Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி

பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ள ஐந்து கட்­சித்­த­லை­வர்­களே அடுத்த கட்­ட­மான மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களைச் சந்­திக்­க­வுள்­ளனர். அவர்கள் கூட்­டுப்­ப­லத்­துடன் ஏற்­பட்­டுள்ள பேரம்­பேசும் சக்­தியை பயன்­ப­டுத்தி அர­சியல் சூழலை சரி­யாக கையாள்­கின்­றார்­களா என்­பதை தொடர்ந்தும் அவ­தா­னித்­துக்­கொண்டே இருப்போம் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் செய­லாளர் எஸ்.பி.எஸ்.பபி­லராஜ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போது தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

virakesari.jpg

கேள்வி:- வடக்கு, கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அர­சியல் கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் முயற்­சி­யினை கையி­லெ­டுத்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- தமக்­கான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வொன்­றினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே தமிழ் மக்கள்  நீண்­ட­ கா­ல­மாக போராடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பல்­வேறு வழி­க­ளிலும் அம்­மக்கள் தமது போராட்­டங்­களை விரி­வு­ப­டுத்தி ஜன­நா­யக ரீதியில் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இச்­சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதித் தேர்­த­லொன்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­கை­ய­தொரு நிலை­மையில் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அர­சியல் கட்­சிகள் வெவ்­வேறு தரப்­புக்­க­ளாக பிள­வு­பட்டு நிற்­பதால் தமிழ் மக்­க­ளுக்­கான பேரம்­பேசும் பலம் இழந்­து­விடும் துர்ப்­பாக்­கிய நிலைமை ஏற்­படும் ஆபத்து உள்­ள­மையை  கூர்ந்து கவ­னித்தோம்.

தமிழ்த் தேசிய அர­சியல் பரப்­பி­லுள்ள கட்­சி­களை ஒன்­றி­ணைத்து தமி­ழர்­களின் பேரம்­பேசும் சக்­தி­யினை பலப்­ப­டுத்தி ஒரு­மித்த முடி­வினை எடுக்க வேண்­டி­யது என்­பது காலத்தின் கட்­டாய தேவை­யாகும் என்­பதை உணர்ந்து கொண்டோம். தற்­போ­தைய சந்­தர்ப்­பத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­க­ளிடம் நாம் நிலை­மை­களை எடுத்­துக்­கூ­றினோம்.  தமிழ் ­த­ரப்­புக்கள் அனைத்தும் தற்­போ­தைய அர­சியல் சூழலை உணர்ந்து கொண்­டன. அத­னை­ய­டுத்தே கலந்­து­ரை­யா­டல்கள் ஆரோக்­கி­ய­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கேள்வி:- பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்ற ஆறு கட்­சி­க­ளி­டை­யேயும் ஆரம்­பத்தில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி பொது நிபந்­த­னை­களைக் கொண்ட ஆவ­ணத்தில் கைச்­சாத்­தி­ட­வில்­லையே?

பதில்:- ஆம், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி முன்­வைத்த கருத்தால் 13ஆம் திகதி நடை­பெற்ற நான்­கா­வது சுற்று கலந்­து­ரை­யாடல் நீண்­டு­கொண்டு சென்­றது. இதனால் அன்­றை­ய­தினம் பொது இணக்­கப்­பாட்டில் கைச்­சாத்­தி­டப்­ப­டா­ம­லேயே கலந்­து­ரை­யாடல் மறுநாள் 14ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

அனைத்து கட்­சி­க­ளையும் இணங்க வைத்து பொது உடன்­பாட்டை கைச்­சாத்­திடும் நோக்­குடன் 14ஆம் திகதி  அன்று மதியம் 1.30இற்கு ஆரம்­ப­மான கலந்­து­ரை­யா­டலின் போது இடைக்­கால அறிக்­கை­யினை நிரா­க­ரிக்க வேண்டும் என்­ப­தனை ஆவ­ணத்தில் உள்­ள­டக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் உறு­தி­யாக இருந்த நிலையில் தமி­ழ­ர­சுக்­கட்சி, புளொட், என்­பன அதனை ஆவ­ணத்தில் உள்­ள­டக்கக் கூடாது என்றும் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கிய உறு­தி­மொ­ழியின் பேரி­லேயே யாப்பு உரு­வாக்க முயற்சி இடம்­பெ­று­கின்­றது. அதனை நாம் குழப்பி விடக்­ கூ­டாது என்­றனர்.

