Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடங்கிய உலகமும் முள்ளிவாய்க்காலும்

Featured Replies

வாழ்க்கை மட்டுமல்ல,
இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது.

சிறீலங்கா என உங்களால் அழைக்கப்பட்ட தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை உலகறியா ஏராளம் ஏராளம்.

இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம்.

ஆம்...!

எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம்.

நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை குறுகிய நிலப்பரப்புக்குள் தனிமைப் படுத்தினார்கள். ஆனாலும் மீண்டெழுந்தோம்.

இறுதியாக உலக நாடுகள் கைகோர்த்து ஓர் உத்தியை கையாண்டீர்கள்..!

ஓய்வின்றி ஓர் தொடர் போர்..!!

இறந்தவரை புதைக்க இடமுமில்லை நேரமும் இல்லை. காயம்பட்டவரை சிகிச்சை கொடுக்க மருந்துமில்லை மருத்துவமனையில் இடமும் இல்லை, மருத்துவர்களும் பற்றாக்குறை.

உண்ண உணவுத் தட்டுப்பாடு, கிடைப்பதையேனும் தேடிவர வெளியே போய் வர முடியாது குண்டு மழை.

போராடும் போராளிகளிடம் ஆயுத தளபாட வெடிபொருட்கள் எனக் கையிருப்பு கையறு நிலை.

பதுங்கு குழிக்குள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் முடங்கிய மக்களின் மன அழுத்தம், போராட்டத்தின் மீதே நம்பிக்கையீனம்.

எல்லாமே திட்டமிட்டே செய்து முடித்தீர்கள். நினைத்தவாறே எல்லாமும் நிறைவேறிற்று. இயற்கையின் மீது பாரத்தைப் போட்டு நாம் நடை பிணமானோம்.

ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது..!

உலகின் வல்லரசுகள் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டவர்களின் இன்றைய நாட்கள் இதே பாடத்தை தான் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.

நாட்டுக்கு நாடு எல்லையை மூடுகிறார்கள். உணவுக்கு / மருந்துக்கு / மருத்துவருக்கு அல்லாடுகிறார்கள்.

நாம் பதுங்கு குழிக்குள் முடங்கியது போன்று இன்று இவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி தனிமையில் மன அழுத்தம் கொள்கிறார்கள்.

இன்று களப் பணியாற்றுவோருக்கு நாளாந்தம் கைதட்டி நன்றி தெரிவிக்கிறார்கள். அதை ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

அன்று ஒரு சிறு நிலப்பரப்பில், எந்த நிமிடமும் நம் உடலும் சிதறலாம் எனத் தெரிந்தும், நமது மக்களை காப்பாறும் மருத்துவப் பணியில் இருந்த / இறந்த எமது மருத்துவர்கள், களப் பணியாளர்களே எம் கண்முன் வந்து போகிறார்கள்.

அன்று நாம் உங்கள் முற்றமெங்கும் / வீதிகளெங்கும் ஒப்பாரி வைத்தோம், எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும்..,

நாம் ஈழத்தவர்கள்; மனித நேயத்துடன் எங்கள் கண்களும் உங்களுக்காக கண்ணிரைக் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த உலகப் பேரவலம் முடிந்து புன்னகையுடன் நீங்கள் வெளியே வரும் நாட்களில், நாடற்றவர்களாகிய நாங்களும் உங்களுடன் கை குலுக்கிக்கொள்வோம்.

அப்போதாவது அன்பிலும் சமத்துவத்திலும் நிறையட்டும் இந்த உலகு.

 

rajah.varatha.9?__tn__=,dC-R-R&eid=ARAil

  • தொடங்கியவர்

 

கொரோனா விற்கு பிறகு இந்த உலக ஒழுங்கு/ கூட்டணி/ கொள்கை மாற்றம் உலகளாவிய அளவில் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு பெரும் வடிவ மாறுதலைச் சந்திக்கப்போவதை நடக்கும் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.

ஆனால் எமக்குள் இது குறித்த எந்த பார்வையோ/ தூரநோக்குச் சிந்தனையோ/ உரையாடலோ எதுவுமில்லை.

தமக்கென்று ஒரு அரசில்லாத
போராடும் தேசிய இனங்கள் வெளித்தரப்பை அணுகக் – கையாள தற்காலிகமாகவேனும் தமக்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது ‘நந்திக்கடல்’.

தண்ணீர் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சூழமைவுக்கு ஏற்ப
அப்போதுதான் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதுடன் சாத்தியமான போராட்ட வடிவத்துடன் தம்மை நிரப்பிக் கொள்ளவும் முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.

எத்தகைய வீழ்ச்சியையும் அழிவையும் சந்தித்த எந்த இனத்திற்கும் ஏதோவொரு பலம் அதைச் சூழ இயங்கிக் கொண்டிருக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.

இந்த அடிப்படையில் நமது பலம் தமிழகம் மற்றும் புலம்.

இந்த அடிப்படையில் 'தமிழ் வெளியுறவுக் கொள்கை’ அல்லது “தமிழ் லொபி” ஒன்றை தாயகம்/ தமிழகம்/ புலம் என்ற மூன்று நிலங்களும் இணைந்து உருவாக்குவதனூடாக அப்படியான ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கி நாம் நமது அரசியலை தீர்மானிக்காவிட்டால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை ஒவ்வொரு தடவையும் தவறவிட்டு இப்படி பிராந்திய – புவிசார் அரசியலுக்குள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான் என்று எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்'.

கொரொனாவிற்குப் பிறகும் இதுதான் நடக்கும்.

இன அழிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கும் ஒரு இனமாக கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மட்டுமல்ல அதற்குப் பின்னரான புவிசார் அரசியலை எதிர்கொண்டு தேச விடுதலையை நோக்கி நகரவும் ஒருங்கிணைந்த தமிழ் வெளியுறவு கொள்கை / தமிழ்த் தேசிய சிந்தனைப் பள்ளியின் உருவாக்கம் அவசியம்.

(முகநூல்) 

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’Packiarajan.. சே.. @packiarajan பத்தாயிரத்திற்கும் மேல் பலி என்கிற செய்தி படித்த மனைவி பதறி என் பக்கம் திரும்பி என்ன சலனமே இல்லாமல் பார்க்கிறீர்கள் என்றார். ஒரே நாள் இரவில் நோய்நொடி இல்லாத எம்மக்கள் 40000பேர் குண்டுக்கு பலியான செய்தி படித்து கதறி மரத்துப்போனதால் இருக்குமென்றேன். #ஈழம் இனப்படுகொலைநினைவுகள்’ எனச்சொல்லும் உரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.