Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுக்காக மகன் உயிரை தியாகம் செய்ததை இட்டு பெருமை -லடாக் மோதலில் பலியான இராணுவ வீரரின் தாய் உருக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக மகன் உயிரை தியாகம் செய்ததை இட்டு பெருமை -லடாக் மோதலில் பலியான இராணுவ வீரரின் தாய் உருக்கம்

எனது ஒரேயொரு மகனை பறிகொடுத்ததை இட்டு நான் மிகவும் துயர் அடைகின்றேன். எனினும் நாட்டுக்காக தனது உயிரை அவர் தியாகம் செய்ததை இட்டு நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு லடாக் மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கேணல் சந்தோஷ் பாபுவின் தாயாரான மஞ்சுளா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று மகனுடன் கடைசியாக பேசியதாக தெரிவித்த அவர் அங்கிருந்து வரும் தகவல்கள் குறித்து விசாரித்தபோது,அதை நம்ப வேண்டாம் எனவும், உண்மையான நிலவரம் வேறு எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மகன் இறந்த தகவலை முதலில் நம்ப மறுத்ததாக கூறும் தந்தை உபேந்தர், உண்மை அதுவென தங்களுக்கு பின்னர் தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ani_mic_logo_normal.jpg
 · 8h
 

At least 20 Indian soldiers killed in the violent face-off with China in Galwan valley in Eastern Ladakh. Casualty numbers could rise: Government Sources

View image on Twitter
 

Feeling sad that I lost my only "Son" and at the same time feeling proud that my son sacrificed his life for the nation says Manjula mother of Col.Santosh Babu who was martyred by #ChineseArmyinLadakh #warherosantoshbabu

Retweet 🙏🇮🇳pic.twitter.com/oyjVUUYjhq

 
Embedded video
 
 

you may like this

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

 

இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பதிவு: ஜூன் 17,  2020 05:45 AM
சென்னை,

இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்துவின் மகன் ராணுவ வீரர் கே.பழனி உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

ரூ.20 லட்சம்

இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கலெக்டர் மரியாதை

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17020803/Tamil-Nadu-war-heros-family-gets-relief-from-Rs-20.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மகனின் இழப்பை எங்களால் தாங்க முடியவில்லை: எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர் சந்தோஷ் பாபுவின் பெற்றோர் வேதனை

we-are-in-deep-shock-say-parents-of-col-santosh-babu-who-lost-his-life-in-violent-face-off-with-chinese-soldiers சீன ராணுவத்துடனான மோதலில் வீர மரணம் எய்திய சந்தோஷ் பாபுவின் பெற்றோர். | ஏஎன்ஐ

கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டையில் வீர மரணம் அடைந்த தெலங்கானாவைச் சேர்ந்த ராணுவ கமாண்டிங் அதிகாரி சந்தோஷ் பாபுவின் பெற்றோர் தங்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

16 பிஹார் ரெஜிமண்டில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கமாண்டிங் ஆபிசராகப் பணியாற்றி வந்தார் சந்தோஷ் பாபு. சீனாவுடன் ஏற்பட்ட சண்டையில் இவர் வீரமரணம் அடைந்தார். இவர் தெலங்கானா மாநிலம் சூரியாபேட் பகுதியைச் சேர்ந்தவர்.

எதிர்பாராத இந்த மரணத்தினால் சந்தோஷ் பாபுவின் பெற்றோரான உபேந்தர் மற்றும் மஞ்சுளா தங்களால் நம்ப முடியவில்லை என்றும் பிறகுதான் உயரதிகாரிகள் தகவல் தெரிவித்ததையடுத்தே அதிர்ச்சித் தகவல் எங்களை தீரா வேதனையில் ஆழ்த்தி விட்டது என்று தெரிவித்தனர்.

சந்தோஷ் பாபுவின் தாய் மஞ்சுளா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குக் கூறும்போது, “நேற்று மதியம் 2 மணியளவில் எங்களுக்குச் செய்தி வந்தது. எங்கள் மகன் வீர மரணம் அடைந்தான் என்ற செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை” என்றார்.

கலோனல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்தர் கூறும்போது, “நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தோம், எங்கள் மகன் மரணமடைந்த செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் சந்தோஷ் மிகவும் தைரியமானவன். கடந்த 15 ஆண்டுகளாக அவன் வெற்றியடைந்து வந்திருக்கிறான்.

நான் உடனே ஒரு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். பிறகு ராணுவத்தின் பல அதிகாரிகளும் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த போதுதான் எங்கள் மகன் உயிர்த்தியாகம் தெரியவந்தது. இந்த ராணுவ அதிகாரிகள்தான் சந்தோஷ் உடலை சூரியாபேட் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இன்று மாலை எங்கள் மகன் சந்தோஷ் உடல் சூரியாபேட் வந்து சேரும். அதிகாரிகளும், தலைவர்களும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியும் தைரியமும் அளித்துள்ளனர்” என்றார்.

https://www.hindutamil.in/news/india/559811-we-are-in-deep-shock-say-parents-of-col-santosh-babu-who-lost-his-life-in-violent-face-off-with-chinese-soldiers-1.html

அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.