Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு காரணம் என்ன? மங்களேஸ்வரி சங்கர் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு காரணம் என்ன? மங்களேஸ்வரி சங்கர் நேர்காணல்

July 23, 2020
  • புவிநெசராசா கேதீஸ்

“வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வடக்கு வடக்கு மாகாணசபையாகவும் கிழக்கு கிழக்கு மாகாணசபையாகவும் இருப்பதால் பிரச்சனை இல்லை. இரண்டுமே இரண்டு வகையான தேவைகளை கொண்ட மாகாணங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மங்களேஸ்வரி சங்கர்.

mangala-shangar.pngகேள்வி ; தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்குவீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், திடீரென அந்த நிலைமை மாறி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் போட்டியிடுகிறீர்கள். இதன் பின்னணி என்ன?

ஒரு சட்டத்தரணியாக கடந்த 20 வருடங்களாக எனது பணியை செய்து கொண்டிருந்தேன். எனது சேவைகளை அவதானித்த மட்டக்களப்பை சேர்ந்த நான் பிறப்பதற்கு முதலே அரசியலில் ஈடுபட்ட ஒரு மூத்த அரசியல்வாதியினால் எனது பெயர் தமிழரசுக்கட்சியில் சிபார்சு செய்யப்பட்டிருந்தது. எந்த அரசியல் ஆசையுமின்றி எனது தொழிலை நான் செய்துகொண்டிருக்கும் போதுதான் இந்த கேள்வி வந்தது. 17 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் நான் ஒருவரே பெண் வேட்பாளராக விண்ணப்பித்திருந்தேன்.

பெண்களுக்கு உரிய வாய்ப்பு வழங்குவார்கள். எனவே எனது தெரிவு உறுதி என்கின்ற நம்பிக்கையும் என்னிடம் இருந்தது. ஆனால் இடையில் எனது விண்ணப்பம் தெரிவுசெய்யப்படவில்லை. அரசியலுக்கு வருமாறு என்னிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் நான் எற்கனவே சில முடிவுகளை எடுத்திருந்தேன். அரசியலுக்குள் வந்தால் இந்த இந்த பணிகளை செய்ய வேண்டும் என்ற கனவோடுதான் நான் வந்தேன் .தெரிவில் இடையில் நடந்த இந்த அசம்பாவிதம் காரணமாக தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்குள் ஒரு பெண் வேட்பாளர் இல்லாத நிலை ஏற்பட்டது . நான் வகித்த பதவிகளை இராஜனாமா செய்துவிட்டுதான் மக்களுக்கான அரசியல் பணியை முன்னெடுக்க கனவுடன் வந்திருந்தேன் .

பல கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். தங்கள் கட்சிக்கு ஊடாக மக்களுக்கு சேவை செய்ய வாருங்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் என்னை அழைத்தார்கள். அவர்களின் கட்டமைப்பு தொடர்பாக ஆராய்ந்ததில் இவர்கள் உண்மையாகவே பெண்களை கட்சிக்குள் உள்வாங்கி பெண்களுக்கான பங்களிப்பை வழங்கி சேவை செய்யும் கட்டமைப்பை கொண்டிருக்கின்றார்கள் என்று அறிந்துகொண்டேன். இந்த கட்சிக்காக நான் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. எனக்கு வாய்ப்பு வழங்குவதால் கட்சிக்குள் பிரச்சனைகள் இல்லையா என நேரடியாகவே கேட்டிருந்தேன். அதற்கு அவர்கள் கூறியிருந்தார்கள். இது ஜனநாயக கட்சி. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பல துறை சார்ந்த புத்திஜீவிகளை உள்வாங்கி பெண்களுக்குரிய இடத்தையும் வழங்கி போட்டியிடவுள்ளோம்.

அந்த வகையில் நீங்கள் கட்டாயம் இத்தேர்தலில் எமது கட்சியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நான் நினைக்கின்றேன் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளேன் என்று.

