Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வழமை வாழ்வை’ பழக்கப்படாத முறையில் மீண்டும் ஆரம்பிக்கும் ஐரோப்பியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘வழமை வாழ்வை’ பழக்கப்படாத முறையில் மீண்டும் ஆரம்பிக்கும் ஐரோப்பியர்கள்

ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் அவற்றின் ஊரடங்கு நடவடிக்கைகளை படிப்படியாக தளர்த்தி வருகின்ற நிலையில் ‘புதிய வழமைக்கு’ ஐரோப்பியர்கள் தங்களை இசைவாக்கிக் கொள்கிறார்கள். இரவோடு இரவாக கட்டுப்பாடுகளை நீக்கலாம். ஆனால், வாணிப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மீண்டும் வென்றெடுக்க கால அவகாசம் தேவை.

புரூசெல்ஸ், (சின்ஹுவா): ஐரோப்பியர்கள் தங்களது  ‘வழமை’ வாழ்வை  மீண்டும் ஆரம்பிக்கின்றார்கள். ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக சுமார் இரு மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட  ஊரடங்குக்குப் பின்னர் தங்களுக்கு பழக்கப்படாத முறையொன்றிலேயே அதை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. முகக் கவசங்களை அணிந்திருக்கிறார்கள். சமூக இடைவெளியை பேணுகிறார்கள். கட்டம் கட்டமாக பிரிக்கப்பட்ட நேரங்களில் வேலைக்கும் பாடசாலைகளுக்கும் செல்கிறார்கள். 

139032784_15886841646341n.jpg

 

தளர்வு குறித்து  கலப்பான உணர்வு

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலி, கொரோனோ வைரஸுக்கு சுமார் 29 ஆயிரம் மனித உயிர்களை பலிகொடுத்ததுடன், வைரஸ் தொற்றுக்கு இலக்கான 211,000 க்கும் அதிகமான மக்களையும் வைத்துக்கொண்டு 8 வார கால தேசிய ஊரடங்கை இறுதியாக தளர்த்துகின்றது.

ஆனால், ஊரடங்கு தளர்வின் முதல் நாள் இத்தாலியர்கள் மத்தியில் பதற்றமும் நம்பிக்கையும் கலந்த ஓர் உணர்வை காணக்கூடியதாக இருந்தது. “  பயப்படுவதற்கு காரணம் இல்லை என்றபோதிலும் கூட வீதிகளில் பாதுகாப்பற்றவனாகவே என்னை உணர்கிறேன். ஒவ்வொருவரும் அறிவுபூர்வமான முறையில் நடந்துகொள்கிறார்கள். ஆனால், இன்னமும்கூட பாதிக்கப்படக்கூடியவனாகவே என்னை நான் உணர்கிறேன்” என்று சுமார் 4 வருடங்களாக உரோம் நகரில் வாழ்ந்து வரும் பிரிட்டிஷ் எழுத்தாளரும் பாடசாலை ஆசிரியருமான கேட் நிக்கலஸ் நேர்காணல் ஒன்றில் கூறினார். 

உரோம் நகரில் டிஜிட்டல் போட்டோ ஸ்டூடியோ ஒன்றில் ரிட்டா றிவெல்லி ஊரடங்க தளர்வு குறித்து ஒரு சிக்கலான உணர்வையே கொண்டிருக்கிறார். “ இரண்டு மாதங்களுக்குப் பிறகு எனது சக பணியாளர்களை காணுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், எனக்கு சிறிது பயமாகவும் இருக்கிறது”  என்று சின்ஹுவாவிடம் கூறினார்.

கட்டுப்பாடுகளை இரவோடு இரவாக நீக்கலாம். ஆனால், வாணிப நிறுவனங்கள் மீண்டும் வாடிக்கையாளர்களை கவருவதற்கு காலமெடுக்கும்.

