Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8 லட்சம் மரங்கள், குறுங்காடுகள்... வனத்துக்குள் திருப்பூர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8 லட்சம் மரங்கள், குறுங்காடுகள்... வனத்துக்குள் திருப்பூர்!

 

குறுங்காடு

 

சுற்றுச்சூழல்: ஒரு லட்சம் மரம் என்ற இலக்குடன் களமிறங்கி, 5 வருடங்களில் 8 லட்சம் மரங்களை வளர்த்து வருகிறது 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பு.

தங்கள் கட்சித் தலைமையின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இத்தனை லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது என ஒவ்வொரு கட்சியும் அறிக்கைக் கொடுக்கும். அவர்கள் சொன்ன கணக்கில் உண்மையாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தால் இன்றைக்குத் தமிழகமே பசுமை வனமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் காகிதங்களில் அறிக்கை மற்றும் கணக்கில் மட்டும் மரம் வளர்ப்பவர்கள்.

குறுங்காடு

மரக்கன்றுகளை நடவு செய்வது என்றால் என்ன என்பதைத் திருப்பூரைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ’வனத்துக்குள் திருப்பூர்’ என்ற அமைப்பு, கடந்த 5 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சம் மரங்களை நடவு செய்து வளர்த்து வருகிறது. அடுத்த இலக்காக 10 லட்சம் மரங்களை நோக்கித் தனது பயணத்தை ஒன்று தொடங்கியது வனத்துக்குள் திருப்பூர்.

10 லட்சம் மரக்கன்றுகள் நடவுக்கான திட்டம்பற்றிப் பேசிய வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சிவராம், ''2015-ம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக, அவரது லட்சியங்களில் ஒன்றையாவது கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் வனத்துக்குள் திருப்பூர் இயக்கம். மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் என இதுவொரு கூட்டு முயற்சி. பலர் நன்கொடையாளர்களாகவும் இருக்கிறார்கள்.

எங்கள் மாவட்டத்தைப் பசுமை போர்வை போர்த்திய மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். ஒரு லட்ச மரக்கன்றுகளை நடவு செய்யத் திட்டமிட்டு செயலில் இறங்கினோம். ஆண்டு முடிவில் 1,35,000 மரக்கன்றுகளை நடவு செய்தோம். மரக்கன்றுகளைப் பாதுகாத்து வளர்க்கும் பணியையும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு எடுத்துக்கொண்டது. இதன் வெற்றி, இன்னும் பல லட்சம் மரங்களை நடவு செய்து, திருப்பூர் மாவட்டத்தையே பசுமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

வனத்துக்குள் திருப்பூர்
 
வனத்துக்குள் திருப்பூர்
விவசாய நிலங்களில் நடவு செய்துக்கொடுக்கிறோம். அதன் மூலம் விவசாயிகளுக்கும் ஒரு வருமானத்தை உறுதிசெய்கிறோம். சூழலும் காக்கப்படுகிறது. அமைப்பு மூலமாகவே மரக்கன்றுகளை நடவு செய்துக்கொடுக்கிறோம். விவசாயிகள் முழுமையாக வளர்த்தால் போதும்.
சிவராம்

மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம். சாலையோரங்களில் நடவு செய்தால் பாதுகாப்பு இருக்காது என்பதற்காக விவசாய நிலங்களில் நடவு செய்துக்கொடுக்கிறோம். அதன் மூலம் விவசாயிகளுக்கும் ஒரு வருமானத்தை உறுதிசெய்கிறோம். சூழலும் காக்கப்படுகிறது. அமைப்பு மூலமாகவே மரக்கன்றுகளை நடவு செய்துகொடுக்கிறோம். விவசாயிகள் முழுமையாக வளர்த்தால் போதும். நடவு செய்த மரங்களை முழுமையாக வளர்க்கிறார்களா? என ஆய்வு செய்யவும் எங்களிடம் ஒரு குழு இருக்கிறது.

விஜய கார்த்திகேயன்
 
விஜய கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 5 திட்டங்கள் மூலம் 8 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்த்து வருகிறோம். 6வது திட்டம்10 லட்சம் மரங்கள் என்ற இலக்கை அடைய இருக்கிறது. இதுவரை மாவட்டத்தில் பல இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கியுள்ளோம். இதனால் காற்றில் கார்பன் அளவு குறைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கம் உருவாகியுள்ளது. இதைச் சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. வெகுவிரைவில் திருப்பூரைப் பசுமை வனமாக மாற்றிக்காட்டுவோம்'' என்றார்.

6வது திட்டத்துக்கான தொடக்க விழா, இன்று காலை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வயக்காட்டு புத்தூர் கிராமத்தில் மணி என்பவரது தோட்டத்தில் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் நடந்த இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் கலந்துகொண்டு மரக்கன்றை நடவு செய்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசியவர்,

மரக்கன்று நடவு
 
மரக்கன்று நடவு

''ஒவ்வோர் ஊருக்கும் ஒரு நிகழ்வு அடையாளமாக இருக்கும். திருப்பூருக்கான அடையாளமாக இருக்கிறது ’வனத்துக்குள் திருப்பூர்’. மரம் நடுவதற்கான அடையாளமாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் பசுமை போர்வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இது நம்மைத் தாண்டி நமது தலைமுறைகள் பேசப்படும். இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு முயற்சியில் நான் பங்கெடுத்தேன் என்பதே பெருமைக்குரிய விஷயம். ஒரு செடியை நடவு செய்து, தண்ணீர் ஊற்றி மரமாக்குவது சாதாரண பணியில்லை. இதில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுவொரு வாழ்நாள் சாதனை.

இந்தப் பணி 6 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 8 லட்சம் மரங்களை வளர்த்து உள்ளீர்கள். இன்னும் 2 லட்சம் மரங்கள் நட உள்ளீர்கள். 10 லட்சம் மரங்களை நடுவது இந்திய அளவில் பெருமையான விஷயம். இந்த மாடலை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும்.

வனத்துக்குள் திருப்பூர்
 
வனத்துக்குள் திருப்பூர்

ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்வது கஷ்டம். அதையே குழுவாகச் செய்தால் சுலபமாகச் செய்யலாம். அதை வனத்துக்குள் திருப்பூர் சிறப்பாகச் செய்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் நிகழ்ச்சியைத் தள்ளிப்போடாமல், சரியான விதிமுறைகளோடு இதைச் செயல்படுத்தியுள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்'' என்றார்.

 

 

https://www.vikatan.com/news/environment/know-about-the-ngo-that-plants-trees-all-over-tiruppur

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.