எனது விண்ணப்பம் நிராகரிப்பு தொடர்பாக கூட்டமைப்புக்குள் கூறப்பட்ட கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை ஊடகங்கள் வாயிலாக அவதானித்தேன். நான் தமிழரசுக்கட்சி பரம்பரையில் இருந்து வந்த நான் என்னை சிபார்சு செய்தவர்கள் நான் பிறப்பதற்கு முன்பே அரசியலில் ஈடுபட்டவர்கள். மட்டக்களப்பு தலைமைக்கும் அவர்களின் தலைமைக்கும் இடையிலான கருத்தில் முரண்பாடுகள் இருந்தது.

த.தே.கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற எட்டு பேருமே ஆண்களாக காணப்படுகின்றார்கள். பெண்களுக்கான வாய்ப்பை வழங்கும் மனநிலையே இல்லாதவர்களாக உள்ளார்கள்.

நான் தற்போது எடுத்துள்ள முடிவு தொடர்பாக சந்தோஷப்படுகின்றேன். தற்போது எனக்கான ஆதரவு அடிமட்டம் முதல் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நான் போட்டியிடவுள்ள இந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல புத்திஜீவிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

பெண்களுடைய பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் மிக அரிதாகவுள்ள நிலையில்,இந்த தேர்தலில் தங்களுடைய வெற்றிவாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமூலம் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீடு காரணமாகவே இப்போதைக்கு 23 வீதத்தை தக்க வைக்கக்கூடியதாக உள்ளது. இரண்டாவது மாகாண சபையை எடுத்துக்கொண்டால் நான்கு விகதமே பெண்கள் உள்ளார்கள். பாராளுமன்றத்தில் 5.7 வீதம். இவை கடந்த காலங்களில்.

இம்முறை பெண்கள் அமைப்புக்கள் தேசிய சர்வதேச மட்டங்களில் பெண்களுக்கு அரசியலிலும் பொது வாழ்விலும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கின்ற எழுச்சி ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் இலங்கைதான் அரசியலில் ஆககுறைந்த பெண்களை உடைய நாடாக காணப்படுகின்றது. ஆகவே இம்முறை பெண்களாலும் பெண்கள் அமைப்புகளாலும் பெண் உரிமையாளர்களாலும் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கை பெண்களை அரசியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று அந்த எழுச்சி உள்ளது. அண்மையில் பார்த்தீர்களானால் அவளுக்கு ஒரு வாக்கு பிரச்சாரம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

கட்சி என்பதை தாண்டி அதில் இருக்கின்ற பெண்களுக்கு வாக்களியுங்கள் என்று. மட்டக்ளப்பில் இருக்கின்ற பெண் அமைப்புகளிடம் எனக்கு பெரு வரவேற்பு இருக்கின்றது. பல அமைப்புக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்கான ஆதரவை வழங்குகின்றார்கள். நான் நினைக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை பெரு எழுச்சி இருக்கின்றது. அதில் பெண் வேட்பாளராக எனக்கான வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆயுதப்போராட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் மக்களுடைய உரிமை போராட்டம் தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கக்கூடியதாக இருந்தது. அதற்கு பின்னரான காலத்தை எடுத்துக்கொண்டொமாக இருந்தால் அரசியல் கட்சிகள் தங்களது யுக்தியை மாற்றியிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக உரிமையை மட்டும் பேசிக்கொண்டிருந்து பயனில்லை. உண்மையாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் அடிமட்டத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைக்கான போராட்டம் என்பது பாரிய பிரச்சனையாக உள்ளது. கணவனை இழந்த குடும்பங்களின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு முன்னிலையில் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்தான் வறுமையில் முதலாவது இடத்தில் உள்ளது. இவைகளை தற்கால சூழலில் நிவர்த்தி செய்ய வேண்டுமாகவிருந்தால் மக்களுக்காக சமூக, பொருளாதார, பண்பாட்டு விழுமிய உரிமை விடயத்தை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு எதிர்ப்பு அரசியல் பேசி இருப்பதால் பயனில்லை. அதனால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

இப்போது அரசுடன் நாம் எங்களுடைய உரிமையையும் விட்டுக்கொடுக்காது அதே வேளை எங்களுடைய மக்கள் நேரடியாக நன்மைகளை பெறக்கூடிய விதமாக நாங்கள் வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

