Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணிலோடு சேர்ந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதா? இ.தொ.கா., முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுஞ்சீற்றம் கொண்டுள்ள அரசுத் தலைமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat May 26 8:44:40 EEST 2007

ரணிலோடு சேர்ந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதா? இ.தொ.கா., முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுஞ்சீற்றம் கொண்டுள்ள அரசுத் தலைமை

அரசுக் கூட்டமைப்பிலும் அமைச்சரவை யிலும் இடம்பெற்றுக்கொண்டு, அதே சம யம் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே மேசையில் அமர்ந்திருந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்றவை மீது அரசுத்தலைமை கடுஞ்சீற்றத்துடன் இருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இச்சீற்றம் காரணமாக மேற்படி மூன்று கட்சிகளின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களுக்கு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கான அழைப்பு அனுப்பப்படாமல் போகலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைக்கும் தேர்தல் சீர்திருத்தத் திட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு அரசு முனைப்பாக நிற்கின்றது.

இந்த உத்தேச திட்டம் ஏனைய பெரும் பான்மை மக்களோடு கலந்து வாழும் சிறுபான்மையினரான மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் போன்றோரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை முற்றாக மழுங் கடித்து விடும் எனக் கருதும் இ. தொ. கா., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை, தமது மக்களின் நலன் கருதி முழு மூச்சாக இத்திட்டத்தை எதிர்க்கத் துணிந்திருக் கின்றன.

அரசில் இருந்தும், அமைச்சரவையி லிருந்தும் வெளியேற்றப்படும் நெருக்கடி ஏற்பட்டாலும் இந்தத் தேர்தல் சீர்திருத்தத் திட்டத்தை நிறைவேறும் அரசின் முயற் சியை முறியடிப்பது என இ. தொ. கா. கங் கணம் கட்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சிறுபான்மையினரைப் பிரதிநிதித்து வம் செய்யும் கட்சிகள் சிறிய கட்சிகள் நேற்று முன்தினம் ஐ.தே.க.வுடன் சேர்ந்து பத்திரி கையாளர் மாநாடு ஒன்றை நடத்தின.

ஜனாதிபதி தொண்டமானுடன் பேசினார்

இந்தப் பத்திரிகையாளர் மாநாடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற இருப் பது பற்றிய தகவல் அறிந்ததும் அதற்கு முதல் நாள் இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்ட மானுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் என அறிய வந்தது.

அரசில் அமைச்சராக இருந்து கொண்டு, பிரதான எதிர்க்கட்சியுடன் சேர்ந்து அரசுக்கு எதிரான பொதுப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்துவது முறையற்றது என்பதை ஜனாதிபதி நாசூக்காகத் தொண்டமானுக்கு எடுத்துரைத்தார் எனவும் தெரிகின்றது.

ஆனாலும், தனது இன மக்களின் அடிப் படை வாக்குரிமை மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தோடு விளையாடும் இந்த முயற்சியில் தாம் விட்டுக் கொடுக்க முடி யாது என்ற சாரப்பட ஆறுமுகன் பதிலளித்து உரையாடலைத் தொடராமல் விலகிக் கொண் டார் எனவும் கூறப்படுகின்றது.

பெர்ணாண்டேபுள்ளேயும் பேசினார்

இதன் பின்னர், செய்தியாளர் மாநாடு நடை பெறவிருந்த அன்று காலையில் இ. தொ. கா. தரப்போடு நாடாளுமன்றத்தில் அர சுத் தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இந்த விடயம் குறித்துப் பேசியிருக்கின்றார்.

இ. தொ. கா., முஸ்லிம் காங்கிரஸ் போன்ற அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இவ் விடயத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாட் டைக் கொண்டிருந்தால் அவை தனித்து ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தலாம். ஆனால் பிரதான எதிர்க்கட்சியுடன் சேர்ந்து அரசுக்கு எதிராகப் பகிரங்கச் செய்தியா ளர் மாநாடு நடத்துவது அரசின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகும் நடவடிக்கை என்று அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே தெளிவுபடுத்தினார் எனத் தெரிகின்றது.

இதனையும் உதாசீனப் படுத்திய இ. தொ. கா., மாற்றுக் கட்சிகளுடன் சேர்ந்து ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க வுடன் ஒரே மேசையில் அமர்ந்திருந்து செய் தியாளர் மாநாட்டை நடத்தியதுடன், அர சின் தேர்தல் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராகக் கடும் நிலைப்பாட்டையும் வெளிப் படுத்தியது. அக்கட்சியின் சார்பில் அமைச் சர் அறுமுகன் தொண்டமானே அதில் பங்குபற்றினார்.

இதே நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ் ணனும் அங்கு வெளிப்படுத்தினர்.

ஆனால் அரசுக்கு எதிராக ஐ. தே. கட் சித் தலைவர் ரணிலுடன் சேர்ந்து பத்தி ரிகையாளர் மாநாட்டில் பங்கு பற்றிய இ. தொ. கா., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகி யவை மீது அரசுத் தலைவர் கடுஞ்சீற்றத் துடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இதன் விளைவாக முதற்கட்டமாக, இந் தக் கட்சிகளின் சார்பில் அமைச்சர்களாக இருப்போருக்கு சிலசமயம் அடுத்த அமைச் சரவைக் கூட்டத்துக்கான அழைப்பு அனுப் பப்படாமல் போகலாம் எனத் தெரிகின்றது.

இக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங் கப்பட்ட பிரதி அமைச்சுப் பதவிகள், அமைச் சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் பதவி கள் என்பன வெட்டப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை எனவும் கூறப்படுகின்றது.

""இவர்கள் எல்லோரும் கடந்த ஜனா திபதித் தேர்தலில் எனக்கு எதிராக ரணி லுக்காக மும்முரமாக வேலை செய்தவர் கள். அவற்றையெல்லாம் மறந்து, எனது தரப்பில் பலரின் எதிர்ப்பைப் புறக்கணித்து இவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து, அரசில் இணைத்து, என்னுடன் வைத்திருக் கிறேன். இவர்களுக்காக அளவுக்கு அதிக மாக அமைச்சர்கள், பிரதி அமைச்சர் களின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளேன். இதற்காகக் கடும் எதிர்ப்பை நான் எதிர் கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். நான் இவ்வளவு தாராளமாக நடக்க, அவர் கள் எனக்குத் தடிப்புக் காட்டுகின்றார்கள். சரியான பாடம் புகட்டுவேன்.'' இப்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக் கமானவர்களிடம் சீறினார் என அறிய வந்தது. (அசி)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.