Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளுக்கு மருத்துவம் வழங்கும் சட்டம் நீக்கம் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளுக்கு மருத்துவம் வழங்கும் சட்டம் நீக்கம்: ஆஸ்திரேலிய முகாம்களில் அகதிகள் நிலை என்ன ?

625.500.560.350.160.300.053.800.900.160.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்குவதற்கு வழிசெய்த ‘மருத்துவ வெளியேற்றச் சட்டம்’ நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம், உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அகதிகளின் நிலைக் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. நவுரு முகாம்களில் உள்ள அகதிகளை, மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியிருந்த நிலையிலும் நவுரு அரசு அகதிகளை செல்ல விடாமல் தடுத்து வந்திருக்கிறது.

தற்போது, இந்த சட்டமே நீக்கப்பட்டதால் அகதிகள் நிச்சயத்தன்மையின்றி நவுருவிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சிவ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஈரானிய அகதி பெண், ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டும் நவுருவால் அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறார்.

உடல்நலக்கோளாறு, நரம்பியல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் சிவ, இந்த சட்டம் நீக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் தன்னைத் தானே எரித்துக்கொள்ள முயன்றிருக்கிறார்.

“இப்போது, மருத்துவ உதவி வழங்கும் சட்டம் நீக்கப்பட்டு விட்டதாக சொல்கின்றனர். பத்து மாதங்களுக்கு முன்னர் எங்கிருந்தேனோ அங்கேயே வலியுடன் சிகிச்சை அளிக்கப்படாத காயங்களுடன் திரும்பியுள்ளேன்,” எனக் கூறியிருக்கிறார் சிவ.

2013ல் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வந்த இவர், நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள 10 பெண் அகதிகளில் ஒருவர்.  

“ஆஸ்திரேலியாவில் என்ன குற்றத்திற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பார்கள் என எனக்குத் தெரியவில்லை,” என்னும் சிவ கடுமையான மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

ஜூலை 2019லேயே ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், மருத்துவ உதவிக்காக இப்பெண்ணை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வர அனுமதி வழங்கியுள்ளார். அதே சமயம், அவர் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவது என்பது நவுரு அரசின் ஒப்புதலை பொறுத்தது எனக் கூறியிருக்கிறது பீட்டர் டட்டன் அலுவலகம்.

Parkinson எனும் வாத நோய்க்கான அறிகுறி இப்பெண்ணுக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையிலும் இந்த நிலையை எதிர்கொண்டு வரும் ஈரானிய பெண், “நான் வாக்குறுதிகளையும் வெற்று வார்த்தைகளையும் நம்பவில்லை.

நவுருவில் எங்கள் இருப்பைக் குறித்து யாரும் பேசுவதில்லை. இந்த அநீதியை முடிவிற்கு கொண்டுவர யாரும் தயாராக இல்லை,” என வருந்தியிருக்கிறார்.  இந்த நிலைக் குறித்து இதுவரை எந்த பதிலையும் நவுரு அரசு வழங்கவில்லை.

http://www.vanakkamlondon.com/அகதிகளுக்கு-மருத்துவ-வழங/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ சிகிச்சைக்காக 47 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

GettyImages-1026367516.jpg

ஆஸ்திரேலியாவின் Operation Sovereign Borders (OSB) எனும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் கடந்த 1 நவம்பர் முதல் 30 நவம்பர் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.

அக்குறிப்பின் படி, இந்த ஒரு மாதக் காலத்தில் 47 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றதாக பல ஆண்டுகளாக நவுரு மற்றும் பப்பு நியூ கினியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள்.

இம்மாத(டிசம்பர்) தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளை ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற அனுமதிக்கும் மருத்துவ வெளியேற்றச் சட்டம் நீக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இக்காலக்கட்டத்தில், படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2014க்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வந்த 6 பேர் தானாக முன்வந்து சொந்தநாடு திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளார். கடந்த 2013 முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து வருகின்றது

http://www.vanakkamlondon.com/மருத்துவ-சிகிச்சைக்காக-47/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.