Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க சில உபாயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 

இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக காரை வாங்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்வதில், மைலேஜ் மிக முக்கியமான காரணியாக உள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலால், கார்கள் குறைவான மைலேஜையே வழங்குகின்றன.

 

அதாவது போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருப்பதால், நகர சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலைதான் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும்போது, கார் நீண்ட நேரம் ஐட்லிங்கில் (Idling) இருக்க வேண்டிய நிலை உள்ளது. காரின் மைலேஜ் குறைவதற்கு இது ஒரு காரணமாகவும் இருக்கிறது.

 

அதிலும் கோடை காலங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால், கார் ஐட்லிங்கில் இருக்கும்போது ஏசி-யையும் பயன்படுத்தியாக வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் நம்மால் காருக்குள் அமரவே முடியாது. பொதுவாக வெளியில் இருக்கும் வெப்ப நிலையை விட காருக்கும் அதிக வெப்ப நிலை நிலவும். எனவே கோடை காலங்களில் ஏசி இல்லாமல் காருக்குள் அமர்வது கடினம்.

ஆனால் ஏசி ஆன் செய்து வைக்கப்பட்டிருக்கும்போது கார் ஐட்லிங்கில் இருந்தால், எவ்வளவு எரிபொருளை நுகரும் என என்றாவது ஒரு நாள் நீங்கள் யோசித்து பார்த்துள்ளீர்களா? இந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக யூ-டியூப்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியை, அருண் பன்வார் என்பவர் அவரது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

 

எதை செயல்படுத்த ஆசைப்படுகிறோம்? என்ற மொத்த திட்டத்தையும் நமக்கு விளக்கும் காட்சிகளுடன் இந்த காணொளி தொடங்குகிறது. இதன்படி இந்த காணொளியில் தோன்றும் நபர் ஒரு எரிபொருள் நிலையத்திற்கு சென்று காரின் எரிபொருள் டேங்க்கை நிரப்பி கொள்கிறார். அதன்பின் அவர் காரில் தனது வீட்டிற்கு செல்கிறார்.

 

வீட்டிற்கு சென்றவுடன் ஏசி-யை ஆன் செய்து விட்டு, காரை ஐட்லிங்கில் விட்டு விடுகிறார். அத்துடன் டைமரும் ஆன் செய்யப்படுகிறது. சோதனை செய்யப்படும் நேரத்தில், கார் எவ்வளவு எரிபொருளை நுகரும் என்பதை கண்டறிவதுதான் இந்த காணொளியின் நோக்கம். முதலில் ஒரு மணி நேரம் காரை ஐட்லிங்கில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

 

ஆனால் அதன்பின்பு மேலும் 20 நிமிடங்கள் கூடுதலாக ஐட்லிங்கில் விடப்பட்டது. மொத்தத்தில் 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு கார் ஐட்லிங்கில் விடப்பட்டது. ஐட்லிங்கில் இருந்த இந்த நேரம் முழுமைக்கும் ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார்தான், இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.

 

இந்த காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த சோதனை முடிவடைந்தவுடன், அந்த நபர் காரை மீண்டும் அதே எரிபொருள் நிலையத்திற்கு ஓட்டி சென்றார்.

 

எரிபொருள் டேங்க்கை மீண்டும் முழுமையாக நிரப்பினால், கடந்த 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஐட்லிங்கில் இருந்தபோது கார் எவ்வளவு எரிபொருளை நுகர்ந்தது? என்பதை கண்டுபிடித்து விட முடியும். எனவே அதே எரிபொருள் நிலையத்திற்கு சென்று, அவர் காரின் டேங்க்கை மீண்டும் நிரப்பினார். அப்போது 1.66 லிட்டர் பெட்ரோலை கார் பிடித்தது. அதாவது சுமார் 130 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல்.

 

எனவே ஏசி ஆன் செய்யப்பட்டிருக்கும்போது கார் ஒரு மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை நுகரும். ஆனால் இந்த எரிபொருளில் சிறு பகுதி, சோதனைக்கு முன்பும், பின்பும் எரிபொருள் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வரவும், மீண்டும் வீட்டில் இருந்து எரிபொருள் நிலையத்திற்கு செல்லவும் செலவாகியிருக்கும்.

