Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசமைப்பு தேர்தல் ஜனநாயக நாடு என்ற நிலை மாறலாம் – அலன்கீனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசமைப்பு தேர்தல் ஜனநாயக நாடு என்ற நிலை மாறலாம் – அலன்கீனன்

அல்ஜசீரா- அசாட் ஹாசிம்

 

பொதுத்தேர்தல் தாமதமாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை மீளகூட்டுவதில்லை என்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட முக்கிய அரசமைப்பு வழக்கு தொடர்பில் இலங்கையின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

இந்த வழக்கு இலங்கையின் ஜனநாயகத்தின் மீது நீடித்துநிலைக்ககூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்டுவது தொடர்பில் உள்ள சட்டபூர்வதன்மை குறித்து ஆறுமனுதாரர்களும் ஜனாதிபதி சட்டத்தரணியும் விவாதிக்கும் விசாரணைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகின.
இந்த விவகாரத்தின் மையமாக உள்ளது,நாட்டின் பொதுத்தேர்தலாகும்,மார்ச் இரண்டாம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் தேர்தல் ஏப்பிரல் 25 ம் திகதி நடைபெறவிருந்தது.

Supreme-Court-591x394-3-300x200.jpg
கொரோனா வைரஸ் காரணமாகவும்,தேர்தலை நடத்தவதுடன் தொடர்புபட்ட சுகாதார நெருக்கடிகள் காரணமாகவும் தேர்தல் ஆணைக்குழு ஜூன் 20 ம்திகதிக்கு தேர்தலை பிற்போட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அரசமைப்பின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களிற்குள் தேர்தல் இடம்பெறவேண்டும்,புதிய நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

இந்த காலக்கெடு ஜூன் இரண்டாம் திகதியுடன் முடிவடைகின்றது இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி என்ற முக்கிய எதிர்கட்சியும் சிவில் சமூக அமைப்புகளும் நீதிமன்றம் சென்றுள்ளன.
வியாழக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதால் அதனை மீளகூட்டுவதற்கான சாத்தியமில்லை என வாதாடினார்.
இறந்து போன நாடாளுமன்றம் மீண்டும் உயிர்பெறாது என அவர் நீதிமன்றத்தில் தனது வாதத்தினை முன்வைத்தார்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அவசரசூழ்நிலைகளின் கீழ் மீண்டும் கூட்டுவதை இலங்கையின் அரசமைப்பின் ஒரு பிரிவு அனுமதிக்கின்றது என மனுதாரர்கள் வாதாடுகின்றனர்.
முன்னதாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தேர்தல் ஆணையகம் ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவித்தது.நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது என சுகாதார அதிகாரிகளிடமிருந்து சமிக்ஞை கிடைத்ததும் ஒன்பது முதல் 11 வாரங்களிற்குள் தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆணையகம் தெரிவித்தது.

262-3-300x193.jpg

இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1040 கடந்துள்ளது,ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.இவை அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள், எனினும் குறைந்தளவிலான சோதனை நடவடிக்கைகள் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் மேற்பார்வையின்றி

மார்ச் இரண்டாம் திகதி முதல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் மேற்பார்வையின்றி தனது அரசாங்கத்தை நிர்வகித்துவருகின்றார்.

Gotabaya-Rajapaksa-1-6-300x200.jpg
பொதுத்தேர்தல் இடம்பெற்று புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை அவர் அவ்வாறே செயற்படுவார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவிக்கின்றார்.
நாட்டை நிறைவேற்று அதிகாரம் கையகப்படுத்துவதே இங்கு இடம்பெறுகின்றது என இலங்கையின் அரசமைப்பு நிபுணர் அசங்க வெலிகம தெரிவிக்கின்றார்.asanka-300x168.jpeg
மூன்று பிரிவுகளும் அவசரநிலையை கையாள்வதற்காகவே உள்ளன என்பதை அரசமைப்பு தெளிவாக தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகாரம் இந்த சூழ்நிலையை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவதால் ஜனாதிபதி இதனை செய்ய மறுக்கின்றார் எனவும் தெரிவிக்கின்றார்.
இலங்கையின் அரசமைப்பின் படி இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் முக்கியமான பகுதி தொடர்பானது என அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையின் ஆட்சிமுறை நிறைவேற்று அதிகார முறையை ஜனாதிபதியும் பிரதமரும் பகிர்ந்துகொள்வதை அடிப்படையாக கொண்டது, சகோதரர்களான கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் இந்த பதவிகளை தங்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

mahinda-gota-300x169.jpg
கடந்த வருடம் நவம்பர் மாதம் கோத்தபாய ராஜபக்ச அதிகளவு மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்ட ஆட்சி, கடுமையான பாதுகாப்பு கொள்கைகள் குறித்து வாக்குறுதியளித்த பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றார்.

அவரது பிரச்சாரம் சிங்கள தேசியவாதிகளை கவரும் விதத்தில் அமைந்திருந்தது.
ஜனாதிபதியான பின்னர் அவர் இராணுவ அதிகாரிகளை பல முக்கிய பதவிகளிற்கு அமைச்சுகளின் தலைவர்களாக நியமித்தார்.மேலும் தனது அலுவலகத்திற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் மேலும் அதிகாரங்களை வழங்கினார்

தமிழ் கிளர்ச்சிக்காரர்களிற்கு எதிரான மூன்று தசாப்தகால யுத்தத்தில் மனித உரிமை மீறல்களிற்கு உள்ளாகினர் என நீதிமன்றில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்ற பல இராணுவ அதிகாரிகளிற்கு அவர் மீண்டும் பதவி நியமனங்களை வழங்கினார் பதவி உயர்வுகளை வழங்கினார்.

