Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம்

தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம்

கபிலன் இராசநாயகம்  
அரசியல் என்றாலே பணம் உழைப்பதற்காக என்று மக்கள் முகம்  சுழிக்கும் இன்றைய நிலையில் தனது பாராளுமன்ற பிரவேசம் அத்தகைய ஒரு சாக்கடைக்குள் சிக்காது என்பதை உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் தன்னை கண்காணித்துக்கொள்வதற்கு ஏதுவாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தனது சொத்துவிபரங்களை தேர்தலுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார்.

விக்னேஸ்வரனின் இந்த செயற்பாடு இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் எதிர்வரும் காலங்களில் பெரும் செல்வாக்கை செலுத்தப்போகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்  கடந்த நல்லாட்சி காலத்தில் வருமானத்துக்கு மீறி அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டார்கள் என்றும் பல மில்லயன் ரூபாக்கள் பெறுமதியான ஆடம்பர மாளிகைகளை கட்டிவைத்திருக்கிறார்கள் என்றும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் விக்னேஸ்வரனின் செயற்பாடு அவர்களை சங்கடத்துக்குள் மாட்டிவிட்டிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று நினைத்திருந்தால் இம்முறை தேர்தலில் தமது சொத்துக்களை பகிரங்கபப்டுத்தி தமது நேர்மையை நிரூபித்திருக்க முடியும். பெப்ரவரி மாதம் அளவில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதே கூட்டணியின் சொத்துக்கள் பொதுமக்களுக்கு பகிரங்கபப்டுத்தப்படும் என்று விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படும் என்றும்  அறிவித்திருந்த போதிலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது சொத்து விபரங்களை தேர்தலுக்கு முன்னரேயே மக்களுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.

தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை ஒருவர் அறிவதன் மூலம், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.

இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூபா 4,424,724.24 பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் பணமும் 1,210.33 டொலர்கள் பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7இல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன. இவை தவிர அவருக்கு வாகனங்களோ வேறு எந்த சொத்துக்களுமோ இல்லை. நீதிபதியாகவும், நீதியரசராகவும் பணி புரிந்தகாலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் உழைத்த பணமும் முதலமைச்சராகப் பணி ஆற்றிய காலத்தில் அவருக்குக் கிடைத்த வேதனத்தில் ஏற்பட்ட சேமிப்பும் இவற்றுள் அடங்கும்.  இது விக்னேஸ்வரன் தனது   நீதியரசர் தொழில் மற்றும் அரசியலில் எந்தளவுக்கு ஊழல் மோசடிகளுக்கு இடம்கொடுக்காமல் வாழ்ந்திருக்கிறார் என்பதை காட்டுகின்றது. தனது  எதிர்கால அரசியலிலும் இவற்றுக்கு இடம்கொக்காமல் இருக்கும் அவரது பற்றுறுதியை அவரது சொத்துவிபர அறிவிப்பு வெளிப்படுத்துகின்றது.

விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் முக்கிய பேசு பொருளாக காணப்படுகின்றது. விக்னேஸ்வரன் தனது சொத்துக்களை பகிரங்கப்படுத்தி ஊடகங்களுக்கு வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் அவர் ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்துடன் சமூக வலைத்தளங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்தும் உள்ளனர். தமிழக சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதேசமயம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கூட்டு கட்சிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சத வீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும். அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் அவர்கள் வழங்கவேண்டும். என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் கூட்டு கட்சிகளின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதே இறுக்கமான நிபந்தனைகளை இட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் மட்டுமன்றி, ஊழல், மோசடி தொடர்பிலும் மிக இறுக்கமாக நேர்மையாக வெளிப்படைத்தன்மையாக செயற்படும் விக்னேஸ்வரனின் இந்த முன்மாதிரியான செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிர்வரும்  தேர்தலில் ஏகோபித்த ஆதரவையும் அங்கீகாரத்தையும்  வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரசியல் என்றாலே சாக்கடை என்றும் ஊழல் என்றும் படித்தவர்களும் நேர்மையானவர்களும் ஒதுங்கி நின்ற ஒரு நிலைமையில் விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசம் பல புத்திஜீவிகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்கு கிளர்ச்சியையும் , நம்பிக்கையையும் ஏற்படுத்தி பலர் இன்று அரசியலுக்குள் நுழைவதற்கு ஏற்கனவே அடித்தளம் இட்டிருக்கின்றது. தற்போது அரசியலில் விக்னேஸ்வரன் காட்டிவரும் துணிச்சலான, நேர்மையான, தற்துணிவான,  வெளிப்படையான செயற்பாடுகள் தமிழ் அரசியலை ஆரோக்கியமான ஒரு நிலைமைக்கு விரைவில் இட்டுச்செல்லும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.

 

http://www.samakalam.com/blog/தமிழ்-அரசியலை-செப்பனிடும/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் சாதனைகளும் சவால்களும்

விக்னேஸ்வரனின் சாதனைகளும் சவால்களும்

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவுடன் லஞ்சம், சலுகைகளுக்கு விலைபோகாத அரசியல் தலைமைத்துவத்தை நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த 6 வருடங்களாக வழங்கிவருகின்றார்.

