Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டுச் சகோதரர்களுடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்

Featured Replies

அண்டை நாடான இந்தியாவின் பக்கத் துணையின்றி இலங்கைத் தமிழ் மக்கள் விமோசனம் பெற முடியாதென்பது வெளிப்படையான உண்மை.

இந்த உண்மையை தமிழ் மக்கள் ஒரு போதும் மறந்தவர்கள் அல்ல.

இலங்கையில் தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதிகள் துவம்சம் செய்த போதெல்லாம் இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே ஈழத்தமிழர்களிடம் இருந்தது. அதேபோன்று இந்தியாவும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தது.

இவ்வாறானதொரு நெருக்கமான உறவுக்குத் தமிழகத்துச் சகோதரர்களும் இந்து சமயத்தின் ஞானபூமியாக இந்தியா இருப்பதும் காரணமாயிற்று. இவைதவிர இலங்கை - இந்திய உறவு என்பது ஈழத் தமிழர்களினூடாக ஏற்பட்ட உறவு என்பதும் இங்கு நோக்குதற்குரியது.

எனவே இந்திய தேசத்தினதும் ஈழத் தமிழர் களதும் உறவு ஒருபோதும் பிரிக்க முடியாதவை.

இவை ஒருபுறமிருக்க, இந்தியாவுடனான உறவை ஈழத் தமிழர்கள் வலிமைப்படுத்துவது மிகவும் அவசியமானது.

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கான ஒரே வழி எங்கள் தமிழகத்துச் சகோதரர்களுடன் நெருக்கமான உறவைத் தொடர்ந்தும் பேணிக்கொள்வதாகும். இலங்கைத் தமிழர்களின் உரிமைசார் விடயத்திலும் நலன்சார் விடயங்களிலும் எங்கள் தொப்புள்கொடி உறவான தமிழகத்து மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவ்வாறாக எங்கள் தமிழகத்துச் சகோதரர்களின் கருசனை என்பது அரசியல் கட்சிகள் என்ற எல்லை கடந்து பல பரிமாணங்களில் பரந்து விரிந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதியரசர்கள் அமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுதவிர சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.

இதுபோல தமிழகத்திலுள்ள அநேக அமைப்புகள் எங்கள் மீது மிகுந்த கருசனை கொண்டுள்ளன.

எனவே மேற்குறிப்பிட்ட அமைப்புகளுடன் நாம் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதன் மூலம் மத்திய அரசின் கருசனைக்கு ஆளாக முடியும். ஆதலால் இதுவிடயத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் போன்ற தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்துப் புத்திஜீவிகளுடன் -இராஜ தந்திரிகளுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் எங்களுக்கான புதிய வியூகங்களை அமைக்க முடியும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20087&ctype=news

  • தொடங்கியவர்

சீமானை வெறுக்கலாம் / அணைக்கலாம் ;
கருணாநிதியை தூற்றலாம் / போற்றலாம் ;
எட்டப்படியை வாழ்த்தலாம் / வைச்சு வாங்கலாம் ;

இவர்களுக்கு அப்பால் எமது உறவுகளை மேலும் நாம் வளர்த்தால்,
அங்கும் இங்கும் சரியான தலைமைகள் உருவாக்கப்படும் / உள்வாங்கப்படும் 

அறுபது கோடி உறவுகளே எமது மக்களுக்கு என்றும் பலம் !


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.