Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா : கடல் எல்லையை பலப்படுத்துகிறது இலங்கை

Featured Replies

(ஆர்.யசி)

இந்தியாவில் "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியர்கள் எந்த வழிகளிலும் இலங்கைக்கு நுழையாதிருக்க இலங்கையின் வடக்கு கடல் எல்லையை பலப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. விமானப்படை மூலமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

இலங்கை கடற்படை தளபதி ரியால் அட்மிரல் பியல் டி சில்வா இது குறித்து கூறுகையில்,

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் மோசமான நிலைமையை அடுத்து இலங்கையின் கடல் எல்லையை பலப்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவில் இவ்வாறான நோயாளர்கள் அதிகரிப்பின் விளைவாக கடல் மார்க்கமாக அவர்கள் இலங்கைக்கு தப்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.

எனவே இலங்கையின் வடக்கு கடல் எல்லையே மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதால் வடக்கு கடல் எல்லை உள்ளிட்ட நாட்டின் சகல பக்கமும் கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு அவர்களின் கண்காணிப்பு செயற்பாடுகளையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் எதுமீரும் எவராக இருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். ஆனால் இலங்கை மீனவர்கள் இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட முடியும். கடற்படை அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/79713

  • தொடங்கியவர்

அந்நியர்கள் நுழைந்தால் அறியத்தரவும்
Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 01:29 - 0      - 116


இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுழைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன் இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான நகர்வுகளை தடுக்க இலங்கை கடற்படையானது, இந்திய அதிகாரிகளிடமும் உதவிகளை கோரியுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் இத்தகையவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அந்நியர்கள்-நுழைந்தால்-அறியத்தரவும்/175-248387

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.