 

இந்த நபரின் வீட்டில் இருந்து எரிபொருள் நிலையம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன்படி பார்த்தால், காரின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பிய பின் 8 கிலோ மீட்டர்கள் வரையில் கார் ஓட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது ஒரு நல்ல சோதனையாகும். கார் நீண்ட நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு எரிபொருளை நுகரும் என்பதை இது நமக்கு காட்டியுள்ளது.

கார் நீண்ட நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை நுகரும் என்ற சோதனையின் முடிவை பார்த்தோம். இனி எரிபொருள் சிக்கனத்திற்கான சில எளிய வழிகளை பார்க்கலாம்.

 

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க சில உபாயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 

01. ஒரே மூச்சில் முடியுங்கள்...

சிலர் வீட்டுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக சின்ன சின்ன வேலைகளுக்காக கூட காரை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஷாப்பிக் மற்றும் இதர வீட்டு வேலைகளுக்காக காரை எடுக்க வேண்டி இருந்தால் முதலில் திட்டமிடுங்கள். அனைத்து வீட்டு வேலைகளையும் ஒரே தடவையில் செய்து முடிப்பது சாலச் சிறந்தது.

காரணம், பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்டு இருக்கும் காரின் எஞ்சின் குளிர்ச்சியில் இருக்கும்போது, ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் செய்யும்போது சற்றே கூடுதல் எரிபொருள் செலவாகும். இதனால், மைலேஜ் குறையும். அருகில் இருக்கும் வீட்டு வேலைகளை செய்ய நடந்து செல்வதும், இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதும் சிறந்தது.

 

02. டிராஃபிக் ஜாம்

 

தினசரி அலுவலகம் செல்வோர், போக்குவரத்து நெரிசல் நேரங்களை தவிர்த்து அரை மணி நேரம் முன்னதாக செல்வதும், சில கிலோமீட்டர்கள் கூடுதலாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைவான சாலைகளை தேர்வு செய்து செல்வதும் ஓரளவு பயன்தரும். டிராஃபிக் ஜாமில் சிக்கினால், முதல் கியரில் வைத்து, கிளட்ச் அதிகம் பயன்படுத்தும் போது எரிபொருள் அதிகம் செலவாகும்.

 

அதேபோன்று, திரும்பும்போது சற்று தாமதமானாலும், போக்குவரத்து நெரிசல் குறைவான நேரத்தில் வீடு திரும்புவது எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான வழியாக இருக்கும்.

 

03. குழப்பம்

கார் மெதுவாக செல்லும்போது ஜன்னல் திறந்து வைத்திருந்தால் பரவாயில்லை. ஆனால், 20 கிமீ வேகத்தை தாண்டிச் செல்லும்போது ஜன்னல்களை மூடிவிடுங்கள். அதேபோன்று, சன்ரூஃப் இருந்தாலும் மூடி வைப்பது நல்லது. காரின் ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்பட்டு அதிக எரிபொருள் செலவாகும்.

 

04. கேரியரும் பிரச்னைதான்...

காரில் கேரியர் மற்றும் ரூஃப் ஸ்கை பாக்ஸ் ஆகியவை இருந்தால் தேவைப்படாத நேரத்தில் கழற்றி வைத்துவிடுவது அவசியம். ஸ்கை பாக்ஸில் பொருட்கள் இல்லாமல் காலியாக இருந்தால் கூட அது ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்படுத்தி மைலேஜை குறைய காரணமாகிவிடும். தற்போது வரும் கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ்களை எளிதாக கழற்றி மாட்ட முடியும். மேலும், கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ் எடையும் மைலேஜ் குறைய காரணமாக இருக்கும்.

 

05. தேவையில்லாத ஆணி....

காரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில், எக்ஸ்ட்ரா பம்பர் உள்ளிட்ட தேவையில்லாமல் ஏராளமான ஆக்சஸெரீகளை பொருத்துவதால் அதிக எடையை சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இதுவும் எரிபொருள் சிக்கன அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும். அதேபோன்று, சில பேர் கார் டிக்கியில் விளையாட்டு பொருட்கள், உடைமைகளை தேவையில்லாமல் போட்டு வைத்திருப்பதும் வழக்கம். இதுவும் மைலேஜ் குறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

 

06. இதை செய்யாதீர்

காரை எடுத்தவுடன் அதிக ஆக்சிலரேட்டரை கொடுத்து உறுமச் செய்து எடுப்பது சிலரின் வாடிக்கை. இதுவும் தேவையில்லாத வேலையே. காரை சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எடுத்தால் போதுமானது. ஆக்சிலரேட்டரை அதிகப்படியாக கொடுத்து எரிபொருளை வீணடிக்காதீர். இது எரிபொருள் விரயத்தால் பர்ஸுக்கு பதம் பார்ப்பதோடு, புகையால் காற்று மாசுபடுதலும் அதிகரிக்கிறது.

