Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநில அரசு எனக்கு உதவ வேண்டும்; தடைசெய்த மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை: 4 ஆண்டு தடையை எதிர்த்து கோமதி மாரிமுத்து மேல்முறையீடு செய்ய முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாநில அரசு எனக்கு உதவ வேண்டும்; தடைசெய்த மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை: 4 ஆண்டு தடையை எதிர்த்து கோமதி மாரிமுத்து மேல்முறையீடு செய்ய முடிவு

gomathi-marimuthu-gets-four-year-doping-ban-to-appeal-to-cas  

2019 ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் 800மீ பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டெராய்ட் நான்ட்ரோலன் இருந்தது பி சாம்பிளிலும் உறுதி செய்யப்பட்டதால் அவர் 4 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார், அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.

மார்ச் 18 முதல் மே 17, 2019 வரையிலான இவரது சாதனைகள் அனைத்தும் சாதனைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டன. தமிழ்நாடு தடகள பதக்கங்கள், சான்றிதழ்கள், தரவரிசைப்புள்ளிகள், பணம் ஆகியவை திரும்பப் பெற்றுள்ளன

இவரது ஏ சாம்பிள் பரிசோதனையில் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாகத் தெரிந்ததையடுத்து கடந்த மே மாதம் இவர் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டார், மேலும் தடகள நேர்மை குழுவுக்கு 28 நாட்களுக்குள் சட்ட மற்றும் பிற செலவுகளுக்காக 1000 பவுண்டுகள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டார்.

இது தொடர்பாக ஏ.எஃப்.ஐ. தலைவர் அடில் சுமரிவாலா கூறும்போது, இந்த வழக்கில் ஏ.எஃப்.ஐ. ஈடுபடாது, ஊக்க மருந்து விவகாரத்தை நாங்கள் எப்பவும் ஊக்குவிக்க மாட்டோம். ஒவ்வொரு ஆண்டும் 1500 பரிசோதனைகளைச் செய்கிறோம். ஊக்கமருந்தை கிரிமினல் குற்றமாக மாற்ற முயற்சிகள் செய்து வருகிறோம், என்றார்.

இந்நிலையில் ஸ்போர்ட்ஸ்டார் தி இந்துவுக்கு பேசிய கோமதி, “நான் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறேன், மாநில அரசு எனக்கு உதவ வேண்டும். தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை, நான் சாப்பிட்ட நான்-வெஜிடேரியன் உணவில் தடைச்செய்யப்பட்ட பொருள் இருந்திருக்கலாம். NADA என்னிடம் இந்த விவகாரத்தி முன் கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் நான் இதிலிருந்து மீண்டிருப்பேன், அனாவசியமாக தோஹாவில் அவமானத்தைச் சந்திக்க நேர்ந்திருக்காது” என்றார்.

https://www.hindutamil.in/news/sports/558555-gomathi-marimuthu-gets-four-year-doping-ban-to-appeal-to-cas.html

 

 

 

வேணுமென்றே யாராவது கலந்து கொடுத்திருக்கலாம்🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஆசிய சாம்பியன் தங்கப்பதக்கமும் பறிப்பு: ஏஐயு நடவடிக்கை

800m-runner-gomathi-marimuthu-stripped-of-asian-championships-gold-banned-for-4-years கோமதி மாரிமுத்து : கோப்புப்படம்

புதுடெல்லி

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடையும், கடந்த 2019-ம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வென்ற தங்கப்பதக்கத்தையும் பறித்து ஏஐயு அறிவித்துள்ளது.

இதன்படி கோமதி மாரிமுத்து 2023-ம் ஆண்டு மே மாதம் வரை எந்தவிதமான தடகளப் போட்டியிலும் பங்கேற்க முடியாது, கடந்த ஆண்டு இரு மாதங்களிலிருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்பதிலிருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கத்தாரின் தோஹா நகரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீ்ட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் எனும் பெருமையை கோமதி மாரிமுத்து பெற்றார்

1592023030756.jpg

ஆனால் கோமதி மாரிமுத்துவுக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் அனபாலிக் ஸ்டீராய்ட் நான்ட்ரோலன் மருந்து எடுத்தது கண்டுபடிக்கப்பட்டது. இருப்பினும் கோமதி மாரிமுத்துவிடம் பி மாதிகள் எடுக்கப்படாததால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கோமதி மாரிமுத்துவிடம் எடுக்கப்பட்ட பி மாதிரியிலும் அவர் ஸ்டெராய்ட் நான்ட்ரோலின் மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

மேலும், கோமதி மாரிமுத்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஊக்க மருந்து சோதனை எடுப்பதற்கு முன், இந்தியாவில் நடத்தப்பட்ட 3 பரிசோதனையிலும் அவருக்கு பாஸிட்டிவ் இருந்தது தெரியவந்தது. அதன்பின்புதான் ஆசிய தடகளத்தில் பங்கேற்று அவர் பதக்கம் வென்றுள்ளார் .

இதன்படி கோமதி மாரிமுத்து கடந்த 2019- மார்ச் 18 முதல் மே 17-ம் தேதி வரை பங்கேற்ற அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், கோமதி மாரிமுத்து தமிழகம் சார்பில் பெற்ற பதக்கங்கள், ரேங்கிங் பெற்ற பரிசுகள், பணமுடிப்பு அனைத்தும் திரும்பப்பெறப்பட உள்ளது

தற்போது ஏஐயு விதித்த தடைக்கு எதிராக கோமதி மாரிமுத்து விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி உண்டு

https://www.hindutamil.in/news/sports/559187-800m-runner-gomathi-marimuthu-stripped-of-asian-championships-gold-banned-for-4-years-1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.