Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்பேர்ணில் பேரெழுச்சியோடு கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

Featured Replies

மெல்பேனில் பாராளுமன்றம் முன்பாக இன்று ஈழத் தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமைப்போரின் நியாயப்பாட்டை ஆஸ்த்திரேலிய மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செவிகளுக்கு கொண்டு சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்த்துகொண்ட இந்த நிகழ்வில் தமிழ்ழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோள் ஒரு விளிப்புனர்வை ஆஸ்த்திரேலிய நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

prot1.jpg

prot2.jpg

prot3.jpg

prot4.jpg

prot5.jpg

http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=50

நன்றி-மண்டைதீவு.கொம்

Edited by ஈழவன்85

நல்ல முயற்சி. கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு நன்றிகள்.

(படங்களைப் பார்த்தால் நூற்றுக்கணக்கானவர்கள் கூட வராதுபோல் தெரிகிறதே. செய்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் என்று...)

  • தொடங்கியவர்

மெல்பேர்ணில் பேரெழுச்சியோடு கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

அவுஸ்திரேலிய விக்டோரிய நாடாளுமன்ற முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை பாரிய கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.

இந்த ஒன்று கூடலில் 2,000-க்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் உணர்வுபூர்வமாக அணிதிரண்டு தமது உரிமைக்குரலை வெளிப்படுத்தினர்.

மிகக்குறுகிய கால அவகாசத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு விக்டோரிய மாநிலத்தின் சகல பிராந்தியங்களில் இருந்தும் கலந்து கொண்ட பொதுமக்களில் 4 மாத சிசுவிலிருந்து 90 வயதான முதியவர் உட்பட வயது வேறுபாடின்றித் தமிழ்மக்கள் ஒருங்கிணைந்து பங்குபற்றினர்.

20070522009.jpg

20070522010.jpg

20070522011.jpg

சிறிலங்காவின் சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகளின் மனித உரிமை மீறல்களையும், தமிழின அழிப்பையும் அரச பயங்கரவாத செயல்களையும் விளக்குகின்ற வகையில் பதாதைகளும், வாசக அட்டைகளும் நிகழ்வில் பங்கேற்றோர் தாங்கியிருந்தனர்.

பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை சிறப்பாக நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு நிகழ்வைக் கண்ணுற்ற, பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலியப் பொதுமக்களுக்கு, சிறிலங்கா அரச பயங்கரவாத செயல்களை விளக்குகின்ற துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

20070522012.jpg

20070522013.jpg

20070522014.jpg

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த விக்டோரிய ஈழத்தமிழ்ச் சங்கத்தலைவரின் உரையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில், அவுஸ்திரேலியாவின் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தொழிற்சங்கவாதிகள், பிரபல வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்ற 3CR வானொலி நிர்வாகத்தினர், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட்டோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.

20070522015.jpg

20070522016.jpg

20070522017.jpg

உரைகளுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அரசுக்கும், அவுஸ்திரேலிய மக்களுக்கும் வேண்டுதல் விடுக்கும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்விற்கு அவுஸ்திரேலிய பொது ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டதோடு 3CR வானொலியும், தமிழ் ஊடகமான இன்பத்தமிழ் ஒலியும் நேரடி ஒலிபரப்பு செய்திருந்தன.

http://www.eelampage.com/?cn=31912

நன்றி-புதினம்

நல்ல முயற்சி. கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு நன்றிகள்.

(படங்களைப் பார்த்தால் நூற்றுக்கணக்கானவர்கள் கூட வராதுபோல் தெரிகிறதே. செய்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் என்று...)

நானும் போயிருந்தேன் கிட்டத்தட்ட 1500-2000 சனம் வந்திருந்தது வழமையா மெல்பேன் சனத்தை விமர்சிக்கும் எனக்கே ஆச்சரியமாய் இருந்தது அதுவும் கைது ந்டந்தநேரத்தில் இப்படி சனம் வந்தது.தடைகளும் அழுத்தங்களும் இன்னும் போராட்டத்தை கூர்மை படுத்தும் என்னும் வாசகத்தின் உண்மையை இன்று அறிந்தேன்.வழமையாக போராட்டத்தில் கலந்து கொள்ளும் எண்ணிக்கையைவிட இப்போராட்டத்தில் சனம் நிரம்பி வழிந்தது.

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.