Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதம் தாங்கிய குழு பல்கலைக்குள் புகுந்து நடத்திய அத்துமீறலுக்குக் கண்டனம் இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கக் கோரிக்கை

Featured Replies

ஆயுதம் தாங்கிய குழு பல்கலைக்குள் புகுந்து நடத்திய அத்துமீறலுக்குக் கண்டனம் இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கக் கோரிக்கை

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆயு தந் தாங்கிய குழு ஒன்று யாழ். பல்லைக் கழக வளாகத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டியதை பதில் துணைவேந்தரும் பீடாதிபதிகளும் கண்டித்துள்ளனர்.

அமரத்துவம் அடைந்த மாணவர் களின் புகைப்படங்களைச் சேதப்படுத்தி யமை சக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டும் மனிதநேயமற்ற செயற்பாடா கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள னர்.

பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி கள் சகல தரப்புகளிடமும் கோரியுள்ளனர்.

இது சம்பந்தமாக நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது

கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் தமது முகங்களைக் கறுப் புத் துணியால் மறைத்துக்கொண்ட ஆயு தம் தாங்கிய சிவில் உடை தரித்த ஏறத் தாழப் பத்துப் பேர் அடங்கிய குழு வொன்று யாழ்.பல்கலைக்கழக வடக்குப் பக்க மதிலூடாக பல்கலைக்கழக பிரதான வளாகத்துள் அத்துமீறிப் பிரவேசித்துள் ளது.

வடக்கு வாயிலருகே அமைந்துள்ள நீரிறைக்கும் இயந்திர இயக்குநரின் அறை யில் நீரிறைக்கும் இயந்திர இயக்குநரும் வடக்கு வாயில் பாதுகாப்பு உத்தியோகத் தரும் விஞ்ஞான பீடவாயில் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இருந்துள்ளனர். நீரி றைக்கும் இயந்திரம் இயங்கிக் கொண்டி ருந்திருக்கிறது. வளாகத்தினுள் பிரவேசித்த குழு முதலில் இயந்திர இயக்குநரை அழைத்து மிரட்டியுள்ளது. அக்குழுவின் ஒரு பிரிவினர் தண்ணீர் தாங்கியின் மேலே றிப் பார்த்துள்ளனர்.

பின்னர் வடக்கு வாயிலுக்குப் பொறுப் பான பாதுகாப்பு உத்தியோகத்தரை அழை த் துச் சென்ற ஒரு பிரிவினர் பல் கலைக்கழக மாணவர் நிலையத்தைத் திறப்பித்து அங்கு மாடியிருந்த சில அறைகளைத் திறக்க முயற்சிசெய்தபின் ஜன்னல்கள் வழியாக உள்ளே பார்வையிட்டுள்ளனர். பின்னர் மாணவர் நிலைய நுழைவாயி லில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சமீப காலத்தில் அமரத்துவமடந்த பல் கலைக்கழக மாணவர்களின் புகைப்படங் களை உடைத்து நொறுக்கியுள்ளனர். நுழைவாயிலருகே இருந்த அகதிகள் துயர் துடைப்பு நிதி உண்டியலும் உடைக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கினர்

இவற்றை முடித்துக்கொண்டு வெளி யேறுகையில் இக்குழவைச் சேர்ந்த ஒருவர், வடக்கு வாயில் பாதுகாப்பு உத்தி யோகத்தரின் முகத்தில் இரு தடவை கள் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் இவரு டைய மூக்கில் இருந்து சிந்திய இரத்தத் துளிகளை அவ்விடத்தில் காணக்கூடிய தாயிருந்தது.

இந்நிகழ்வுகள் பற்றி யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட் டுள்ளது. பதில் துணைவேந்தரின் அழைப்பை ஏற்று வருகை தந்த யாழ். அரச அதிபர் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களை நேரடியாகப் பார்வையிட்டுச் சென்றார். இச்சம்பவம் பற்றி பலாலி, யாழ்ப் பாணப் பாதுகாப்பு சேவைகள் கட்டளை அதி காரிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வன்மையாகக் கண்டிக்கின்றோம்

பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததையும் கடமையிலி ருந்த ஊழியர்களை மிரட்டியதையும் அவர் களுள் ஒருவரைத் தாக்கியதையும் வன்மை யாகக் கண்டிக்கின்றோம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த, அமரத்துவமடைந்த மாணவர்களின் புகைப்படங்களை சேதப் படுத்தியமை சக மாணவர்களின் உணர்வு களைத் தூண்டும் மனிதநேயமற்ற செயற் பாடாகும்.

குந்தகம் விளைவிக்கும்

இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தி பல்வேறு சாதகமற்ற சூழலின் மத்தியில் மீள ஆரம்பிக்கப்பட்ட யாழ். பல்கலைக் கழக கற்றல் செயற்பாடுகளுக்குக் குந்தகம் விளைவித்துவிடுமென அஞ்சுகின்றோம் ஊழியர்கள் மிரட்டப்பட்டமையும் தாக்கு தலுக்குள்ளாகியமையும் ஊழியரிடையே யும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் யாராயிருப்பி னும் அவர்களை பல்கலைக்கழக செயற் பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய நட வடிக்கைகளைத் தவிர்க்குமாறு விநயமா கக் கேட்டுக்கொள்கிறோம். என்றுள் ளது

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.