Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

: 2007-05-21

அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவு

இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்த வழியில் இரா ணுவ ரீதியில் தீர்வு காண்பதில் முனைப்பாக நிற்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசு, அதனால் போர்த் தீவிரப் போக் கில் வெறிகொண்டு செயற்படுகின்றது.

ஏற்கனவே நொந்து நொடிந்துப் போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை, இந்த அரசின் போர்முனைப்புப் போக் கால் உருவாக்கப்பட்டிருக்கும் யுத்தச் செலவினம் மேலும் மிக மோசமாகச் சீரழித்திருக்கின்றது.

நான்காவது ஈழ யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தரப்பி லிருந்து புதிய, புதிய சவால்களை எதிர்கொள்ளும் மஹிந்த ரின் அரசு அவற்றைச் சமாளிப்பதற்காக புதிய, புதிய ஆயுதங் கள், யுத்தத் தளபாடங்கள், போரியல் கருவிகள் என வாங்கிக் குவிக்கின்றது. அதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, வாரிச் செலவழித்து, ஏற்கனவே வெறுமையாகிப் போய்க் கிடக் கும் நாட்டின் கஜானாவை மேலும் துடைத்துக் காலிசெய் கின்றது.

இப்போது விடுதலைப் புலிகளின் வான் புலிகள் படை யின் அறிமுகத்தோடு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. கள முனையில் புதிய நெருக்கடியை அரசுப் படைகள் சந்தித்து நிற்கின்றன. இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காக மேலும் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடவேண்டிய தவிர்க்க முடியாத இக்கட்டை எதிர்கொண்டிருக்கின்றது மஹிந்தரின் அரசு.

ஏற்கனவே யுத்தச் செலவினத்தால் தள்ளாடும் இலங் கையின் பொருளாதார நிலைமை, வான் புலிகளால் ஏற்பட் டுள்ள சவாலை முறியடிப்பதற்கான ஆயுத, தளபாட மற்றும் போர் விமானங்களை வாங்கிக் குவிப்பதற்கு இடமளிக்க மாட்டாது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் எக்கேடு கெட்டாலும் எப்பாடு பட்டாலும் ஆயு தங்களை வாங்கிக் குவித்து, அவற்றின் மூலம் புலிகளின் பலத்தை அடித்து, நொறுக்கி, முறிக்காமல் விடமாட்டோம் என்று சூளுரைத்துச் செயற்படுகின்றது மஹிந்தரின் அரசு.

கடந்த வருட இறுதியில்தான் ஒவ்வொன்றும் சுமார் 26 கோடி 60 லட்சம் ரூபா பெறுமதியான நான்கு "மிக் 27' ரக விமானங்களை மொத்தம் 106 கோடி ரூபாவுக்கு இலங்கை கொள்வனவு செய்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் இப்போது புதிதாகப் புலிகளின் வான்படை அச்சுறுத்தல் புற்றீசல் போல் கிளம்பியிருக்கின் றது.

இதுவரை இலங்கை அரசு சுவீகரித்த விமானங்கள், வானத் தில் பறந்தபடி நிலத்தில் அல்லது கடலில் அசையும் அல் லது நிலைத்திருக்கும் ஓர் இலக்கைத் தாக்கும் வசதியையே கொண்டிருந்தன. வானில் பறக்கும் ஒரு விமானத்தை வானில் கலைத்துச் சென்று தாக்கும் தகைமையை அந்த விமானங் கள் பெற்றிருக்கவில்லை. வான் வழித் தாக்குதல் ஆபத்தை இதற்கு முன்னர் இலங்கைப் படைகள் புலிகளிடமிருந்து எதிர்கொள்ளாததால் அத்தகைய தாக்குதல் தகைமையைப் பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை சிரத்தை காட்ட வேயில்லை. இதனால் கடந்த ஆண்டு இறுதியில் ரஷ்யத் தயாரிப்பான "மிக் 27' தாக்குதல் விமானங்கள் நான்கை சுமார் 106 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்த போது வானிலிருந்து வானுக்குத் தாவும் பலத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசின் பாதுகாப்புத் தரப்பு கவனிக்கவில்லை; சிந்திக்கவில்லை.

