Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதியிடம் கூட்டிச் செல்லுங்கள்

Featured Replies

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்திருந்தார். இதில் விசேடமாக தமிழ் அரசியல் கைதி யான ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
 
தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் சிறைத்தண்டனையை அனுபவித்து வருபவர். கடந்த வருடம் அவரின் மனைவி நோய் காரணமாக இறந்துபோக, அவரது இரண்டு சிறுபிள்ளைகளும் அநாதைகளாயினர்.
 
20598.jpg
 
மனைவியின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆனந்தசுதாகரனை சிறைச் சாலை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர்.
இறுதிக்கிரியை முடிந்து உடல் எடுத்துச் செல்லப்பட, ஆனந்தசுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறுவதற்குச் சென்றார். அப்போது அவரது பெண் குழந்தை தந்தையின் பின்னால் சென்று தானும் சிறைச்சாலை வாகனத்தில் ஏறமுற்பட்ட சம்பவம் அங்கு நின்ற அனைவரையும் அழவைத்தது.
அதிலும் குறிப்பாக மேற்படி சம்பவத்தைப் பார்த்த சிறைக்காவலரும் கண்ணீர் விட்டு அழுதார்.
 
இந்தத் துன்பமான நிகழ்வைத் தொடர்ந்து, ஆனந்தசுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவைச் சந்திப்பதற்கு அன்றைய வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஏற்பாடு செய்திருந்தார். இரண்டு பிள்ளைகளும் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தபோது, அடுத்த புதுவருடத் தில் உங்கள் தந்தை உங்களோடு இருப்பார் என்று உறுதிபடக் கூறினார். ஜனாதிபதி கூறியதை நம்பிய பிள்ளைகள் மன ஆறுதலோடு வீடு திரும்பினர். ஆனால் அந்தச் சிறுபிள்ளைகளுக்கு ஓர் உண்மை தெரிந்திருக்கவில்லை.
 
அதாவது நாங்கள் தமிழ்ப் பிள்ளைகள். எனவே எங்களுக்கு அவர்கள் தருகின்ற உறுதி மொழிகள் நிறைவேற்றப்படமாட்டாது என்பது பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்க வில்லை.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்த வாக்குறுதி யைக்கூட நிறைவேற்றி வைக்காமல் போய் விட்டார்.
 
எனினும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே­ தானே சிறைக்கு நேரில் சென்று, தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட்டதுடன் ஆனந்தசுதாகரனையும் பார்த்துள்ளார். இது ஒரு முன்னேற்றகரமான செயலாகும். எனவே வடக்கின் ஆளுநர் திருமதி பி.எஸ். எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்­விடம் கூட்டிச் சென்று சந்திக்க வைக்க வேண்டும்.
 
தாயை இழந்த அந்தப் பிள்ளைகள் தந்தை யோடு வாழ்வதற்கு இந்தச் சந்திப்பு உதவும் என்பதால், வடக்கின் ஆளுநர் இந்தப் புண்ணிய கருமத்தைச் செய்வார் என நம்பலாம். 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.