Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange

p07vbwnk.jpg
 
'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழுப்புணர்வு ஏன் முக்கியம்? #iamthechange

(Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 14வது அத்தியாயம் இது.)

தானத்தில் புதிய தானம், 'ஸ்டெம்செல் தானம்'. இன்றைய சூழலில் இதுவே மிக சிறந்த தானம் என்கிறார் கோவையை சேர்ந்த, இந்தியாவின் உறவின்முறை இல்லாத முதல் பெண் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் (Non-Related, First Female Bone Marrow Donor in India) மாசிலாமணி.

கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்த பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில், அவர் வாழ்ந்து வந்த பகுதியிலேயே வசித்து வந்த கவியரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

இவர்களுக்கு 6 வயதில் மதிவதனி எனும் பெயர் கொண்ட மகளும், 2 வயதில் நீலவேந்தன் எனும் பெயர் கொண்ட மகனும் உள்ளனர்.

மாசிலாமணி Image captionமாசிலாமணி

மதிவதனி பிறந்த ஆறு மாதத்தில் அவளுக்கு தலசீமியா என்கிற ஹீமோகுளோபின் குறைபாடு நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

Presentational grey line

iamthechange தொடரின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க:

“எம்மதமும் சம்மதமில்லை” - சாதி,மதமற்றவர் என சான்றிதழ் பெற்றவர் கூறுவது என்ன?

Presentational grey line

இதனால் அன்று முதல் குறைந்தது மாதந்தோறும் ஒருமுறை ரத்தமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

'ஸ்டெம்செல்' தானம்

சென்னை சேர்ந்த மருத்துவரான ரேவதிராஜ் அறிவுறுத்தல்படி, 'ஸ்டெம்செல்' சிகிச்சை எடுக்கும் முயற்சியை முன்னெடுத்தனர்.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மகள் மதிவதனிக்கு தாய், தந்தை, தம்பி என உறவினர்கள் எவருடைய குருத்தணு பொருந்தவில்லை.

அதனால் கொடையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக பதிவு செய்ய சென்ற மாசிலாமணி மற்றும் அவரது கணவர் கவியரசன் என இருவரும் தங்களையும் கொடையாளர்களாக பதிவு செய்து கொண்டனர்.

இது நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு, மாசிலாமணியிடமிருந்து 3 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நன்கொடை தேவைப்படுகிறது என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது குழந்தைக்கு இத்தனை ஆண்டுகளாக நன்கொடை கிடைக்கவில்லையே என்று காத்திருந்த அவர், குடும்பம் மற்றும் சுற்றம் காட்டிய எதிர்ப்புகளையும் மீறி கணவரின் ஒத்துழைப்போடு எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்துள்ளார்.

'ஸ்டெம்செல்' தானம்

இந்தியாவில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்த பெண் என்கிற பெருமை எனக்கு கிடைத்திருப்பதை காட்டிலும், தன்னால் ஒரு குழந்தையின் உயிரை காக்க முடிந்ததையே தான் பெருமையாக கருதுவதாக கூறுகிறார் மாசிலாமணி.

உலகத்தில் பல கோடி கணக்கானவர்கள், தன்னை போன்ற கொடையாளர்களுக்காக காத்திருப்பதாக கூறும் இவர், இதற்காகவே தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் 'ஸ்டெம்செல்' தானம் குறித்தான முக்கியத்துவம் தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் செய்கிறேன் என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-50465481

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.