Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலை விரைந்து நடத்தும் எண்ணத்தில் அரசாங்கம் இல்லை – உதய கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை விரைந்து நடத்தும் எண்ணத்தில் அரசாங்கம் இல்லை – உதய கம்மன்பில

Udaya-Gammanpila.jpg

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை புறந்தள்ளி நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்றும் அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கான அவசியமும் இல்லை என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி காணொளியொன்றினை பதிவிட்டிருக்கும் அவர், இதன் காரணமாகவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை ஒத்தி வைத்தமைக்கு அரசாங்கம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கவனம் செலுத்தாது கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளிலேயே நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இந்த சந்தர்ப்பத்திலும் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதிலேயே அவதானம் செலுத்தி வருகின்றன.

குறிப்பாக ருவன் விஜேவர்தன மற்றும் அநுரகுமார திஸாநாயக்க போன்றோர் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைத்துள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான முழு பொறுப்பும் ஜனாதிபதிக்கு உரித்தானது என்றும் அந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு மீது சுமத்துவது பொறுத்தமற்றது என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் மூலம் அவர்களுக்கு சட்டம் பற்றிய தெளிவில்லை என்பது புரிகிறது. அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரைக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அவர் பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

தேர்தலுக்கான தினத்தை தீர்மானித்துள்ளார். அத்தோடு வேட்புமனு தாக்கல் செய்யக் கூடிய காலத்தையும் அறிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அவற்றை மாத்திரமே அவரால் செய்ய முடியும்.

அரசியலமைப்பின் 103 ஆவது உறுப்புரைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கான முழுமையான பலம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே வழங்கப்பட்டுள்ளது. 1981 (1) ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் 24 (3) ஆவது உறுப்புரையில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திக் கொண்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தலை நடத்துவது மாத்திரமின்றி அதனை ஒத்தி வைக்கும் அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உரியது என்பது முழு நாடுமே அறிந்த விடயமாகியுள்ளது.

வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது பொறுத்தமற்றது என்றும் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அரசாங்கம் தேர்தலை நடத்த முயற்சிப்பது பொறுத்தமான செயல் அல்ல என்றும் ருவன் விஜேவர்தன மற்றும் அநுரகுமார திஸாநாயக்க என்போர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கவுமில்லை. அதற்கான தேவையுமில்லை. அதன் காரணமாகவே ஆணைக்குழு தேர்தலை ஒத்தி வைத்த போது அரசாங்கம் அதற்கு எதிராக கருத்து வெளியிடவோ அல்லது செயற்படவோ முன்வரவில்லை.

காரணம் அந்த முடிவு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உரிமை என்பதோடு காலத்திற்கேற்க முடிவையே ஆணைக்குழு எடுத்துள்ளது என்று நாம் நம்புவதாலாகும். நாட்டின் நெருக்கடி நிலைமையை கவனத்தில் கொள்ளாது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.

ஆரம்பத்தில் அரசாங்கம் நாடாளுமன்ற தேர்லை ஒத்தி வைப்பதாக குற்றம் சுமத்திய ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. தற்போது தேர்தலை விரைவாக நடத்துவதற்கு முயற்சிப்பதாக குற்றஞ்சுமத்துகின்றன. ஆனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் தான் தேர்தலை நடத்துவதும் ஒத்தி வைப்பதும் ஆணைக்குழுவின் பொறுப்பு. அதற்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பில்லை என்பதை ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. என்பன புரிந்து கொண்டுள்ளன.

எனினும் ஏப்ரல் 25 ஆம் திகதியாகும் போது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் பாராளுமன்ற சட்டத்தின் 113 ஆவது உறுப்புரைக்கமைய தேர்தலுக்கான புதிய தினத்தை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.

ஆனால் தற்போது ஏப்ரல் 25 ஆம் திகதி கடக்கவில்லை என்பதால் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவதற்கான புதிய தினத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது. எனவே ஐ.தே.க. இது தொடர்பில் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்கள் போதுமானது என்பதே ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளின் நிலைப்பாடாகவுள்ளது. கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக நடவடிக்கைகள் சொல்லில் மாத்திரமின்றி செயலிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட மாட்டாது என்பதை எதிர்தரப்பினருக்கு தெளிவாகக் கூறக் விரும்புகின்றேன்” என்றார்.

http://athavannews.com/தேர்தலை-விரைந்து-நடத்தும/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.