Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைப் பிணக்கு விடயத்தில் மாறுகிறது சர்வதேசப் போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிணக்கு விடயத்தில் மாறுகிறது சர்வதேசப் போக்கு

இலங்கை இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகள் பின்னடைவு கண்டமைக்கு அது தொடர்பான விடயங் களைக் கையாண்ட சர்வதேச சமூகத்தின் பிழையான அணுகு முறையும் பிரதான காரணம் என்று இப்பத்தி யில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம்.

சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளான இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம தரப்பு அந் தஸ்தோடு அமைதி முயற்சிகளில் ஈடுபட இணங்கி, அதன் அடிப்படையில்தான் சமாதான எத்தனங்களை முன்நகர்த்தின என்பது வெள்ளிடைமலை.

ஆனால், காலப்போக்கில் சமதரப்பு அந்தஸ்து, விடு தலைப் புலிகளுக்கு மறுக்கப்பட்டு, அவர்கள் ஒதுக்கப்பட்ட தால் அமைதி முயற்சிகள் தடங்கப்பட்டு முடங்கும் நிலைமை உருவாயிற்று.

புதிதாக ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் (முதலில் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்கவின் தலைமையிலும் பின்னர் தற்போ தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலு மான அரசுகள்) அமைதி முயற்சிகளில் புலிகளின் சம அந் தஸ்துத் தகைமையை ஒருபுறம் மறுத்து நிராகரித்தன என் றால், மறுபுறம் சர்வதேச சமூகமும் அதே தவறை இழைத்து, அமைதி முயற்சிகள் தடைப்படக் காலாகியது.

அமைதி முயற்சிக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலி களைப் பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப்படுத்தித் தடை செய்ததன் மூலம் அந்த சமாதான எத்தனங்களில் புலிகளுக்கு இருந்த சம அந்தஸ்துத் தகைமையைக் கெடுத்து, அமைதி முயற்சிகளைப் பாழடிக்க வழி செய் தது சர்வதேச சமூகம்.

அத்தவறு குறித்து இப்பத்தியில் பல தடவைகள் விளக்கமாகவும் விவரமாகவும் குறிப்பிட்டாயிற்று.

இப்போது அந்தத் தவறை சீர்செய்யும் வகையிலான புதிய போக்கு கையாளுகை சர்வதேச சமூகத்திட மிருந்து வெளிப்படத் தொடங்கியிருப்பது நல்ல அம்ச மாகத் தோன்றுகின்றது.

இலங்கையில் சீர்கெட்டு வரும் மோசமான நிலைமை குறித்துக் கவலையும், விசனமும், கண்டனமும் தெரி வித்து வரும் சர்வதேச நாடுகள், இப்போதெல்லாம் இது தொடர்பான தமது கருத்துக்களை வெளியிடும்போது இலங்கை அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒரே தராசில் வைத்து எடை போடுவது போலவே விட யங்களைப் பிரதிபலித்து வருகின்றன.

இலங்கையில் ஆட்கடத்தல்களும் நீதிக்குப் புறம் பான படுகொலைகளும் தினசரி இடம்பெறுவதாகச் சுட் டிக்காட்டியுள்ள ஆஸ்திரேலிய அரசு, இலங்கை அரசு மனி தாபிமானச் சட்டங்களை ஒழுங்குக் கிரமமாக மீறி வரு கின்றது என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்ஸாண்டர் டௌனர் இலங்கை அரசு தொடர்பான தமது விமர்சனத்தைக் கடுமையாக் கியிருக்கின்றார் என ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட் டுத்தாபனம் தெரிவித்திருக்கின்றது. அதுமட்டுமல்ல, இவ்விவகாரம் தொடர்பான தமது உரையில் இலங்கை அரசை யும், விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்தாமல் இரு தரப்புகளையும் ஒரே அந்தஸ்தோடு அணுகி அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சர்வதேச மன்னிப்புச் சபை தொடக்கம் ஐ. நா. மனித உரிமைகள் அமைப்புகள் வரை சர்வதேச பொது அமைப்பு களாகட்டும் அமெரிக்கா முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப் பிய ஒன்றிய நாடுகள், அத்தோடு அண்டை நாடான இந் தியாவரை சர்வதேசமாகட்டும் இலங்கை இனப்பிரச் சினை விவகாரம் குறித்துக் கருத்து வெளியிடும்போது அல்லது கண்டன, விமர்சன அறிக்கைகளை முன்வைக் கும் போது, பிணக்கில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரை யும் சம அந்தஸ்துக் கொடுத்து சம தரப்புகளாகக் கருதி இரு தரப்பையும் அணுகுகின்ற புதிய போக்கு இப் போது தென்படுகின்றது.

தன்னை சட்டபூர்வ இறைமையுடைய அரசு என்று கூறிக்கொள்ளும் இலங்கையை, புரட்சிப் போக்குடைய ஆயுதம் தரித்த எதிர்ப்பியக்கம் ஒன்றை நடத்தும் விடு தலைப் புலிகளுடன் சமநிலையில் வைக்கும் கருதும் போக்கை சர்வதேசம் கையாளும் புதிய நிலைமை அதி பர் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகம் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றதை அடுத்து உருவாகியிருக்கின்றது.

தமிழர்களின் நியாயமான நீதியான சட்டபூர்வ மான அபிலாசைகளைக் கவனத்தில் எடுக்க மறுத்து, பௌத்த சிங்கள பேரினவாத மேலாண்மைச் சிந் தனையோடு விடயங்களை அணுகி, தமிழர்களின் உரி மைப்போரை ஆயுத வழியில் அடக்குவதற்கு அரச பயங் கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் நாட் டுக்கு இந்தக் "கீர்த்தியை' பெற்றுக் கொடுத்திருக்கின் றது மஹிந்தரின் தலைமையிலான ஆட்சி.

மஹிந்த ராஜபக்ஷவை "யதார்த்தவாதி' என்று சித் திரித்து, அவர் ஆட்சிப்பீடம் ஏற, விடுதலைப் புலிகளின் தலைமை மும்முரமாக உழைத்ததன் பயனை, இப்போது புலிகள் அறுவடை செய்யத் தொடங்கிவிட்டனர் என்றே தோன்றுகின்றது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசின் கீர்த்தியும் பெரு மையும் (?), கொடிகட்டிப்பறக்கத் தொடங்கியிருப்பதன் மூலம் இது நிரூபணமாகி வருகின்றது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.