Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை -வடக்கு ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை -வடக்கு ஆளுநர்

வடமாகாணத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் குறித்த முன் ஆயத்த நடவடிக்கைகளை அடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)89508229_1763756183761484_8718553392042999808_n89778885_1763760783761024_3243643590672384000_n89862562_1763749043762198_4922960242741870592_n

 

http://www.samakalam.com/செய்திகள்/வடமாகாணத்தில்-உணவுப்பொர/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அரச அதிபர் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் – அரச அதிபர் எச்சரிக்கை

நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர், வடக்கில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு, மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்த ஒரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை அதையும் மீறி பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே பொதுமக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான சகல பொருட்களும் கொழும்பிலிருந்து வழமைபோல் கொண்டுவரப்படும் எனினும் அவ்வாறு ஒரு பிரச்சனை ஏற்படுமிடத்து அதிகாரிகளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.நான் தற்பொழுது கூட்டுறவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை தாராளமாக வழங்குமாறு எந்தவித பிரச்சனையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்கு மாறும் தெரிவித்துள்ளேன்.அத்துடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டளை விடுத்துள்ளேன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-பதுக்கல/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.