Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் உணர்வுகளை மதிக்கின்றாரா டக்ளஸ்? மக்கள் உணர்வுகளை மிதிக்கிறாரா சம்பந்தன் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sham Varathan Sham Varathan 

மக்கள் உணர்வுகளை மதிக்கின்றாரா டக்ளஸ்?

மக்கள் உணர்வுகளை மிதிக்கிறாரா சம்பந்தன் ?

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் என்னை நம்பவேண்டும் , நான் செய்விப்பேன் என்று கோட்டாபாயவுக்காக தமிழர்கள் மத்தியில் மக்கள் ஆணையை கோரினார் டக்ளஸ் தேவானந்தா . ஆனால் வழமைபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் உசுப்பேற்றலுக்கும், ரிஷாட் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அள்ளி வீசிய எச்சிலைக்கும் ஆசைப்பட்ட தமிழர்கள் தாங்கள் எங்கு நிற்கின்றோம் , பெரும்பான்மை மக்களின் மனநிலை என்னவென்று அறியாமல் குருட்டு நம்பிக்கையில் சஜித் பிரேமதாசா வெற்றி பெறுவார் என்று டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை நிராகரித்தார்கள் .

கூட்டமைப்பின் தலைமை சம்பந்தர் அற்ப சலுகைக்காக கோட்டாபாயவிடம் மண்டியிட மாட்டோம் , அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம் என்று மக்களை முட்டாளாக்கி , இரத்தத்தை சூடாக்கி, வெள்ளை வேன் வரும் என்று பூச்சாண்டி காட்டி சஜித் பிரேமதாசாவிற்காக கடுமையாக உழைத்தார்கள். இவர்களின் நரி தந்திரமும் , கபட நாடகமும் புரிந்து கொள்ள முடியாத அப்பாவி மக்கள் கூட்டமைப்பு கைகாட்டியபடி ஆட்டு மந்தைகள் போல் சஜித்துக்கு வாக்களித்து இன்று தனிமைப்படுத்தப்பட்டு நடுவீதியில் நிற்கிறார்கள்.
மக்களை நடுவீதியில் விட்டு விட்டு பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பகைமை தீயை வளர்த்து விட்டு , தாங்கள் மக்களிடம் கோரிய ஆணைக்கு எதிராக தமிழ் தேசியத்தையும் , சமஷ்டி, சுயநிர்ணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு தங்களையும் , தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக , யாரை கொலைகாரன் , கொள்ளைக்காரன் என்று சொன்னார்களோ அதே கோட்டாபாயாவிடம் அமைச்சர் பதவிக்காக மண்டியிட தயாராகியுள்ளார்கள்.
இதே நேரம் தனக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதற்காக டக்ளஸ் தேவானந்தா தனக்கு கிடைக்கவிருந்த அமைச்சர் பதவியை தூக்கி வீசியுள்ளார்.
இங்கு மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது இவை அனைத்தும் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டமைப்பின் நாடகம் என்று. இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு வாராவிட்டால் பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று சொன்ன சுமந்திரன் எந்த முகத்துடன் அமைச்சர் பதவியை கோருவார்? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுத்தால் அரசியல் தீர்வு பாதிக்கும் என்ற சம்மந்தன் எவ்வாறு அமைச்சர் ஆவார்?

இங்கே யார் மக்களுக்கானவர்கள் என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Image may contain: 1 person
Image may contain: 1 person, closeup
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.