Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் !

கடந்த வாரம் ஊரடங்குஉத்தரவுபற்றி அறியாத நெடுங்கேணியை சேர்ந்த விவசாயி 800 கிலோ கத்தரிக்காயை பிடுங்கிவைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாதிருந்ததாக செய்தியொன்றைக் காணக் கிடைத்தது. அதேபோல யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறுவடைக்குத் தயாரான தக்காளி பழங்களை மரத்திலும் விடமுடியாமல் பிடுங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒரு செய்தியை வாசிக்கக் கிடைத்தது. 

இவ்வாறான அவசரநிலைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இது. இதேநிலைதான் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலையாகவும் இருக்கக்கூடும். நாட்டின் பல பகுதியிலும்  மரக்கறியின் அறுவடை ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்தைப்படுத்தல் இப்போது இலகுவானதல்ல. 

அரசு அவ்வப்போது மக்கள் பொருட்களை வாங்குவதற்கு ஊரடங்கு தளர்த்தினாலும், சில இடங்களில் விவசாயிகள் தம் விளைபொருட்களை விற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்தபோதும் சில முட்டாள்கள் தேவையற்ற வகையில் கூட்டம் கூடி அதனைக் கெடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. 

தக்காளி போன்ற சில விவசாய விளைபொருட்கள் ஒரு சில நாட்களுக்குள் சந்தைப்படுத்தி விடவேண்டும். வெங்காயம் போன்ற சில பொருட்களைத்தான் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியும். 

ஏற்கனவே பல்வேறு சிரமங்களின் மத்தியில்தான் விவசாயிகள் பலரும் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் பொருட்களை விற்கமுடியாமல் போனால் அது அவர்களுக்குப் பெரும் நட்டமாகிவிடும். மறுபுறம் மக்களுக்கும் தமக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாது போய்விடும்.

இதற்கான தீர்வு என்ன? அரசை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் உரிய தீர்வு உரிய நேரத்தில் கிடைக்குமா? உங்கள் பதில் “இல்லை”யென்றால் உடனடித் தீர்வுதான் என்ன?

பலரும் பின்வரும் இரண்டு தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

தெரிவு 1: அரசு மானிய விலை அடிப்படையில் இப்பொருட்களை கிராமமட்ட அமைப்புக்கள் ஊடாக கொள்வனவு செய்து சதொசா போன்ற அரச வணிக கடைகள் ஊடாக விற்பனை செய்யலாம்.

தெரிவு 2: தனியார் பல்பொருள் அங்காடிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு விற்பனை செய்தல். 

ஆனால் இந்த இரண்டு தெரிவுகளும் தற்போதய சூழலில் உடனடித் தீர்வை தரக் கூடியவை அல்ல. 

அப்படியானால் எமக்கு உள்ள உடனடித் தீர்வு என்ன?

இலங்கையின் கிராமங்களில் கிராம மட்ட அமைப்புகள் பல உள்ளன. கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம், கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், இளைஞர் கழகங்கள் போன்ற பல அமைப்புக்கள் உள்ளன. இதுதவிர மதத் தளங்களின் நிர்வாக சபை மற்றும் தொண்டர்களும் ஒவ்வொரு ஊரிலும் உள்ளனர். 

இந்த அமைப்புக்கள் இந்த சூழ்நிலையில் மிக முக்கிய பங்காற்ற முடியும். அவர்களோடு இதனை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு ஊரில் உள்ள இளைஞர்களும் ஆர்வமுள்ள ஏனையவர்களும் இணைந்து கொள்ளலாம்.

உங்கள் பிரதேசத்தில் விவசாயப் பொருட்களை வாங்கி விற்க கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது வேறு அமைப்புகள் முன்வராத இடத்து, ஒவ்வொரு கிராமத்திலும் பத்திலிருந்து பதினைந்து பேர் இணைந்து இதற்காக WhatsApp group ஒன்றை உருவாக்கலாம். Facebook இனையும் இந்தத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  (அல்லது வேறு பொருத்தமான சமூக ஊடகத்தை தெரிவு செய்யலாம்). 

அடுத்ததாக அந்த ஊரில் உள்ள விவசாயிகளை தொடர்புகொண்டு அவர்களையும் இந்த குழுவில் இணைத்துக் கொள்ளலாம். அல்லது, விசாயிகளுக்கான சங்கம் இருக்குமாயின் அதன் நிர்வாகிகளை இணைத்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் யாரிடம் என்ன விளைபொருள்கள் உண்டென்பதை பகிர்ந்து கொள்ளலாம். இளைஞர்கள் வேறு Whatsapp குழுக்களின் ஊடாக ஊரில் யார் யாருக்கு பொருட்கள் தேவை என்பதை அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் எந்த விவசாயியிடம் என்ன விலைபொருள் உள்ளது, அதன் தொகை, என்பதையும் எந்த குடுமபத்துக்கு என்னென்ன விளைபொருட்கள் தேவை என்ற ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ள முடியும். 

அடுத்ததாக இளைஞர்கள் அந்த பட்டியலுக்கு ஏற்ப தங்களுக்குள் சுழற்சிமுறையில் சிறு குழுக்களாக விவசாயிகளிடம் பொருட்களைப் பெற்றுக்கொண்டு பொதி செய்துகொண்டு தேவைப்படுபவர்களின் வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்கிப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். உள்ளூரில் பொருட்கள் விற்று மிகுதியாக இருந்தால் அயல் கிராமத்தினைத் தொடர்பு கொண்டு அந்த ஊர் குழுவின் ஊடாக அங்கு விற்பனை செய்யலாம். 

இதற்கு அந்தந்த கிராமசேவகர்களையும் இணைத்துக் கொள்ளமுடியும். இவ்வாறு கிராமசேவகர்களையும் கிராமமட்ட சங்கங்களையும் இணைத்துக் கொள்வது இதில் ஈடுபடும் ஒவ்வொருவரின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும்.

இவ்வாறான ஒரு பொறிமுறை தயாரானதும் உங்கள் பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் கலந்துரையாடி அவர்கள் அனுமதியுடன் ஊரடங்குவேளையிலும் விவசாயப் பொருட்களை வாங்கி விற்பனை செய்யக்கூடிய ஒழுங்குகளை செய்யமுடியும்.  

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் ஆள் நடமாட்டத்தை பெருமளவு குறைத்து அதேநேரத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விவசாய விளைபொருட்களைச் சந்தைப்படுத்த முடியும். ஒரு நேரத்தில் கிராமத்தில் மக்கள் நடமாடித் திரியவேண்டிய தேவையும் குறைக்கப்படும். 

எதிர்காலத்தில் இதே ஒழுங்குமுறையை விவசாயிகளும் கிராமமட்ட அமைப்புகளும் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும். அல்லது வேறு ஒரு பொருத்தமான முறையையும் பயன்படுத்த முடியும்.  இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு நியாயமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். 

இது ஒரு வழிமுறை மட்டுமே. ஒவ்வொரு கிராமத்திலும் தத்தமக்கு ஏற்றமாதிரியான ஒரு பொறிமுறையை அவர்கள் தெரிவு செய்துகொள்ள முடியும். எப்போதுமே வேறு யாரோ வந்து உதவவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நெருக்கடியான நேரத்தில் நம் கையே நமக்குதவி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.