Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழா நடத்தியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழா நடத்தியது

ராஜலட்சுமி  தொழில்நுட்பக் கல்லூரி நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழா நடத்தியது

 

கோவிட் 19 அச்சுறுத்தல் சூழலில் நாட்டிலேயே முதன்முறையாக ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் ராஜலட்சுமி பொறியியற் கல்லூரி மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்தி பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
 
மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தரவரிசையில் இடம்பிடித்து கல்லூரியை பெருமை பெறச் செய்த மாணவர்களை கவுரவித்தார். அஷ்ரிதா கே(ஐடி-12வது இடம்), முத்துவேல் சி(மெக்கானிக்கல்-15வது இடம்), அஷ்வதி எம்(சிஎஸ்இ-19வது இடம்) ஆகியோர் சான்றிதழையும் பட்டத்தையும் பெற்றனர்.
 
இந்நிகழ்வில் ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர். திருமதி.தங்கம் மேகநாதன், துணைத் தலைவர் டாக்டர் ஹரி ஷங்கர் மேகநாதன், ஆலோசகர் டாக்டர் சி.ஆர்.முத்துக்கிருஷ்ணன், முதல்வர் டாக்டர் எம்.வேலன், இயக்குநர் டாக்டர் ஆர்.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் 453 மாணவ, மாணவியர் வீட்டில் இருந்தவாறே பாதுகாப்பாக பட்டம்  பெற்றனர்.
இந்நிகழ்வை மாணாக்கர்களின் பெற்றோரும் குடும்ப உறுப்பினர்களும் கண்டுகளித்தனர். இணைய தளம் வழியாக மாணாக்கர்கள், பெற்றோர்கள், தலைவர், துணைத் தலைவர், ஆலோசகர், முதல்வர், துறைத் தலைவர்கள் ஒரே நேரத்தில் இந்நிகழ்வில் இணைந்தனர். இதன் பின் இணைந்த ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனை அனைவரும் வரவேற்றனர். இதன் பின் குழுமத் தலைவர் டாக்டர் தங்கம் மேகநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
மெய்நிகர் பட்டமளிப்பு விழாவை நடத்தியதன் மூலம் உயர் கல்வி நிறுவனங்களுக்கு புதிய பாதையை தங்கள் நிறுவனம் காட்டியுள்ளது பெருமிதம் தருவதாக குறிப்பிட்டார். தெலங்கானா ஆளுநர் இந்நிகழ்வில் பங்கேற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் குழுமத்தின் தலைவர் குறிப்பிட்டார். 
 
202006101633563157_rit-inner._L_styvpf.gபட்டம் பெற்ற மாணாக்கர்கள் சொந்த வாழ்விலும் தொழில் ரீதியாகவும் வெற்றிகரமாக திகழ வாழ்த்துவதாகவும் டாக்டர் திருமதி தங்கம் மேகநாதன் குறிப்பிட்டார். மாணாக்கர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தத்தமது குடும்பத்திற்கும் கல்லூரிக்கும் புகழ் சேர்ப்பார்கள் என நம்புவதாகவும் தங்கம் மேகநாதன் பேசினார். கால மாற்றத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் தங்கள் கல்விக் குழுமம் எப்போதும் முன்னோடியாக திகழ்வதாகவும் அந்த வகையில் தற்போது மெய்நிகர் பட்டமளிப்பு விழா நடத்தியது மூலம் புதிய பாதையை காட்டியதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
அடுத்து பேசிய துணைத் தலைவர் டாக்டர் ஹரி ஷங்கர் மேகநாதன், பல்வேறு தடைகளை சமாளித்து உயர்ந்த இடங்களை அடைந்த இரு பெண்மணிகள் இவ்விழாவில்  பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டார். 
கடின உழைப்பு, சிறந்த சேவைக்கு உதாரணமாக திகழும் டாக்டர்.தமிழிசை சவுந்தர்ராஜன், டாக்டர் திருமதி தங்கம் மேகநாதன் ஆகியோர் முதல் மெய்நிகர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதில் கல்லூரி பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டார். 
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டமளிப்பு விழா நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அப்போதுதான் இணைய தளம் வாயிலாக மெய்நிகர் பட்டமளிப்பு விழா நடத்தும் யோசனை உதித்ததாகவும் தெரிவித்தார். இந்த யோசனையை சாத்தியமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி எனவும் டாக்டர்.ஹரிஷங்கர் மேகநாதன் தெரிவித்தார். தொழில்நுட்பத் தின் உதவியால் உயர் கல்வியை உன்னத நிலைக்கு உயர்த்த முடியும் என்பதை காட்டிய நாள் இது என்றும் அவர் பேசினார்.
 
பின்னர் 2019-20ஆம் ஆண்டுக்கான கல்லூரியின் ஆண்டறிக்கையை  கல்லூரி முதல்வர் டாக்டர். எம்.வேலன் சமர்ப்பித்தார். தொற்றுநோய் பயம் மிகுந்த இக்கால கட்டத்தில் வீட்டில் இருந்தவாறே பாதுகாப்பான முறையில் பட்டம் பெற உதவிய கல்லூரி நிர்வாகத்திற்கு பெற்றோரும் மாணவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.