ஆனால் இப்போது தென்னிலங்கை மீது அடுத்தடுத்து மூன்று விமானத்தாக்குதல்களை எந்தத் தடையுமேயின்றி வெற்றிகரமாக மேற்கொண்டு புலிகள் இயக்கம் நிரூபித் திருப்பதால், புலிகளின் விமானங்களை வானில் வைத்தே வழிமறித்துத் தாக்கி அழிக்கும் வலுவை எப்படியேனும் பெற் றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இலங்கைப் பாது காப்புத் தரப்புக்கு இப்போது நேர்ந்திருக்கின்றது.

எனவே, ஏற்கனவே தன் வசம் இருக்கும் எட்டுக்கு மேற் பட்ட "மிக் 27' தாக்குதல் விமானங்களுக்கு மேலதிகமாக, புலிகளின் விமானங்களை வானில் வைத்து வழிமறித்துத் தாக்கி அழிக்கக்கூடிய வலிமை கொண்ட "மிக் 29' ரக விமா னங்களையும் வாங்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு சாதாரண "மிக் 29' ரக விமானம் சராசரி 167 கோடி ரூபா வரை பெறுமதியுடையது. தவிரவும், இந்த "மிக் 29' ரக விமானங்களை விமானப்படையில் இணைத்துக் கொள் வதாயின் அதற்கு முன்னோடியாக "மிக் 29'ரகப்பயிற்சி விமா னம் ஒன்றைக் கட்டாயம் கொள்வனவு செய்வது அவசிய மாகும். மேலும் இந்த விமானங்களுக்குத் தேவையான உதி ரிப்பாக ஒப்பந்தம் ஒன்றையும் அந்த விமானங்களை விநி யோகிக்கும் வெளிநாட்டு நிறுவனத்துடன் இலங்கை செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் அந்த விமானத்துக்குத் தேவையான ஏவுகணை கள், ரி.வி. மற்றும் வெப்பவீச்சு வழிகாட்டலைத் தொடர்ந்து சென்று தாக்கும் கணைகள் போன்றவற்றைப் பொருத்த வேண்டியிருக்கும்.

அத்தோடு, இப்போது வான் புலிகளால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் சவாலைச் சமாளிப்பதற்காக ஆள் இல்லா உளவு விமானங்கள், அவற்றை இயக்குவதற்கான கருவிகள், புதிய ஹெ லிக்கொப்டர்கள், தற்போதுள்ள ஹெலிக்கொப் டர்களைத் தரமுயர்த்தல், அவற்றைப் பழுது பார்த்துச் சீர் செய்தல் என்று பல விடயங்களை இலங்கை விமானப் படை அவசரமாகவும் அவசியமாகவும் செய்யவேண்டி யிருக்கின்றது.

இவற்றுக்கும், கடந்த வருட இறுதியில் பெற்ற "மிக் 27' ரக விமானங்களுக்குமாகச் சேர்த்து மேலும் ஆயிரத்து எழு நூறுகோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை அரசு இப் போது செலவிடவேண்டி நேர்ந்திருக்கின்றது என்பதைப் பிரபல இராணுவ ஆய்வாளர்கள் புட்டுக்காட்டியிருக்கின்ற னர்.

ஏற்கனவே கடந்த ஆண்டைவிட இவ்வாண்டுக்கான பாதுகாப்புச் செலவினம் 45 வீதம் அதிகரித்து, 14 ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டியுள்ளது.

இப்போது அந்தச் செலவினம் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாவினால் எகிறப் போகின்றது என்பது நிச்சயம்.

இவற்றையெல்லாம் இலங்கையின் பொருளாதாரம் சமாளித்து, அவற்றுக்குத் தாக்குப்பிடிக்குமா?

பாவம், இலங்கைத் தீவின் மக்கள். போர் முனைப்பில் பிடிவாதமாக நிற்கும் கொழும்பு அரசியல் தலைமையின் பொறுப்பற்ற போக்கால் ஏற்படப் போகும் பொருளாதார மற் றும் ஏனைய நெருக்கடிகளுக்கு அவர்கள்தான் பலிக்கடாக் களாகப் போகிறார்கள்!

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.