மட்டக்களப்பு அழகிய வளமிக்க மாகாணம். அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். மட்டக்களப்பில் இருக்கின்ற குளங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. சீரான நீர் முகாமைத்துவம் செய்யப்படவில்லை. எமது வளங்களை சரியாக பயனப்படுத்தப்படவில்லை. இவற்றை செய்யக்கூடிய அரசியல் பலத்தை எமது தமிழ்த் தலைமைகள் எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இல்லை. அது நடந்தது அங்கு உரிமை பேசும் ஒரு தரப்பும் அபிவிருத்தி பேசும் ஒரு தரப்பும் சமாந்தரமாக சென்றுகொண்டிருந்தது. பல அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் கிழக்கில் இந் நிலை காணப்படவில்லை. அதனால் பல வெற்றிடங்களே மக்கள் வாழ்வில் நிலவுகின்றது. இங்கு கிழக்கில் அமைச்சு பதவிகளை யார் எடுத்திருந்தார்கள் என்பதையும் எமது மக்கள் என்ன பயன் அடைந்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழர் தரப்பில் அபிவிருத்தியில் வெற்றிடம் காணப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்த வேண்டும். ஜனநாயக ரீதியாக பல தூரநோக்கு திட்டங்களுடன் பல துறைசார்ந்தோருடன் பயணிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மக்கள் இம்முறை வழங்கும் ஆணையின் மூலம் பல தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்

கிழக்கு மாகாணம் தமிழ் மக்களுடைய நிலங்கள் ஆக்கிரமிப்பு,தொல்பொருள் என்ற பெயரில் தமிழர்களுடைய அடையாளங்கள் கபளீகரம் செய்யப்படுவது என்று பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடல்ல. குறிப்பாக ஒரு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டுமாகவிருந்தால் அந்த மாகாணத்தில் இருக்கின்ற மாகாணத்தில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய துறைசார் நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறு துறைசார் நிபுணர்கள் இல்லாமல் யாரோ வந்து பிரதேசத்தை ஆய்வு செய்தால் அது ஒரு பக்க சார்பாகவே இருக்கும். இவ்விடயம் தொடர்பாக எங்களது கட்சி எடுத்திருக்கின்ற நிலைப்பாடு என்னவென்றால், எங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களையும் உள்வாங்க வேண்டும் என்பதாகும்.தற்பொழுது இந் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை விட்டவர்களால் எதுவும் நடக்கவில்லை. தமிழ் அமைச்சர் ஒருவர் கேட்டுக்கொண்டதால் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் அறியமுடிந்தது. இதில் ஒரு விடயத்தை அவதானிக்கலாம். எதிர்கட்சி அரசியல்வாதிக்கும் ஒரு அமைச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை.

தேர்தல் காலங்களில் வட-கிழக்கு இணைப்பு சம்பந்தமான பேச்சு அரசியல் மேடையில் காரசாரமாக பேசப்பட்டுவருகிறது.இந்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் அந்த இணைப்பை விரும்புவதாக நீங்கள் கருதுகிறீர்களா?
நான் நினைக்கின்றேன் இணைந்த வட-கிழக்கு என்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்ப்பல்ல. இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக வட-கிழக்கு இணைக்கப்பட்டிருந்தது. அது ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றம் ஊடாக புதுப்பிக்கப்பட வேண்டும். நீடிப்பு தவறு என ஜே.வி.பி வழக்கு தாக்கல் செய்ததால் பிரிக்கப்பட்டது.

அதில் கிழக்கு மாகாணம் நன்மை பெறவில்லை என்றும் கூறமுடியாது. கிழக்கு மாகாணத்திற்கு தனியான மாகாணசபை அமைக்கப்பட்டது எதுவுமின்றி தூங்கி கிடந்த மாகாணசபை அமைக்கப்பட்டு கிழக்கு மாகாண தமிழர் ஒருவர் பதவியேற்கிறார். பதவியேற்றதன் பின்னர் கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் செய்யப்பட்டன. அந்த மாகாணத்திற்கென தனியான வரவு செலவு திட்டம் ஒதுக்கப்படுகின்றது. தனியான நிருவாகம் வழங்கப்படுகின்றது. இதில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வடக்கு வடக்கு மாகாணசபையாகவும் கிழக்கு கிழக்கு மாகாணசபையாகவும் இருப்பதால் பிரச்சனை இல்லை. இரண்டுமே இரண்டு வகையான தேவைகளை கொண்ட மாகாணங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

