Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க கடற்படைத்தளத்தில் துப்பாக்கி சூடு - 4 பேர் பலி

Featured Replies

அமெரிக்க கடற்படைத்தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்ஸாகோலா என்ற இடத்தில் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த இந்தத் தளத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அங்கிருந்த கடற்படை வீரர்கள் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தனர்.

கடற்படை வீரர்கள் உடனடியாக அந்த நபரை சுட்டுக் கொன்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வீரர்கள் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

https://www.polimernews.com/dnews/91714/அமெரிக்ககடற்படைத்தளத்தில்துப்பாக்கி-சூடு---4-பேர்-பலி

 

 

 

  • தொடங்கியவர்

அமெரிக்க கடற்படை தளத்தில் சவுதி அரேபிய அதிகாரி துப்பாக்கி பிரயோகம் - பயங்கரவாத நோக்கமா என விசாரணை

அமெரிக்காவின் புளோரிடாவில் கடற்படைதளத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிசூட்டுசம்பவத்தில்  நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவை சேர்ந்த  விமானப்படை அதிகாரியொருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது தாக்குதலை மேற்கொண்டவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

pensacola-shooter-.jpg

 

பயிற்சிகளிற்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையிலேயே சவுதிஅரேபிய அதிகாரிதுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

உடனடியாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பென்சகோலா என்ற இடத்தில் உள்ள கடற்படை தளத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சவுதிஅரேபியாவிற்கு நீண்டகாலமாக வழங்கப்படும் பயிற்சிகளில்  ஒரு பகுதியாக இடம்பெற்றுவந்த பயிற்சியில் மேலும் பல சவுதி அரேபிய கடற்படையினருடன் இந்த அதிகாரியும் கலந்துகொண்டிருந்தார் என  அமெரி;க்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர் ஒருவர், சவுதி அரேபியாவின் விமானப்படை அதிகாரியொருவர், எங்கள் மண்ணில் பயிற்சிக்காக வந்தவர் இந்த  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பல கேள்விகள்எழக்கூடும்  என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வகுப்பறையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் முகமட் சயீட் அல்சம்ரனி என இனம்காணப்பட்டுள்ளார் என பொக்ஸ்நியுசிற்கு தெரிவித்துள்ள  அதிகாரிகள் இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவமா என்ற அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் காணப்பட்ட ஆறு சவுதிஅரேபியர்களை விசாரணை செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/70603

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.