139032784_15886841646351n.jpg

உரோமிலுள்ள உணவகமொன்றின் பங்காளரான மாசிமில்லியானோ பெப்றிசியோ அரசாங்கத்தின் மீள்திறப்புக்கும் பொருளாரதாரத்தின் மீள் திறப்புக்கும் இடையே பெரிய வேறுபாடொன்றை காண்கிறார். “ இன்று எமது உணவகத்தை நாம் மக்கள் கோப்பியையும் உணவையும் வாங்கிச் செல்வதற்கு திறந்தோம். ஆனால், சொற்ப எண்ணிக்கையானோர் மாத்திரமே வந்து சென்றனர். திறந்தது நல்லதே. எமது வழமையான வாடிக்கையாளர்கள் சிலரை காண்பது சந்தோஷமாக இருந்தது. ஆனால், வீதிகளில் அதிகமானோரை காணவில்லை. நாம் எமது விற்பனைக்காக தங்கியிருக்கின்ற அயலில் உள்ள அலுவலகங்கள் முடியே கிடக்கின்றன. நல்லதே நடக்குமென்று தொடர்ந்து நம்புவோம். ஆனால் சகலதும் திறக்கும் வரை நிலவரங்கில் பெரும் மாற்றம் ஏற்படப்போவதில்லை. ” என்று அவர் கூறினார்.

மத்தியதரை கடற்தீவான சைப்ரஸ் உட்பட ஐரோப்பா பூராவும் ஓர் கலப்பான உணர்வையே காணக்கூடியதாக இருக்கிறது. மார்ச் 9 ஆம் திகதி முதலாவது கொரோனா தொற்றை உறுதிசெய்த சைப்ரஸ், அதற்குப் பிறகு கடந்த திங்கட்கிழமையே முதற்தடவையாக உள்நாட்டவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று எண்ணிக்கை பூச்சியமென்று அறிவித்தல் விடுத்தது.

6 வார கால கொரோனா வைரஸ் ஊரடங்குப் பிறகு, 25 ஆயிரம் சில்லறைக் கடைகளையும் கட்டட நிர்மாணத்துறை நிறுவனங்களையும் அவற்றின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதித்தன் மூலம் சைப்ரஸ் கடந்த திங்கட்கிழமை அதன் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கியது.

139032784_15886841646371n.jpg

மின்சார பொருட்களையும் வீட்டுப் பாவனை  உபகரணங்களையும் விற்பனை செய்யும் கடைகள் தள்ளுபடி விலைகளில் விற்பனையை செய்த காரணத்தினால் அவற்றின் முன்னால் நீண்ட வரிசையில் மத்தியில் காத்திருந்த அதேவேளை, உல்லாசப் பிரயாணிகள் பயன்படுத்தும் கடைகள் மற்றும் உணவகங்கள் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னரும் மூடியே கிடந்தன.

“இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், கிரேக்கம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே எமது வாடிக்கையாளர்கள். அவர்களில் எவரையும் மீண்டும் காண்பதற்கு நீண்ட காலமெடுக்கும்” என்று நினைவுப் பொருட்கள் கடையில் அலுமாரிகளை மீள ஒழுங்கு செய்திருந்தவேளையில் பெண்ணொருவர் கூறினார். வீட்டில் தொடர்ந்து தங்கியிருப்பதை விடவும் வேலை செய்வதை விரும்பியதால் அந்தப் பெண்மணி கடையைத் திறந்து வைத்திருக்கிறார்.

 

பழக்கப்படாத  வழமை வாழ்வு

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக 7 வாரங்கள் மூடியிருந்த ஆஸ்திரிய பாடசாலைகள் கடந்த திங்கட்கிழமை பட்டதாரி வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. அவற்றின் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசங்களை அணிந்துகொள்ளுதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் என்ற புதிய வழமைக்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள முயன்றுகொண்டிருக்கிறார்கள். 

பல பாடசாலைகளில் சமூக இடைவெளியை உத்தரவாதப்படுத்துவதற்காக வழமையான வகுப்பறைகளில் இல்லாமல், உடற்பயிற்சி கூடங்களில் பாடங்கள் நடத்தப்பட்டன. படிக்கட்டு கைப்பிடிகளில் தடை அறிவிப்பு நாடாக்கள் ஒட்டப்பட்டுள்ளன. தரையில் சமூக இடைவெளிக்கட்டுப்பாட்டுக் கோடுகளை காணக்கூடியதாக இருந்தன. பாடசாலைக்குள் சரியான முறையில் நடமாடுவதற்கான சுகாதார விதிமுறைகளும் அறிவுறுத்தல்களும் வாசலில் தெளிவாக காணப்பட்டன. 

