Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அளவுக்கு மீறிய நம்பிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Date: 2007-06-05

அளவுக்கு மீறிய நம்பிக்கை!

இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய தரப்புகளில் ஒன்றான இலங்கை அரசுப் பக்கத்திலிருந்து அந்த யுத்த நிறுத்தம் குறித்து வெளியிடப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் மக்களைக் குழப்பமடைய வைப்பனவாக இருக்கின்றன.

""போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத் துக்கும் இன்றைய தள கள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகவே போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட கலந் துரையாடல்களை அரசு நடத்த உள்ளது'' என்று அரசின் சார்பில் அதன் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகவியலாளர் மாநாட்டில் கடந்த வாரம் அறிவித்தார்.

ஏறத்தாழ இதே சமயத்தில் "அல் ஜெஸீரா' தொலைக்காட்சி சேவைக்குப் பேட்டியளித்த நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ""யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துவிட்டது'' என்ற சாரப்படக் கருத்துக் கூறியிருக்கின்றார்.

இதற்கு, சில காலத்துக்கு முன்னர் வெளிநாட்டு செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டியளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவும், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முற்றாக செயலிழந்து விட்டாலும் சர்வதேசத்தைச் சமாளிப்பதற்காகப் பெயரளவிலேனும் அதனைப் பேணுபவர்களா கக் காட்டவேண்டியவர்களாக உள்ளோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அரச ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ""யுத்த நிறுத்த ஒப் பந்தம் தொடர்ந்து பேணப்பட்டு, மதிக்கப்பட்டு, நியாயமாகப் பின் பற்றப்பட வேண்டுமானால் யுத்த நிறுத்தம் தொடர்பாக புலிகளுக்கு அரசு சில நிபந்தனைகளை விதிக்கும்'' என்று குறிப்பிட்டிருக்கின் றார்.

இப்படியெல்லாம் கொழும்பில் கருத்துகள் அதுவும் அரசின் பாதுகாப்புத்துறை சம்பந்தமான உயர் தரப்புகளிடம் இருந்து வெளி யாகிக் கொண்டிருக்க, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவோ, சிங்கப்பூருக்குப் போய் நின்று கொண்டு இவை அனைத்துக்கும் மாறான வகையில் வேறு வித மாக கருத்து வெளியிடுகின்றார்.

""போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் எண்ணம் அரசுக்குக் கிடையவே கிடையாது. அப்படி ஒரு திட்டத்தை அரசு பரிசீலிக்கவேயில்லை. போர்நிறுத்த உடன்படிக்கை இன்னமும் நடைமுறையிலேயே உள்ளது.'' என்று அங்கு வைத்து அடித்துக் கூறியிருக்கின்றார் வெளிவிவகார அமைச்சர்.

போர் நிறுத்த ஒப்பந்த விடயத்தில் மாத்திரம் அல்ல விடு தலைப் புலிகளுடனான யுத்தத்தைக் கையாளும் கோட்பாட்டு விட யத்திலும் கூட இந்த அரசு மட்டுமல்லாமல், இதற்கு முன்பிருந்த பழைய அரசுகளும் கூட இதே மாதிரியான குழப்பமான, மருட்சி யான, இசகு பிசகான போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கின்றன என்பதை இலங்கையின் யுத்தப் போக்கை ஊன்றிக் கவனிப்பவர்கள் எல்லோரும் இலகுவாகக் காணமுடியும்.

கடந்த வாரம் "அல் ஜெஸீரா'வுக்குப் பேட்டியளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதில் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தை வலியுறுத்தி நிற்கின்றார்.

""இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஒன்றைக் காணும் எண்ணம் அரசுக்குக் கிடையவே கிடையாது. ஆனால் விடு தலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தப்படாமல் பேச்சு மேசைக்கு வரவே மாட்டார்கள். தாம் பலமடையும் போதெல்லாம் புலிகள் போரைப் பற்றியே சிந்திப்பார்கள். பலவீனமடைந்தால் மட் டுமே அமைதி முயற்சிக்கு வருவார்கள். அதனால் புலிகளைப் பல வீனப்படுத்துவதற்கான இராணுவ நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத வையாகின்றன.'' என்ற சாரப்பட ஜனாதிபதி மஹிந்தர் விளக்க மளிக்கின்றார்.

விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்துவதுடன் ஜனாதிபதி மஹிந்தரின் இராணுவ நோக்கு மட்டுப்படுத்தப்படுமா அல்லது அதற்கு அப்பாலும் செல்லும் தந்திரோபாயத் திட்டம் அவருக்கு உண்டா என்பதெல்லாம் வெளிப்படையாகத் தெரியப்போவதில்லை. ஆனால், புலிகளைப் பலவீனப்படுத்தி, அதன் மூலம், தனது நிகழ்ச் சித்திட்டத்துக்கு அமையப் புலிகளை பேச்சு மேசைக்கு மடக்கலாம் என்ற அவரது உத்தி தந்திரோபாயம் பலிக்குமா, சாத்தியமாகுமா என்பதை இந்த யுத்தத்தின் போக்கை கடந்த இரண்டரை தசாப்த காலமாக உன்னிப்பாக நோக்கி வருபவர்கள் இலகுவாக எடை போட்டு விடுவார்கள்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதுபோல விடுதலைப் புலிகள் இராணுவ அழுத்தத்துக்கும், தோல்விகளுக்கும், தமது பல வீனத்துக்கும் இடம்கொடுத்து, தங்கள் வழமையான உறுதியான நிலைப்பாட்டிலிருந்து மசிந்து, மண்டியிடுபவர்கள் போல ஒரு போதும் செயற்பட்டவர்கள் அல்லர். உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்டிருக்கும் எமது அயல் வல்லாதிக்க நாட்டி னாலேயே இவ்வாறு இராணுவ அழுத்தம் போட்டு மசிய வைக்கும் தந்திரத்தை புலிகளிடம் பலிக்கச் செய்ய முடியவில்லை. ஆனால் "மந்திரத்தால் மாங்காய் பறிப்பவர் போல' இந்த வேலையைத் தம் மால் ஒப்பேற்ற முடியும் என மனப்பால் குடிக்கிறார் நாட்டின் புதிய தலைவர்.

2002 முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதி முயற்சிகளில் எந்தப் பின்னணியில் தாங்கள் ஈடுபட்டார்கள் என்பதை புலி கள் இயக்கத்தின் தலைவரே தமது கடந்த மாவீரர் தின உரையில் நினைப்பூட்டியிருந்தார்.

"" அமைதி முயற்சிகளை நாம் பலவீனமான நிலையில் நின்று மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பையும் இயக்கச்சி ஆனையிறவுக் கூட்டுப்படைத் தளத்தையும் மீட்டெடுத்தோம். சிங்கள இராணுவத்தின் "அக்கினிக்கீல' முன்னேற்ற நடவடிக் கையை முறியடித்தோம். உலகின் போரியல் வரலாற்றில் மகத்தான சாதனைகளைப் புரிந்து, இராணுவ மேல் நிலையில் நின்று கொண்டே இத்தனையும் மேற்கொண்டோம்.

""தென்னிலங்கையிலோ நிலைமை முற்றிலும் வேறாக இருந் தது. தோல்வி மேல் தோல்வியைப் பெற்று, போரிடும் மனோநிலை குலைந்து, இராணுவத்தின் முதுகெலும்பு உடைந்து, நாட்டின் பொருளாதாரம் படுத்துத் தள்ளாடிய நிலையிலேயே சிங்கள தேசம் சமாதானப் பேச்சுக்குச் சம்மதித்தது.'' என்று குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன்.

இராணுவச் சமநிலையில் பின்னடைவு கண்டு, பலவீனமுற்றுள்ளனர் என்று கருதப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்திலும் புலிகளிடமிருந்து சமாதான சமிக்ஞையோ, அமைதி முயற்சிகளுக்கான சாத கமான அசைவோ வெளிப்படுத்தப்படவேயில்லை என்பது முத லாவது விடயம்.

இன்றைய நிலையில், நொந்து, நொடித்து, அமைதிப் பேச்சுக்குப் போவதைத்தவிர வேறு வழியில்லை என்ற அளவுக்குப் புலி களைப் பலவீனப்படுத்துவது சாத்தியமானதா, யதார்த்தமானதா என் பது இரண்டாவது விடயம்.

"அலை ஓயும் வரை குளிக்கக் காத்திருப்பவன்போல்', "குளம் வற்றும் எனக் காத்திருந்து குடல் வற்றிச் செத்த கொக்குப் போல' ஏமாற்றமடைய வைக்கும் நம்பிக்கை இது.

புதிது புதிதாக ஆட்சிக்கு வருபவர்களுக்கு இத்தகைய புதிய, புதிய கோட்பாடுகளும், சிந்தனைப் போக்குகளும் கிட்டுவது வியப் பில்லை. ஆனால் அவை குறித்துத் தீர்மானிக்க முன்னர், பழைய அனுபவங்களை பட்டறிவை கொஞ்சம் அவர்கள் கிளறிப் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையேல் தாமும் பட்டுத் தெளியும் நிலைக்கு அவர்களும் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.