அதே­வேளை ரெலோ தரப்­பினர் தாம் இடைக்­கால வரைபு வந்த போதே அதனை எதிர்த்­த­வர்கள் என்றும் தற்­போ­தைய  நிலையில் அதனை ஆவ­ணத்தில் உள்­வாங்கி தமி­ழ­ரசுக் கட்­சி­யி­ன­ருக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­வ­தனை தவிர்க்க வேண்­டு ­மென்றும் தாம் ஒன்­றாக பய­ணிப்­ப­வர்கள் என்­பதால் இவ்­வி­ட­யத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து இவ் ஆவ­ணத்தில் இடைக்­கால அறிக்கை நிரா­க­ரிப்­பதை உள்­ள­டக்க தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னார்கள்.

தமிழ் மக்கள் கூட்­டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தாம் இடைக்­கால அறிக்­கை­யினை வெளிப்­ப­டை­யாக நிரா­க­ரித்­துள்ள போதும், புதிய யாப்பு உரு­வாக்கம் கைவி­டப்­பட்ட நிலை­யிலும் இவ் ஆவ­ணத்தில் ஒற்­றை­யாட்சி நிரா­க­ரிப்பு என்ற வாசகம் இருப்­பதன் அடிப்­ப­டை­யிலும் இடைக்­கால அறிக்கை பற்றி இவ் ஆவ­ணத்தில் உள்­ள­டக்க வேண்­டிய தேவை இல்லை எனவும் வாதிட்­டனர்.  

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் புதிய யாப்பு உரு­வாக்க முயற்சி தொடர வாய்ப்­புள்­ள­மையை ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் கருத்­துக்­களை குறிப்­பிட்டு முன்­வைத்­தார்கள். அதனால் ஒற்­றை­யாட்சி இடைக்­கால வரைபு நிரா­க­ரிக்க வேண்டும் எனும் தமது நிலைப்­பாட்­டி­லி­ருந்து பின்­வாங்­க ­வில்லை.  

இந்­நி­லையில் விவாதம் நீண்டு கொண்டு செல்­வ­தாலும் இதனை ஓர் முடி­வுக்கு கொண்டு வர வேண்டும் எனும் நோக்­கிலும் அடிக்­கு­றிப்­பி­லேனும் இடைக்­கால அறிக்கை நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி பிரே­ரித்­தது என்று குறிப்­பி­டலாம் என்று கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­கொண்ட சிவில் சமூக தரப்­பி­னரால் ஓர் கருத்து முன்­வைக்­கப்­பட்­டது.

அதனை தமிழ்த் ­தே­சிய மக்கள் முன்­னணி ஏற்­றுக்கொண்ட போதும் ஏனைய கட்­சிகள், அடிக்­கு­றிப்­பினை இடு­வது எம்முள் இணக்­கப்­பாடு இல்லை என்­ப­தனை தெளி­வாக காட்­டு ­மென்­ப­துடன் பொது ஆவணம் பல­வீன­ம­டையும் எனக் கூறி அதனை அடி­யோடு மறுத்­து­விட்­டனர்.

இறு­தி­யாக இடைக்­கால அறிக்கையை நிரா­க­ரித்தல் வேண்டும் என்ற விட­யத்தை ஆவ­ணத்தில் உள்­ள­டக்­காது விடு­வது என்­ப­துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி உட்­பட கட்­சிகள் வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் நாம் ஊடக அறிக்கை ஒன்றின் மூல­மாக பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தென்றும் அனை­வரும் இதனை ஏற்­றுக்­கொண்டு கையொப்­ப­மிட வேண்டும் என்றும் நாம் கூறிய போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் கையொப்­ப­மிட மறுத்­தனர்.

சிவில் சமூ­கத்­தினர் சார்பில் பங்கு கொண்ட மத­கு­ரு­மார்கள் மேற்­கொண்ட சம­ரச முயற்­சிகள் வெற்றி அளிக்­காத நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர்  பொது உடன்­பாட்டில் கையொப்­ப­மிட மறுத்­த­தோடு தமது கவ­லை­யி­னையும் பதிவு செய்து வெளி­யேறி சென்­றனர்.