139032784_15886841646351n.jpg

கிரேக்கமும் திங்கட்கிழமை படிப்படியாக வழமை வாழ்வுக்கு திரும்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் டாக்ஸிகள் மின் உயர்த்திகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வைத்தியசாலைகளில், மருந்தகங்களில் மற்றும் ஏனைய சுற்றி மூடப்பட்ட இடங்களில் பிரவேசிக்கும்போது முகக்கவசம் அணிவது அவசியம்.

சுமார் 50 நாட்கள் நீடித்த ஊரடங்கை போர்த்துக்கல்லும் திங்களன்று தளர்த்த ஆரம்பித்தது. பொதுப் போக்குவரத்து நிலையங்களில் பயணிகள் முகக்கவசங்களை அணிந்திருக்கிறார்களா? என்பதை கவனிப்பதற்கு பாதுகாப்பு  படைகளைக்கூட அனுப்பியிருக்கிறது.

12 பேருக்கு மேற்பட்ட சகலரும் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும்போது முகக்கவசங்களை அணிவதை கட்டாயமாக்கியதே, ஊரடங்கு  தளர்வின் முதற்கட்டத்தை திங்கட்கிழமை தொடங்கிய பெல்ஜியம் நாட்டில் பிரதமர் ஷோபீ வில்மஸ் அறிவித்த முதலாவது நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு பிரஜைக்கும் குறைந்த பட்சம் ஒரு முகக்கவசத்தை வழங்கும். 

ஐரோப்பியர்கள் முன்னர் ஒருபோதும் கற்பனை செய்துபார்த்திராத ஒரு மாற்றமாக, பிரதான ஐரோப்பிய நகரங்களின் வீதிகளில், முகக்கவசங்களை அணிந்துகொண்டு செல்வதே இப்போதைய தோற்றப்பாடாக இருக்கிறது.

139032784_15886841646331n.jpg

சீனா, தென்கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற கிழக்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக,  பொதுவெளியில் முகக்கவசங்களை அணிவது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பாவின் முகக்கவசங்களை  அணியும் மக்கள் கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப நாட்களில் விசித்திரமானவர்களாக நோக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது அந்தப் போக்கு மாறுகின்றது. வீட்டுக்குள் முடங்கி கிடக்குமாறு மக்களுக்கு விடுக்கப்பட்ட கட்டளையை ஐரோப்பிய நாடுகள் தளர்த்துகின்ற நிலையில், ஊரடங்குக்கு பின்னரான காலக்கட்டத்தில்முகக் கவசங்கள் முன்னரைக் காட்டிலும் மிகப் பெரியப் பங்கை முகக்கவசங்கள் வகிக்கப்போகின்றன.
 

https://www.virakesari.lk/article/81689

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

 

ஆனால், ஐரோப்பாவின் முகக்கவசங்களை  அணியும் மக்கள் கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப நாட்களில் விசித்திரமானவர்களாக நோக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது அந்தப் போக்கு மாறுகின்றது. வீட்டுக்குள் முடங்கி கிடக்குமாறு மக்களுக்கு விடுக்கப்பட்ட கட்டளையை ஐரோப்பிய நாடுகள் தளர்த்துகின்ற நிலையில், ஊரடங்குக்கு பின்னரான காலக்கட்டத்தில்முகக் கவசங்கள் முன்னரைக் காட்டிலும் மிகப் பெரியப் பங்கை முகக்கவசங்கள் வகிக்கப்போகின்றன.

அதெண்டால்.... உண்மைதான். முகமூடி அணிந்தவர்களை... 
"கொரோனா" தொற்று பிடித்தவர்கள் போல் விசித்திரமாக பார்த்தார்கள். 
இப்போ... அதுகும், வாழ்க்கைக்கு, அவசியமான  கவசம்  என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

கடைகளுக்கு முன்... ஆட்களை  வரிசையில் விட்டு, உள்ளே அனுப்புவதை கூட,
முன்பு  பலர் ரசிக்கவில்லை. மாறாக.. கோவப் பட்டதையும்,  பல இடங்களில் கண்டேன். 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.