Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூழலை நேசிக்கும் யாப்பாண இளையவர்களின் பணி...

Featured Replies

 

 

பண்ணைக் கடற்கரையை நேசிப்போம்

யாழ்ப்பாணம் கடல் எரிகளால் சூழப்பட்ட அழகான ஒரு சிறு நகரம். இது இயற்கை எமக்கு அளித்த வரம். பண்ணை கடற்கரையும் அதனை சூழவுள்ள பகுதிகளும் மிக அழகானவை. அநேகமான மக்கள் இப்போதெல்லாம் மாலை வேளைகளிலும், காலை வேளைகளிலும் உடற்பயிற்சிக்காக நடந்து செல்கிறார்கள். இதைவிட பொழுதுபோக்குக்காகவும் அமைதியை நாடியும் இக் கடற்கரையை இளையவர்களும், முதியவர்களும் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய செயற்பாடுகள்,

இந்த பண்ணை வீதியை நடை ப்பயிற்சிக்காக பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். சூரியோதத்தையோ அல்லது சூரிய அஸ்தமனத்தையோ ரசித்தபடி நடந்து செல்லும் பொழுது நம்மையே அறியாமல் நாம் இயற்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் ஒரு குறை உண்டு. இந்த பிரதேசம் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதில்லை பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் போடப்படுகின்றன. பல இடங்களில் கடலில் போடப்படும் பிளாஸ்டிக், கழிவுகள் நீர் ஏரியில் மிதந்து வந்து ஒதுங்கிய படி இருக்கும். இதைவிட, அதிக வேகத்தில் வாகனங்களை சாரதிகள் செலுத்துவதால் விபத்து நடந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு இருந்தபடியே இருக்கும். மேலும் மாலை வேளைகளில் இங்கு கூடுபவர்கள் வாகனங்களை நடைபாதைக்கு குறுக்கே நிறுத்துவதால் நடந்துவரும் முதியவர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதைத்தவிர இந்த இடமும் இயற்கைச் சூழலும் மனதிற்கு இதமாகவே உள்ளன.

2 நாட்களுக்கு முன்பு முகநூலில் இரு விடயங்கள் கண்ணில் பட்டன. முதல் விடயம் நடுத்தர வயதில் உள்ள ஒருவர் கடற்கரையோரத்தில் நிழல் மரங்களை நடுவதற்காக ஆயத்தம் செய்யும் ஒரு படம். இரண்டாவது விடயம் கடற்கரையை சுத்தம் செய்வதற்காகவும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காகவும் ஒன்று சேரும்படி கூறும் இளைஞர்கள் அணியின் வேண்டுகோள் ஒன்று. இந்த இரு விடயங்களும் மனதிற்கு, மகிழ்ச்சியை தந்தன. இன்று, ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை ஆறு மணிக்கு கழிவகற்றும் செயற்பாடு நடப்பதாக அத்தகவல் கூறியது. வழக்கமாக மாலையில் மட்டுமே பண்ணைக்கு செல்லும் நான் இன்று காலை சென்றேன். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை சுகாதார முறைப்படி சேகரித்துக் கொண்டிருந்தார். மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் சிலருடன் உதை யாடிவிட்டு பெரும்பொழுது முகநூலில் பார்த்த ஒருவர் வேறொருவருடன் சேர்ந்து சில மரக்கன்றுகளை வைத்துக்கொண்டு நடுவதற்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.
என்னுடன் இன்னும் ஒருவரும் சேர்ந்துவிட்டார் நாங்கள் நால்வரும் பண்ணை கடற்கரை பற்றியும் தற்போதைய இளைஞர்களின் செயற்பாடுகள் குறித்தும் செயற்றிறன் குறைந்த மாகாணசபை, மாநகர சபை குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்., எந்த எதிர்பார்ப்பும் இல்லாது மரங்களை நடும் அந்த மனிதர்களின் செயற்பாடுகளை மனதார பாராட்டினோம்., அவர்களை பார்க்கும்போது சிறுவயதில் மில்க்வைற் கனகராஜா யாழ் மாவட்டம் முழுவதும் பனை மரங்களை நட்ட ஞாபகங்கள் மனதில் ஓடின. அவர்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுவதற்கு புகைப்படம் ஒன்று எடுக்க கேட்டபோது மறுத்துவிட்டார். ‘தயவுசெய்து பொது வெளியில் எங்கள் பெயர் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் செய்கை மூலம் நான் புகழப்படுவதையோ விமர்சிக்க படுவதையோ விரும்பவில்லை. தயவுசெய்து மன்னித்து விடுங்கள்” என்றார்கள்.

உங்கள் கையால் நாங்கள் கொண்டு வந்த இந்த மரங்களில் ஒன்றை நட்டு விடுவீர்களா? என்று கேட்டார் நானும் என்னுடன் இணைந்து நண்பனும் உடனடியாகவே “ஆம்” என்றோம். எங்களுக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் .மரத்தை நட்டு உயிர் தண்ணீரும் விட்டு அந்த சூழலியல் நண்பர்களோடு மனம் விட்டு உரையாடிவிட்டு வந்தேன் .

உண்மையிலேயே யாழ்ப்பாணம் இன்னும் உயித்துடிப்புடனேயே இருக்கிறது. சூழலை நேசிக்கும் இளைஞர்களும் முதியவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றத்தை தரும் போலித் தேசிய அரசியல்வாதிகளிலும் பார்க்க தேசத்தை , சூழலை , நேசிக்கும் மனிதர்களே இன்று நாட்டுக்குத் தேவை. அவர்களே சிறந்தவர்கள்

 

 

 

https://www.facebook.com/pg/sirakukal.info/about/?ref=page_internal

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.