 

07. நிதானம்...

பொதுவாக கார் குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும், சீரான வேகத்தில் இயக்குவது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும். இதற்கு சரியான கியரில் இயக்குவது அவசியம். குறிப்பாக, டாப் கியரில் வைத்து சீரான வேகத்தில் ஓட்டும்போது நீங்கள் நினைத்ததைவிட அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். நெடுஞ்சாலையில் செல்லும்போது மணிக்கு 80 கிமீ வேகத்தை கடைபிடிக்கும்போது மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

 

08. பிரேக்

அடிக்கடி பிரேக் பிடிப்பதும் காரில் தேவையற்ற எரிபொருள் விரயத்தை ஏற்படுத்தும். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் செல்வதும், நிதானமான வேகத்தை கடைபிடிப்பதும், போக்குவரத்தை கணக்கில்கொண்டு ஓட்டும்போதும் தேவையில்லாமல் பிரேக் பிடிப்பதை தவிர்க்க முடியும்.

 

09. பராமரிப்பு

 

மேலே சொன்ன காரணங்கள் மட்டுமின்றி, காரின் பராமரிப்பும் மிக முக்கியம். தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையின்படி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான பராமரிப்பில் வைத்திருப்பதும் அவசியம். 5,000 கிமீ தூரத்திற்கு ஒருமுறை காருக்கு பராமரிப்புப் பணிகள் செய்வது அவசியமாகும். கார் எஞ்சின் பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும். மேலும், டயரில் காற்றழுத்தம் அளவையும் அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.

 

இனி ஏசி போடுவதால் காரின் மைலேஜ் குறையுமா? என்ற உங்கள் சந்தேகத்திற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

சற்றே பின்னோக்கி 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பி பார்த்தால், கார் என்பதே வசதி படைத்தவர்களுக்கான ஆடம்பர பொருளாக இருந்தது. அதிலும் ஏசி கார்கள் என்பதே பெரிய விஷயமாக கருதப்பட்டது.

ஏசி வசதி கொண்ட கார் என்பதை பின்புற விண்ட் ஷீல்டில் குறிப்பிட்டு, No Hand Signal என்பதையும் சேர்த்து போட்டு அந்த காரின் அந்தஸ்தை கூட்டிய வேடிக்கை வினோதங்களும் நடந்தன.

 

ஆனால், இப்போது ஏசி வசதி இல்லாத காரே இல்லை எனலாம். மிக குறைவான விலை கொண்ட காரில் கூட ஏசி வசதி என்பது அடிப்படை விஷயமாக இடம்பெறுகிறது. இந்த நிலையில், ஏசி வசதி உள்ள காரில், அதனை இயக்கும்போது மைலேஜ் குறையும் என்ற கருத்து பரவலாக உண்டு. அதுகுறித்து இந்த செய்தியில் விளக்கமாக பார்க்கலாம்.

 

ஆனால், இப்போது ஏசி வசதி இல்லாத காரே இல்லை எனலாம். மிக குறைவான விலை கொண்ட காரில் கூட ஏசி வசதி என்பது அடிப்படை விஷயமாக இடம்பெறுகிறது. இந்த நிலையில், ஏசி வசதி உள்ள காரில், அதனை இயக்கும்போது மைலேஜ் குறையும் என்ற கருத்து பரவலாக உண்டு. அதுகுறித்து இந்த செய்தியில்

விளக்கமாக பார்க்கலாம்.

https://tamil.drivespark.com/off-beat/how-much-petrol-does-your-car-consume-while-idling-for-1-hour-20-minutes-with-the-ac-on-test-result-023699.html?utm_source=fb-desipearl&utm_campaign=desipearl&utm_medium=healthytipssss&utm_content

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.