Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு பணம் கொடுத்த ஒருவரை கைது செய்த அரசு ஏனைய மூவரையும் என்ன செய்யப் போகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு பணம் கொடுத்த ஒருவரை கைது செய்த அரசு ஏனைய மூவரையும் என்ன செய்யப் போகின்றது

[05 - June - 2007]

* ரணில் கேள்வி எழுப்புகிறார்

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ஷ சார்பில் பெருந்தொகை பணத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதில் இடைத் தரகர்களாக செயற்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள அரசு ஏனைய மூவர் தொடர்பில் என்ன செய்யப் போகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ட்ரான் அலஸின் சுக நலன்களை விசாரிக்க நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றபோதே ட்ரான் அலஸ் இதனை தெரிவித்ததாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் சார்பில் புலிகளுக்கு பணம் வழங்குவதில் இடைத்தரகராக ட்ரான் அலஸ் செயல்பட்டுள்ளது அவரின் வாக்குமூலத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ, லலித் வீரதுங்க, பீ.பீ.ஜயசுந்தர மற்றும் ட்ரான் அலஸ் ஆகியோர் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய ட்ரான் அலஸ் மூலம் புலிகளுக்கு பணம் சென்றடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் ஏற்பாட்டுக்குழு ஊடாக மகிந்த ராஜபக்ஷ மக்களது வாக்குரிமையை தடுக்க புலிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளது எனக்கும் எனது கட்சிக்கும் பெரும் அநீதியை இழைத்துள்ளது. இருந்த போதும் இவ்விடயம் தொடர்பில் ட்ரான் அலஸை மட்டும் கைது செய்துள்ளது நியாயமற்றது. புலிகளுக்கு பணம் வழங்குவதில் ட்ரான் அலஸுடன் இணைந்து செயற்பட்ட ஏனைய மூவர் தொடர்பாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ஷவின் நடவடிக்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு அறிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

அமெரிக்கா புலிகளை தடைசெய்துள்ளது. புலிகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அந்த நாட்டில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் அந்நாட்டு பிரஜையான பசில் ராஜபக்ஷவின் நடவடிக்கை குறித்து அமெரிக்காவுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்படவில்லை. இதில் சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.