இலங்கை தனது ஆட்சி முறையில் பாரிய மாற்றம் ஏற்படும் தருவாயில் உள்ளது என சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கை குறித்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.
தேர்தல் ஜனநாயகமாக காணப்படும் நாடொன்றிற்கு இது நியாயமான விடயமல்ல அவர் தெரிவித்துள்ளார்
ஐந்து வருட காலமாக கிளர்ச்சி யுத்தம் பயங்கரவாதம் இயற்கை அனர்த்தம் என பலவற்றிற்கு மத்தியில் இலங்கையில் உறுதியாக காணப்பட்ட விடயம் அது இலங்கை அரசமைப்பு தேர்தல் ஜனநாயகம் என்பதே என அவர் தெரிவித்துள்ளார்.
இது இனி மாறலாம் என அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.

keenan-alan-2-300x300.jpg
ஒட்டுமொத்த ஆட்சி தொடர்பாக தமது மனுவில் பல கேள்விகளை எழுப்பியுள்ள மனுதாரர்கள் அரசாங்கம் நிதியை செலவிடுவது மற்றும் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு அற்ற நிலையில் நிதியை செலவிடுவதற்கான அரசாங்கத்திற்குள்ள அதிகாரம் ஆகியவை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எந்த அரசாங்கத்தின் நிதியையும் பொறுத்தவரையிலும், மூன்று மாதகால நிதியை செலவிட்டால் அதன் பின்னர் நீங்கள் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறவேண்டும் என்கின்றார் தேர்தல் கண்காணிப்பிற்கான மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கின்றார்.
தற்போது நிறைவேற்று அதிகாரம் மாத்திரமே செயற்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன் காரணமாகவே நாங்கள் நாடாளுமன்றம் அவசியம் என கோருகின்றோம் என தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தினால் மாத்திரமே நிறைவேற்று அதிகாரத்தினை கட்டுப்பாட்;டின் கீழ் வைத்திருக்க முடியும் என குறிப்பிடும் அவர் ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றார்.
2018 ஒக்டோபரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினை கலைக்க முயன்றவேளை இவ்வாறான நெருக்கடியொன்று ஏற்பட்டது.
நீண்ட கால நெருக்கடியின் பின்னர் நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
அரசியல் ரீதியில் நவம்பரில் கோத்தபாய ராஜபக்ச பெற்ற தேர்தல் வெற்றி காரணமாக அவர் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அரசாங்கம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளிற்கும் பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்றது.
அரசாங்கம் ஊரடங்கினை வேகமாக அமுல்படுத்தியதுடன் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வ எண்ணிக்கை குறைவானதாக காணப்படுகின்றது.
வைரசினை கட்டுப்படுத்துவதில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது என்கின்றார் சர்வதேச நெருக்கடி குழுவின் அலன்கீனன்.
இந்த அரசாங்கத்தின் திறமை யையும் முன்னைய அரசாங்கத்தின் முற்றிலும் திறனற்ற தன்மையையும் கருத்தில்கொள்ளும்போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது என தெரிவிக்கின்றார் அலன் கீனன்.
தேர்தலைகூடிய விரைவில் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம் என அலன் கீனனும் ஏனைய ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.
இது அரசமைப்பினை ராஜபக்ச மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும்;.
கொரோனா வைரசிற்கு முந்தைய சூழலில் அவர்கள் 19வது திருத்தத்தினை எதிர்ப்பது தெளிவாக தெரிந்தது அவர்கள் அதi மாற்றியமைக்க முயல்வார்கள் என்கின்றார் அசங்க வெலிகல
எனினும் இதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தின் மேற்பார்வையின்றி ஆட்சி செய்ய முடியுமா என்ற கேள்வி காணப்படும்.
கூடிய விரைவில் தேர்தலை நடத்தி அதில் சிறந்த வெற்றியை பெறுவதே அரசாங்கத்தின் முதல் விருப்பமாக காணப்படும் என்கின்றார் அலன் கீனன்.
ஆனால் அவர்கள் உண்மையாகவே தேர்தல் குறித்து விருப்பம் கொண்டுள்ளார்களா?அல்லது அரசமைப்பிற்கு அப்பாற்பட்ட விதத்தில் ஆட்சியை கொண்டு செல்ல விரும்புகின்றார்களா?அரசாங்கத்தினால் எவ்வளவு காலம் அதனை செய்ய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

Gotabaya-Rajapaksa-may-19-4-300x168.jpg
இலங்கை முன்னர் அறியப்படாத அரமைப்பு நெருக்கடிக்குள் அல்லது அரசமைப்பிற்கு முரணான நெருக்கடிக்குள் சிக்குண்டால் ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கியமக்கள் சக்தியும் தங்கள் மத்தியிலான மோதலை கைவிட்டுவிட்டு சில அரசமைப்பு கொள்கைககளை காப்பாற்ற போரிடுவார்களா எனவும் அலன்கீனன் கேள்வி எழுப்புகின்றார்

http://thinakkural.lk/article/43011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.