Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில் 10 வருடங்களின் பின் முதலாவது டெஸ்ட் போட்டி

Featured Replies

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது.

cricket_pakistan-_srilanka.jpg

பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது.

இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். 

தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, டில்ருவன் பெரேரா, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜித்த, லஹிரு குமார.

12ஆவது வீரர்: லக்ஷான் சந்தகேன்.

பாகிஸ்தான் அணியில் இளம் ஆரம்ப வீரர் அபிட் அலி, வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

பாகிஸ்தான் அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் ஷான் மசூத், அபிட் அலி, பாபர் அஸாம், அசாத் ஷவிக், ஹரிஸ் சொஹெய்ல், முஹம்மத் ரிஸ்வான், முஹம்மத் அபாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, உஸ்மான் கான் ஷின்வாரி. 12ஆவது வீரர்: இமாம் உல் ஹக் ஆகிய வீரர்கள் துடுப்பாட்ட வரிசைகளில் காணப்படுகின்றனர்.

அத்தோடு இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்நிலையில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவிற்கு எவ்வித விக்கெட் இழப்பின்றி  59 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70839

  • தொடங்கியவர்

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாள் முடிவில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 202/5 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 59, ஒஷாட பெர்ணான்டோ 40, தனஞ்சய டி சில்வா ஆ.இ 38, அஞ்சலோ மத்தியூஸ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 2/51, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/37, உஸ்மான் கான் ஷின்வாரி 1/47, மொஹமட் அப்பாஸ் 1/50)

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கைக்கெதிரான-முதலாவது-டெஸ்டில்-முன்னிலையில்-பாகிஸ்தான்/44-242355

  • தொடங்கியவர்

வெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான்  முதலாவது டெஸ்ட்  போட்டி

(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்தது.

20191215113035_193303.jpg

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பத்தரை வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் தனஞ்சய டி சில்வா, பாகிஸ்தானின் அறிமுக வீரர் அபிட் அலி, பாபர் அஸாம் ஆகியோர் குவித்த சதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

20191215111428_272280.jpg

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் டெஸ்ட் கிரிக்pகெட் போட்டியிலும் அறிமுக வீரராக சதங்கள் குவித்த முதலாமவர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் அபிட் அலி உரித்தானமை மற்றொரு விசேட அம்சமாகும்.

துபாய் விளையாட்டரங்கில் இவ் வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக அபிட் அலி 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மேலும், நியூஸிலாந்துக்கு எதிராக டனேடின் விளையாட்டரங்கில் 2009இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் உமர் அகமால் அறிமுக வீரராக சதத்தைப் பூர்த்தி செய்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் பாகிஸ்தானியர் ஒருவர்  அறிமுக வீரராக டெஸ்ட் சதம் குவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, தனஞ்சய டி சில்வா சதம் குவித்த சொற்ப நேரத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

தனஞ்சய டி சில்வா மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 166 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். டில்ருவன் பெரேரா ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் தனஞ்சயவுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இவர்களைவிட திமுத் கருணாரட்ன 59 ஓட்டங்களையும் ஓஷத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்தவீச்சில் ஷஹின் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மொத்த எண்ணிக்கை 2 ஓட்டங்களாக இருந்தபோது தனது முதலாவது விக்கெட்டை (ஷான் மசூத் 0) இழந்தது. எனினும் அபிட் அலியும் அணித் தலைவர் அஸார் அலியும் இரண்டாவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிரந்து பாகிஸ்தானுக்கு தெம்பூட்டினர். 

அஸார் அலி 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் அபிட் அலியும் பாபர் அஸாமும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதங்களைக் குவித்ததுடன் இரண்டாவது விக்கெட்டில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெற உதவினர்.

அபிட் அலி 200 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்ட்றிகள் அடங்கலாக 108 ஓட்டங்களுடனும் பாபர் அஸாம் 122 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்ட்றிகள் அடங்கலாக 102 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பாபர் அஸாம் சதம் குவித்த சொற்ப நேரத்தில் மத்தியஸ்தர்களால் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

20191215100613_988962.jpg

பிண்டி விளையாட்டரங்கில் 15 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மொத்தமாக 166 ஓவர்களே வீசப்பட்டன.

முதலாம் நாளன்று 68.1 ஓவர்கள் வீசப்பட்டதுடன் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பு 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாளன்று 18.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது. அன்றைய தினம் இலங்கையின் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களாக இருந்தது.

தொடரந்து மூன்றாம் நாளன்று 5.2 ஓவர்களே விளையாடப்பட்டதுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை 6 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

வெள்ளியன்று மாலையில் பெய்த கடும் மழை காரணமாக நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை ஒரு பந்துதானும் வீசப்படாமல் போட்டி முழுமையாகக் கைவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவின் தாயாரின் மறைவையொட்டி, அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் இலங்கை வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்தவாறு இன்று விளையாடினர்.

https://www.virakesari.lk/article/71106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.