கேள்வி:- அடுத்த கட்டச் செயற்­பா­டு­களில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் வகி­பாகம் எவ்­வாறு இருக்­கப்­போ­கின்­றது?

பதில்:- கையொப்­ப­மிட்ட ஐந்து கட்­சியின் தலை­வர்கள் அடங்­கிய குழு­வினர் இவ் ஆவ­ணத்தை முன்­னி­றுத்தி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள பிர­தான  மூன்று  வேட்­பா­ளர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­­ப­ட­வுள்­ளனர். அதன் அடிப்­ப­டையில் அடுத்­த­கட்ட நகர்­வுகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்த அர­சியல் தலை­வர்­க­ளி­டத்தில் இவ் விட­யத்­தினை ஒப்­ப­டைத்து பொறுப்பு வாய்ந்த மாண­வர்­க­ளாக நாம் விலகிக் கொண்­டுள்ளோம். கலந்­து­ரை­யா­டல்­களின் முன்­னேற்­றங்­களின் அடிப்­ப­டையில் அர­சியல் கட்சித் தலை­வர்­களே தொடர்ச்­சி­யாக இந்த விட­யத்­தினை கையாள்­வார்கள்.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இரு பிர­தான வேட்­பா­ளர்­களில் எவ­ருமே 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­க­ளினை பெறப்­போவ­தில்லை. அவ்­வா­றான சூழலில் இரண்டாம் விருப்பத் தெரிவு கணக்கில் எடுக்­கப்­பட்டே புதிய ஜனா­தி­பதி தெரி­வு­செய்­யப்­ப­டுவார் என்­ப­தனை கருத்தில் கொண்டு தமிழ் அர­சியல் கட்சித் தலை­வர்கள் இப்­பே­ரம்­பேசும் சக்­தியை பயன்­ப­டுத்தி சூழலை சரி­யாக கையாள்­கி­றார்­களா என்­ப­தனை நாம் தொடர்ந்தும் அவ­தா­னித்த வண்­ணமே இருப்போம்.

கேள்வி:- பொது இணக்கத்திற்கு வந்துள்ள கட்சிகள் வழி தவறினால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பதில்:- அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் வகையில் எம்மாலான  முயற்சிகளை செய்துவிட்டோம். இதனை  மக்கள் முன்னும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். அரசியல் கட்சிகள் இணங்கிக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து மாறுவார்கள் எனில் தாயகவாழ் தமிழ் மக்களே தீர்க்கமான முடிவுகளை சுயாதீனமாக எடுக்கவேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் தலைவர்கள் சரியான முடிவினை எடுக்கும் வகையிலும் அவர்களின் நகர்வுகளினை தொடர்ந்தும் அவதானித்த வண்ணம் இருத்தல் வேண்டும். எம்மினத்தின் அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கான பயணத்தில் தொடர்ந்தும் எம்மாலான பங்களிப்புக்களை செய்துகொண்டே இருப்போம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

நேர்காணல்கள் : ஆர்.ராம்

 

https://www.virakesari.lk/article/67222

இந்த ஆண்டு சமாதானத்திற்கான தமிழ் நோபல் பரிசை கிழக்கு-வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுக்கலாம்.

கேள்வி:- பொது இணக்கத்திற்கு வந்துள்ள கட்சிகள் வழி தவறினால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பதில்:- அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் வகையில் எம்மாலான  முயற்சிகளை செய்துவிட்டோம். இதனை  மக்கள் முன்னும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். அரசியல் கட்சிகள் இணங்கிக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து மாறுவார்கள் எனில் தாயகவாழ் தமிழ் மக்களே தீர்க்கமான முடிவுகளை சுயாதீனமாக எடுக்கவேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் தலைவர்கள் சரியான முடிவினை எடுக்கும் வகையிலும் அவர்களின் நகர்வுகளினை தொடர்ந்தும் அவதானித்த வண்ணம் இருத்தல் வேண்டும். எம்மினத்தின் அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கான பயணத்தில் தொடர்ந்தும் எம்மாலான பங்களிப்புக்களை செய்துகொண்டே இருப்போம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.