Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தவிக்கும் தமிழர்கள்: விமான சேவை எப்போது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தவிக்கும் தமிழர்கள்: விமான சேவை எப்போது?

 

spacer.png

சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக அளவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவர்களை மீட்பதற்காக 'வந்தேபாரத்' எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்ப வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் லண்டனில் உள்ள தமிழர்களை மீட்பதற்காக பேஸ் ஒன்றில் கடந்த மே 14ஆம் தேதி சென்னைக்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சுமார் 300 பேர் வரை தாயகம் வந்தடைந்தனர்.

 

லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முறையாகப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீட்பதற்காக இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக இயக்கப்பட வேண்டிய விமானங்கள் இயக்கப்படவில்லை. திடீரென மீட்பு விமான சேவை நிறுத்தப்பட்டதால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும், குறிப்பாக தமிழகத்தை அடுத்துள்ள அண்டை மாநிலங்களுக்கும் லண்டனில் இருந்து இயக்கப்படும் மீட்பு விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு லண்டனில் இருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்படுவதை போல் தமிழகத்துக்கும் இயக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு லண்டன் தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தவண்ணமுள்ளனர். இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்ப ஏராளமான மனுக்களை எழுதியுள்ளனர். மேலும் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன்(Indian High Commission) அலுவலகம் முன்பும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகளைத் தவிர, மருத்துவ சிகிச்சைக்காகவோ அல்லது தொழில் ரீதியாகவோ அங்கு சென்ற மாணவர்கள் மற்றும் மக்கள்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் தொலைபேசியில் பேசிய வார்விக் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், "மதுரையில் வசிக்கும் எனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு வாழ இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள். என் அம்மா உதவியற்றவராக இருக்கிறார். நான் இங்கே மாட்டிக்கொண்டேன். நாங்கள் திரும்பப் பெற நிறைய வழிகளை முயற்சி செய்தோம், ஆனால் எதுவும் செயல்படவில்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றவர்களால் தாங்கள் வழக்கமாக வாங்கும் மருந்துகளை வாங்க முடியவில்லை எனக் கூறுகின்றனர். தெற்கு ஹாம்ப்டனைச் சேர்ந்த 28 வயதான கசால், "என் தந்தையும் தாயும் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரும் நீரிழிவு நோயாளிகள், இந்திய மருந்துகளின் அடிப்படையில் மருந்துகளைப் பெற முடியவில்லை. தற்காலிகமாக நாங்கள் இங்கு ஒரு மருத்துவரைச் சந்தித்தோம். ஆனால், அவர்கள் 14 நாட்களுக்கு மேல் மருந்துகள் கொடுக்க தயங்கினர். இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் நாளின் ஒவ்வொரு நிமிடமும் நான் அச்சத்தில் இருக்கிறேன். தமிழக அரசு ஏதாவது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

அண்மையில் லண்டன் வாழ் தமிழர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் மனுக்களை தொடர்ச்சியாக அனுப்பியும், வீடியோ வடிவில் கோரிக்கை விடுத்தும் தாங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த சியாமளா என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "இங்கே இதய நோயாளிகள் இருக்கிறார்கள், சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். அதே போல ஊரிலும் அப்பா, அம்மா என ரத்த உறவுகளும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களை சென்று பார்க்க வேண்டும். இங்கே ஒரு மீட்பு விமானமும் இல்லை. ஆனால், கொச்சின், விஜயவாடா, டெல்லி, மும்பை என மற்ற நகரங்களுக்கு விமானம் இருக்கிறது. எங்களுக்கு மட்டுமில்லை. இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது, தமிழர்கள் மட்டும் இங்கே மாட்டிக்கொண்டுள்ளோம். அது எந்த விதத்தில் சரி என்று எங்களுக்கு தெரியவில்லை.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கும் பொறுப்புணர்வு இருக்கிறது. நாங்கள் யாரும் சென்னை வந்தவுடன் தனிமைப்படுத்தப்படாமல் வெளியே செல்வதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு ஒரே ஒரு மீட்பு விமானம் மட்டும் கொடுங்கள்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த கிருஷ்ணா வெளியிட்ட பதிவில், "இந்திய தூதரகம் சென்னைக்கு விமான சேவை துவங்கினால் மட்டுமே எங்களை வெளியேற்றுவதைக் குறித்து ஆலோசிக்க முடியும் என கூறிவிட்டது. அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. எப்போது ஊர் திரும்புவோம் என தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். எங்களை சீக்கிரம் இங்கிருந்து வெளியேற்ற உதவி செய்யுங்கள். நன்றி" எனக் கூறியுள்ளார்

 

https://minnambalam.com/public/2020/06/05/9/tamil-people-in-london-waiting-to-reach-their-home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.