Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒதுக்கப்பட்ட பணம் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு அபிவிருத்தி இலக்குகள் முன் நிறுத்தப்பட்டு செலவழிக்கப்பட்டது என யாராலும் சொல்ல முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
Image may contain: outdoor and nature
 
 

வடக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 1, 960 km மாகாண வீதிகளையும் 7,600 km கிராமிய வீதிகளையும் கொண்டு இருக்கிறது. வடக்கு மாகாண வீதி திணைக்களமானது 1,960 km நீளமான வீதிகளுக்கு பொறுப்பாக இருக்கிறது .இதில் 1,115 km வீதிகள் A & D தர தார் வீதிகளாகவும் ஏனையவை கிரவல் வீதிகளாகவும் இருக்கின்றன

நல்லாட்சி அரசாங்க காலத்தில் கறம்பொலியா திட்டத்தின் கீழ் தொகுதிகள் ரீதியாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் இந்த ஒதுக்கீடுகளுக்கு சிபாரிசுகளை தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் செய்தார்கள் . இந்த ஒதுக்கீடுகளை கையாளுவதற்கு 200, 000 மேலதிக கொடுப்பனவும் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு கீழாக சிபாரிசுகளை செய்ய குறுநில மன்னர்கள் உருவாக்க பட்டர்கள் . சரவணபவானின் சிபாரிசுகளை பெற வேண்டும் என்றால் பிரதாப ராஜா என்கிற ஆசிரியரின் தயவு தேவை பட்டது. சுமந்திரனின் சிபாரிசு தேவை என்றால் சயந்தன் (தென்மராட்சி) சுகிர்தன் (வடமராட்சி ) உதவி தேவை பட்டது. உண்மையில் பாராளமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிபாரிசுகளை செய்தது இவர்கள் தான்

இந்த வகையில் தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் 2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை மட்டும் 1,086 மில்லியன் பெறுமதியான கறம்பொலியா திட்டத்திற்கான ஒதுக்கீடுகளுக்கு சிபாரிசுகளை சமர்ப்பித்து இருந்தார்கள் இதில்,யாழ்ப்பாணதிற்கு 536 மில்லியன் ரூபாவும் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் ரூபாவும் மன்னார் மாவட்டத்திற்கு 143 மில்லியன் ரூபாவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 121 மில்லியன் ரூபாவும் வவுனியா மாவட்டத்திற்கு 86 மில்லியன் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதில் 30 % வீதத்திற்கான ஒதுக்கீடுகள் 30 M -300 M வரை நீளமான கிராமிய வீதிகளுக்கு என சொல்ல பட்டது . இந்த ஒதுக்கீடுகளின் கீழ் எத்தனை வீதிகள் செப்பனிடப்பட்டன ? இந்த திட்டத்திற்க்காக எந்த பொறிமுறையின் கீழ் வீதிகள் தெரிவு செய்யப்பட்டன ? இதற்காக ஏன் வடக்கு மாகாண வீதி திணைக்களத்துடன் இணைந்து ஒரு திட்டம் தயாரிக்க பட வில்லை ? வட மாகாண வீதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வீதிகளுக்கு ஒதுக்கீடுகள் மத்திய அரசின் பிரதேச செயலகங்களுக்கு ஊடக செய்யப்பட்டது ஏன் ? பல இடங்களில் ஒரு வருட காலத்திற்குள் போடப்பட்ட வீதிகள் வெள்ளத்துடன் அள்ளுண்டு போக காரணம் என்ன ? இவளவு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டும் வீதி பாதுகாப்பை மேம்படுத்தல் , தரமான வீதி இணைப்புகளை ஏற்படுதல் போன்ற அடிப்படை விடயங்களில் கூட அக்கறை செலுத்தப்படாமல் இருந்ததிற்கு யார் காரணம் ? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை

உண்மையில் பாராளமன்ற உறுப்பினர்களின் சார்பில் சிபாரிசுகளை செய்த சயந்தன் , சுகிர்தன் உட்பட எல்லோரும் எழுந்தமானமாகவே சிபாரிசுகளை செய்தார்கள். தேவை மதிப்பீடு , முன்னுரிமை அறிக்கை என எதுவுமே இல்லை. உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழரசு கட்சி வென்ற வட்டாரங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்றும் தோல்வி அடைந்த வட்டாரங்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்களே சமூக தளங்களில் விமர்சனம் செய்யும் அளவிற்கு நிலைமைகள் இருந்தன. வென்ற வட்டாரங்களில் கோவில் தேர் ஓடும் வீதிகளுக்கு கூட கல்லு போட்டு தார் ஊற்றப்பட்டது.இவற்றுக்கு திறப்பு விழா , அடிக்கல் நாட்டும் விழா ஆகியனவும் கோலாகலமாக நடத்தப்பட்டன. மறுபுறம் பிரதேச செயலகங்கள் தெரிவு செய்த ஒப்பந்த தாரர்கள் , அவர்களின் வேலை நிறைவேற்றல் அறிக்கை, தொழில்நுட்பவியலாளரது குறிப்பு என்வற்றில் பல முறைகேடுகள் அவதானிக்கப்பட்டன. இந்த திகதி வரை எந்த நடவடிக்கையும் இல்லை

பாராளமன்ற உறுப்பினர்களோ அல்லது அவர்களின் உதவியாளர்களோ பணத்தை திருடி விட்டார்கள் என சொல்லவில்லை. மாறாக எங்கள் ஆட்களின் inefficent தான் இவளவு நேர்த்தி இன்மைக்கும் காரணம். UNP பிரமுகர்கள் வடக்கு கிழக்குக்கு அதிக பணம் ஒதுக்கப்பட்டது என்றும் இதனால் தான் தேர்தலில் தோல்வி அடைய நேரிட்டது என்றும் தெற்கு மேடைகளில் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒதுக்கப்பட்ட பணம் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு அபிவிருத்தி இலக்குகள் முன் நிறுத்தப்பட்டு செலவழிக்கப்பட்டது என யாராலும் சொல்ல முடியாது

படம் : கறம்பொலியா வீதி ஒன்றின் இன்றைய அவலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.