Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வித்துறை தொடர்பான கோட்டாபயவின் செயலணி! கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள ஆசிரியர் சங்கம்

Featured Replies

கொரோனா வைரஸினால் பாடசாலை மட்டங்களிலும், கல்வித்துறையிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சமாளிப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி நியமனத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்துறையை நிர்ணயிக்கும் முக்கியமான தரப்பினர் இந்த செயலணியில் இல்லாமை, தமிழ்ப் பாடசாலைகளை பிரதிநித்துவம் செய்யும் எவரும் இதில் நியமிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் இந்த நியமனத்தில் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸினால் கடந்த மார்ச் மாத இடையில் ஸ்ரீலங்காவிலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உட்பட மேலதிக வகுப்பு நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், எதிர்கால நடவடிக்கைகள் என பல்வேறு விடயங்களை தீர்மானிப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டது.

இதில் கொழும்பு விசாகா, ஆனந்தா, மாத்தர - ராஹல, கண்டி தர்மராஜ ஆகிய பிரபல்யமான பாடசாலைகளின் அதிபர்களும், பல்கலைக்கழகங்களின் வேந்தர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எனினும் அரச தலைவரின் இந்த நியமனத்தை கடுமையாக எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின், முக்கியமான பிரிவினர் இதில் உள்ளடக்கப்படாமையினால் தமிழ் பிரதேசம் உட்பட பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மாணவர்கள், பாடசாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இதேவேளை, அரச ஊழியர்கள் பெற்றுக்கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கான கடன் அறவீட்டினை மார்ச் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளப்படாது என்கிற அறிவிப்பை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது நிவாரண அறிவிப்பின் போது வெளியிட்டிருந்தார்.

அரசாங்கத்தின் நிவாரண அறிவிப்பு வெறும் வாய்மூல அறிவிப்பாகவே இருப்பதாகவும், மக்களுக்கு நன்மைகள் சென்றடையவில்லை என்றும் எதிரணியினரால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த மாதம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் கடன் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின், இவ்வாறு அறவிடப்பட்ட தொகையை அரசாங்கம் மீளச்செலுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/140945

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.