யுத்தத்துக்கு பின்னர் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை,அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பில் பெண் வேட்பாளர் என்ற ரீதியில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். வட,கிழக்கில் மட்டக்களப்பு முதலிடத்தில் உள்ளது. 33000 மேற்பட்ட பெண்கள் உள்ளார்கள். அவர்களை நிரந்தரமாக முன்னேற்ற வேண்டும். சிறு நுண்கடன்களை வழங்கி முன்னேற்ற முடியாது. பெண்களை தங்கி வாழும் பிள்ளைகளின் கல்வி என்பது முக்கியம். உள்ளுரில் இருக்கின்ற வளங்களைக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தும் தொழில் திட்டங்களை ஏற்படுத்துதல், அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் போது பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கட்டாயம் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

உள்ளுர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திகளை செய்யும் போது அதற்கென சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்ளுரிலும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சந்தைப்படுத்தும் திட்டங்களை செய்து முழுமையான திட்டமாக செய்யப்படும். எங்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. எமது மூல வளங்களை சரியாக செய்ய வேண்டும்.

தேர்தல் அரசியல் என்று வந்ததற்கு பிறகுதான் பெண்கள் தொடர்பான முன்னேற்ற செயற்பாடுகளை நான் சிந்தித்திருக்கவில்லை.அதற்க்கு முன்னரே தனிப்பட்ட எங்கள் குடும்ப பங்களிப்பில் மாணிக்கப்போடியார் அறக்கட்டளை சமூக அமைப்பை நடாத்திவருகின்றோம். அதனூடாக முடிந்த சில சமூகத்தின் அடிப்படை பிரச்சனைகளை நிவர்த்தி செய்துவருகின்றோம். பெண்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக முடிந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். அது ஒரு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அரசியல் பலம் கிடைத்தால் இதனைவிட பன்மடங்கு திட்டங்களை செய்ய முடியும்.

இந்த தடவை தமிழ் தேசிய பரப்பில் பல கட்சிகள் களமிறங்கியுள்ளன. குறிப்பாக மாற்று அணி என்ற பெயரில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களுடைய தெரிவு என்பது சிதறிப்போகக்கூடிய சூழலும் இருக்கிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு…?

மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறார்கள். எல்லா கட்சிக்கும் வாக்குகளை வழங்கி சிதறடிப்பதிலும் பார்க்க எந்த கட்சி கொள்கையில் உள்ளது என்பதை இனங்கண்டு அந்த கட்சிக்கு வாக்களிப்பதால் மக்களின் அடிப்படை பிரச்சனைகள தீர்க்கலாம் என்பதை பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தை தலைமையாக கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பதன் ஊடாக எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வைக்காண முடியும். இளையர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு, மக்களின் வாழக்கைதரம், அபிவிருத்தி என பல தேவைகள் உள்ளன. உட்கட்டமைப்பு வசதிகளை முன்னேற்ற வேண்டும். அழகிய வளமிக்க எமது பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தலாம். முதலீட்டாளர்களை வரவழைத்து தொழில் துறைகளை ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறான பல தேவைகளை செய்ய வேண்டியுள்ளது.

முக்கியமாக ஒரு விடயம், மட்டக்களப்பிற்கென ஒரு தேர்தல் வரைபு வரையப்பட்டது. இதுவே முதற்தடைவ. எமது கட்சியில் வரையப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் இங்குள்ள வளங்களை கொண்டு பொருளாதாரத்தை விருத்தி செய்யக்கூடிய பல திட்டங்களுடன் உள்ளது. யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் கட்சிகள் தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் இங்கு பிரதி எடுத்து வழங்கப்படுவது போன்றல்ல.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் பல துறை சார்ந்தவர்கள் உள்ளார்கள். சிறந்த வேட்பாளர்கள் உள்ளார்கள். ஆகவே எமது பிரதேசத்தையும் மக்கள் வாழ்வை சுபிட்சமாக கட்டியெழுப்ப பல தூர நோக்கு சிந்தனையுடன் உள்ள எமது கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எமக்கு அமோக ஆதரவு உள்ளது.

 

http://thinakkural.lk/article/57200

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.