முதலமைச்சர் பதவிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணாகதி அரசியலுக்கும் ஏமாற்றுகளுக்கும் எதிராகவும் அரசாங்கங்களுக்கு அடிபணியாமலும் அவர் துணிச்சலாக மேற்கொண்ட நடவடிக்கைகளே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமும் இனப்படுகொலைக்கான நீதிக்குமான போராட்டமும் அஸ்தமித்துவிடாமல் தொடர்ந்தும் உயிர்ப்பாக பேணப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு காரணமாகும்.

விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசம் சாத்தியம் ஆகியிருக்காதுவிட்டால் தமிழ் மக்களின் 70 வருடகால உரிமைப்போராட்டம் நல்லாட்சி காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும்.

இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ் மக்களின் உரிமைகளில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமின்றி அரசாங்கத்துடன் செயற்பட்டமையினால் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் விக்னேஸ்வரனுக்கு எதிராக எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்தியபோதும் அவற்றை முறியடித்து சலசலப்புகளுக்கு அஞ்சாமல் இறுதிவரை பதவியில் இருந்து மக்கள் பனி ஆற்றினார்.

2014 முதல் 2018 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 44251.38 மில்லியன் ரூபாமத்திய அரசிடம் கோரப்பட்ட போதிலும் 10,414. 35 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டது. இதில் ஒரு சதத்தையேனும் திருப்பி அனுப்பாமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்கும், போக்குவரத்து அபிவிருத்தி, உட்கட்டுமானம், பெண்கள் வலுவூட்டல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை முன்னெடுத்தார்.

ஆனால், விக்னேஸ்வரன் மத்திய அரசியும் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பொய் ஒன்றை கட்டவிழித்து விட்டது. ஆனால், தான் பணத்தை திருப்பி அனுப்பியதாக எவராவது முடிந்தால் நிரூபியுங்கள் என்று விக்னேஸ்வரன் சவால் விட்டும் எவரும் செய்யமுடியவில்லை. ஆனால், விக்னேஸ்வரன் பணத்தை அனுப்பியதாக மீண்டும் மீண்டும் கூறி மக்களை அவருக்கு எதிராக திருப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

உண்மையில் ஒட்டுமொத்த நாட்டின் 870 திணைக்களங்கள், அமைச்சுக்களின் வடமாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சே நிதி நிர்வாகத்தில் சிறந்தது என்று 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
மத்திய அரசாங்கத்திடம் கோரிய பணம் தமிழ் மக்களின் சொற்ப தேவைகளை பூர்த்திசெய்ய கூட போதாமல் இருந்தமையினால், புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதி உதவிகளை பெறும் நோக்கத்தில் முதலமைச்சர் நிதியத்தை அமைப்பதற்கு விக்னேஸ்வரன் மேற்கொண்ட கடும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு குந்தகம் செய்தது. இதனால், பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் நகரசபை மற்றும் கனடாவின் மார்க்கம் நகர சபை ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட இரட்டை நகர உடன்படிக்கையின் ஊடாக தமிழ் மக்கள் பயன்பெறுவது தடுக்கப்பட்டது.

விக்னேஸ்வரனின் 4 வருட பதவிக்காலத்தில் தமிழ் மக்களின் நலன்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்கு பல்வேறு தரப்புக்கள் பல்வேறு வழிகளை கையாண்டபோதிலும் அவரது நிபுணர்களைக் கொண்ட மதிப்பீடு குழு சிபாரிசு செய்தும் திட்டங்ககளை மட்டும் அமுல்படுத்தவே அவர் அனுமதி அளித்தார்.
விக்னேஸ்வரனின் நேர்மை, ஒழுக்கம், புலமை, தற்துணிவு, சலுகைலகுக்கு விலைபோகாத தன்மை ஆகியவை காரணமாக உலகின் அரசியல் தலைவர்கள் மத்தியில் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மிகுந்த மரியாதையும் கௌரவமும் இருப்பதுடன் அவரின் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்படுவதுடன் உள்வாங்கப்படுகின்றன.

அதேபோல, வேறு எந்தத் தமிழ் தலைவர்களை விடவும் விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்கள் தென் இலங்கை இனவாதிகளை அச்சம் கொள்ள வைப்பதாக இருக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்களின் வரலாறு, பெருமை, செழுமை ஆகியவை தொடர்பில் விக்னேஸ்வரன் அவர்கள் துணிச்சலாகவும் மிகவும் ஆணித்தரமாகவும் கூறிவரும் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய அவசியமான ஒரு கருத்துவினைப்பாட்டை உருவாக்கி இருக்கின்றன. இதன்காரணமாகவே, கொழும்பில் இருந்து பொலிஸ் புலனாய்வாளர்கள் விக்னேஸ்வரனின் இல்லத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்று இலங்கையின் முதல் பூர்வீக குடிகள் தமிழரே என்று அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

இத்தகைய ஒரு தலைவரின் கீழேயே இறுக்கமான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்பட்டுவருகின்றது. கொள்கை அடிப்படையிலும் புதிய அணுகுமுறையின் அடிப்படையிலும் வடக்கையும் கிழக்கையும் சார்ந்து 5 கட்சிகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியுள்ள ஒரு பெரும் கூட்டுக்கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி காணப்படுகின்றது.

வேட்பாளர்கள் தமது சொத்துவிபரங்களை வெளியிடுவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாதாந்தப் படிகளில் குறைந்தது 10 சத வீதத்தினை பொதுமக்களின் நலன்களுக்கு வழங்குவது உட்பட பல்வேறு நிபந்தனைகளை இந்த கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளடக்கியிருக்கிறது.

 

 

http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரனின்-சாதனைகளு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.