Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுபான்மை சமூகம்

Featured Replies

muslimindia2.jpg?itok=xF8s2i08

உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர்.

சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் எப்படி உறுதி செய்வது என்பன முக்கிய சவாலாகத் திகழ்கின்றன.

 

இன முரண்பாடுகள்:

பல்லின மக்கள் ஒன்றாக வாழும் போது சில முரண்பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் நால்வரும் நாலுவிதமாக இருப்பர். ஒரு தாய் மக்களுக்கு மத்தியிலேயே முரண்பாடுகள் இருக்கும் போது சமூகங்களுக்கு மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்கும் என்பது சாத்தியமற்றதாகும். எனவே, எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். சில பிரச்சினைகளைச் சகித்துக் கொண்டு சக வாழ்வுடன் பயணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

ஒற்றுமையே பலம்:

சிறுபான்மை சமூகங்களுக்கு அவற்றின் ஒற்றுமைதான் பலமாகும். அல்லாஹ்வின் படைப்பில் எறும்பு, தேன் போன்றவை மிக பலவீனமானவையாகும். இருப்பினும் அவை தமக்கிடையில் உள்ள ஒற்றுமை மூலம் வாழ்ந்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமைதான் அதன் பலமாகும். பிளவுபட்ட பெரும்பான்மையை விட ஒன்றுபட்ட சிறுபான்மை பலமிக்கதாகும் என்பதை எமக்குக் குர்ஆன் கற்றுத் தருகின்றது. ஆனால், இந்த விடயத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகப் பெரும் பின்னடைவில் உள்ளனர். எமக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைக் குர்ஆன், சுன்னா அடிப்படையில் தீர்த்துக் கொள்ள நாம் தயார் இல்லை.

எமக்கு மத்தியில் இனவாதத்தை மிஞ்சிய இயக்க வாதம் உள்ளது! ஒரு இயக்கம் கட்டிய பள்ளியை அடுத்த இயக்கம் காட்டிக் கொடுக்கவும் இடித்து விடவும் கூட துணிகின்றது. ஒரு அமைப்பினர் மீது மற்றொரு அமைப்பு பொய் வழக்குப் போடுகின்றது. உஸாமாவோடு தொடர்பு, அல்காயிதாவுடன் தொடர்பு  என்று பொய்யாகப் போட்டுக் கொடுக்கின்றது. இவ்வாறு ஒருவர் மற்றவருக்குக் குழிபறித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த இழிநிலை நீங்க வேண்டும். முஸ்லிம்-இஸ்லாம் எனும் ஒரு பொதுத் தளத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். பொதுவான இலக்கை நோக்கி அனைவரும் ஒருமுகப்பட்ட மனதுடன் பயணிக்க வேண்டும்.

 

பண்பாடே பலம்:

இஸ்லாத்திற்கென்று குறித்த சில பண்பாடுகள் உள்ளன. அந்தப் பண்பாடுகள் எமது பலமாக இருக்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய இருக்கும் மிகப்பெரும் வாய்ப்பும் வலிமையான வழிமுறையுமாக இந்த பண்பாடுகள் உள்ளன.

கடந்த கால முஸ்லிம்களின் கருணை, காருண்யம், இரக்கம், ஈகை, நம்பிக்கை, நாணயம் என்பவைதான் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம்கள் மீதான மரியாதை மற்றும் பாதுகாப்புகளுக்கான காரணமாகத் திகழ்ந்தன.

இலங்கையில் இஸ்லாம் பரவ முஸ்லிம் வியாபாரிகளின் நாணயம், நம்பிக்கை, நன்னடத்தை போன்றன காரணமாக இருந்தன. மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இஸ்லாத்தை அரவணைக்கவும் இதுவே காரணமாக இருந்தது. இந்த இஸ்லாம் போற்றும் பண்பாடுகள் இஸ்லாத்தை வளர்க்கும் அதே வேளை, முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் இருக்கின்றது.

இந்த இடத்தில் சில இஸ்லாமிய பாண்பாடுகளை இனம்காட்ட விரும்புகின்றோம்.

ஏமாற்றுபவன் முஸ்லிமாக இருக்க மாட்டான்: ‘ஏமாற்றுபவன் எம்மைச் சார்ந்தவன் இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள்

நூல்: முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா

முஸ்லிம்கள் ஏமாற்றும் போக்குள்ளவர்களாக இருக்கக் கூடாது. முஸ்லிம்களை நம்பலாம், அவர்கள் ஏமாற்றமாட்டார்கள் என பிற சமூகம் சொல்லும் அளவுக்கு முஸ்லிம்கள் நாணயமாக நடக்க வேண்டும்.

 

அன்பும் மரியாதையும்:

‘சிறுவர்கள் மீது அன்பு காட்டாதவர் களும் பெரியவர்களை மதிக்காதவர்களும் எம்மைச் சார்ந்தவர் இல்லை’ என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (றழி)   நூல்: திர்மிதி

முஸ்லிம்கள் என்றால் சிறுவர்கள் மீது அன்பு காட்டுவார்கள். பெரியவர்களை மதித்து நடப்பார்கள் என பிற சமூகம் சொல்லும் அளவுக்கு எமது நடத்தை இருக்க வேண்டும்.

இவ்வாறு முஸ்லிம்கள் தமது பண்பாட்டின் மூலமும் நல்ல பழக்க வழக்கங்கள் மூலமும் தனித்துவமாக பிற சமூகங்களால் இனம் காணப்படும் நிலை இருக்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் தம்மை ஆடையாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், கட்டிட அமைப்பினாலும் தனித்துவமாகக் காட்டுவதில் காட்டும் கரிசனையில் காற்பங்கைக் கூட பண்பாட்டில் காட்டுவதில் கவனத்திற் கொள்ளவில்லை.

 

அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

http://www.thinakaran.lk/2019/10/11/இஸ்லாம்/41908/சிறுபான்மை-சமூகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.