். ஆனால் இப்போது துடுப்பாட்ட வரிசையில் 6 இடங்களுக்கு போட்டித்தன்மை தோன்றியுள்ளது. இளையோருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பற்றிப் பிடித்துக்கொண்டு பிரகாசித்ததன் மூலம் அவர்கள்பால் நான் ஈர்க்கப்பட்டேன். பானுக்க ராஜபக்ஷ, மினோத் பானுக்க, ஓஷாத பெர்னாண்டோ ஆகியோர் உடலாலும் உள்ளத்தாலும் அர்ப்பணிப்புடன் விளையாடினார். மற்றவர்களும் அப்படித்தான். இவர்கள் எல்லோரும் உள்ளூரில் விளையாடுவதைப் பார்த்துள்ளோம். ஆனால், சர்வதேச இருபது 20 அரங்கில் முதல் நிலை அணிக்கு எதிராக அதுவும் அதிவேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணிக்கு எதிராக அவர்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திய விதம் பெரும் பாராட்டுக்குரியது. மேலும் 30, 40 பந்துகளில் ஓட்டங்களைப் பெறமுடியாமல் (டொட் போல்ஸ்) போனாலும் சிக்சர்கள், பவுண்ட்றிகளை விளாசி அவர்கள் அதனை நிவர்த்தி செய்துகொள்கின்றனர். அதுதான் இருபது 20 கிரிக்கெட் அவசியமானதாகும். அத்துடன் பானுக்க ராஜபக்ஷ துடுப்பெடுத்தாடிய விதம் மஹேல ஜயவர்தனவின் துடுப்பாட்டத்தை நினைவுக்கு கொண்டுவந்தது.

"இந்த சுற்றுப் பயணத்தில் அதிகளவில் முன்னேற்றதை வெளிப்படுத்தியவர் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆவார். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் மனஉறுதியுடன் விளையாடியமை அவரது மகத்தான ஆற்றலை வெளிக்காட்டியது. எனவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் விஜயத்துக்கான குழாத்தை தெரிவு செய்யும்போது இந்த வீரர்களின் ஆற்றல்களை கவனத்தில் கொள்வோம்" என்றார் அஷன்த டி மெல்.

https://www.virakesari.lk/article/66652

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.