Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல் கோலை, ருவான் விஜேவர்தனவிடம், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தார்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை, ருவான் விஜேவர்தனவிடம், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தார்....
#ஞாபகங்கள் - சுதந்திர இலங்கையினதும், ஐக்கியதேசியக் கட்சியினதும் பிதாமகர், டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை , இலாவகமாகப் பற்றிக்கொண்டு ஓடிய, முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தினேந்திர ருவான் விஜேவர்தனவிடம் (Dinendra Ruwan Wijewardene) கையளித்துள்ளார்.
டி.எஸ்.சேனநாயக்கா, டட்லிசேனநாயக்கா, ஜே.ஆர் ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க – வழிவந்த ஐக்கியதேசியக் கட்சியின் தலமைத்துவம் இப்போ ருவான் விஜேவர்தனவின் கையில் வீழ்ந்திருக்கிறது.
இடைப்பட்ட சிறிது காலத்தில் றணசிங்க பிரேமதாஸ, டீ.பி விஜயதுங்க, ஆகியோரிடம் இருந்த அஞ்சல் கோலை கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க 26 வருடங்கள் சளைக்காது ஓடி தனது அரசியல் சாணக்கியத்தால், டீ.எஸ். சேனநாயக்க பரம்பரையிடமே மீண்டும் ஐக்கியதேசியக் கட்சியை ஒப்படைத்திருக்கிறார்.
1993, May 1ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்படாவிட்டால், ஐக்கியதேசியக் கட்சியின் தலமைத்துவம் சிலவேளை சஜித் பிரேமதாஸவிடம் கைமாறியிருக்கும்.
முன்னாள் ஐக்கியதேசியக் கட்சியின் சிரேஸ்ட்ட தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான, லலித் அத்துலத்முதலி, காமினி திஸ்ஸநாயக்க உள்ளிட்டவர்களால், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக, கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனை வெற்றி அடைந்திருந்தால், அல்லது புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்படாவிட்டால், சிலவேளை காமினி திஸ்ஸ நாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸநாயக்கவிடம் கட்சியின் தலமைத்துவம் சென்றிருக்கும்.
ஆனால் இவை எதுவுமே நடைபெறாத நிலையில் டீ.பீ விஜயதுங்கவின் பின் சிரேஸ்ட தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கியதேசியக் கட்சியின் தலமைத்துவம் கைமாறியது. அதனை இறுகப் பிடித்த ரணில் மிக நுணுக்கமான தனது அரசியல் காய் நகர்த்தல்களின் ஊடாக, தனது இரும்புப்பிடியில் கட்சியை கட்டுப்பாட்டுள் வைத்திருந்து கட்சியில் முன்னிருந்தவர்களை பின்தள்ளி மிகச் சரியான நேரத்தில், தனக்கு மிகச் சரியானவரை கட்சியின் பிரதித் தலைவராக நியதித்து டீ.எஸ். சேனநாயக்கவின் பேரன் ருவான் விஜேவர்தனவிடம் கட்சியை ஒப்படைத்திருக்கிறார்.
யார் இந்த ருவான் விஜேவர்தன?
1975ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ரஞ்சனி சேனநாயக்க - ரஞ்சித் விஜயவர்த்தன தம்பதிகளுக்கு இளைய மகனாக பிறந்தவரே ருவான் விஜேவர்தன. ரஞ்சித் விஜயவர்த்தன விஜய ஊடக நிறுவனத்தை உருவாக்கியவர்.
இவரது தாய்வழி தாத்தாவே இலங்கையின் முதல் பிரதமர் டீ.எஸ்.சேனனாயக்கா. ருவான் விஜேவர்தனவின் மாமனாரே இலங்கையின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனநாயக்கா. ருவான் விஜேவர்தனவின் தந்தைவழி தாத்தாவே டி. ஆர். விஜேவர்தன. இவர் இலங்கையின் சுதந்திர இயக்கத்தின் தலைவராக இருந்த ஒரு பத்திரிகையாளர். ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராகி லேக் ஹவுஸ் செய்தி நிறுவனத்தை நிறுவி சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த அரசியல் குடும்ப பாரம்பரியத்தில் வந்த ருவான் விஜேவர்தன, இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் தந்தையும், ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜே.ஆர் ஜெயவர்தனவின் மருமகனான ரணில் விக்கிரமசிங்கவினதும் நெருங்கிய உறவினர். இவரே ஐக்கியதேசியக் கட்சியின் பிரதித் தலைவராகி நாடாளுமன்றில் நுழையப் போகிறார்.
சஜித் பிரேமதாஸ, கரு ஜெயசூரிய, ரவி கருணநாயக்கா, நவீன் திஸ்நாயக்கா, வஜிர அபயலர்த்தன, அர்சுணா ரணதுங்க என ஐக்கியதேசியக் கட்சியின் தலமைக்கு தயாராக இருந்த பலரை வலுவிளக்கச்செய்து, தன் மதிநுட்பத்தால் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தனவை ரணில் விக்கிரமசிங்க நியமித்திருக்கிறார். இவரே கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்படவுள்ளார்.
2021 வரை கட்சியின் தலமைப்பதவியை தன்வசம் வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, அதன் பின் கட்சியின் தமைப்பொறுப்பையும் தன் குடும்ப வாரிசான ருவான் விஜேவர்தனவிடமே கையளிப்பார்.
இதுவரை டீ. எஸ் சேனநாயக்கா வழிவந்த ஐக்கியதேசியக் கட்சியினதும், எஸ். டபிள்யு பண்டாரநாயக்கா வழிவந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும், அரசியல் யுகங்களாக தொடர்நந்த இலங்கையின் ஆட்சிமுறை வரலாறு - 2019ல் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானதன் பின், ராஜபக்ஸ யுகத்தில் கால்பதித்திருக்கிறது.
இனிவரும் அரசியல் யுகங்கள் ராஜபக்ஸ – பிரேமதாஸ யுகங்களாக தொடருமா? இல்லை ராஜபக்ஸ - சேனநாயக்க அரசியல் யுகங்களாக தொடருமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு 2029 வரை ராஜபக்ஸ குடும்ப அரசியலில் இருந்து இலங்கை விடுபடுமா என்பது சந்தேகமே...
மறுபுறம் சஜித் பிரேமதாஸ தலமையிலான ஐக்கிய மக்கள் சக்த்தியும், மைத்திரிபால சிரிசேன தலமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ருவான் தலமையிலான தேசியக் கட்சியும், ராஜபக்ஸ அரசியல் யுகத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது...
119702397_374939750575321_19611134942745
 
 
119583538_374939740575322_31172971435674
 
 
119576921_374939733908656_54476262830647
 
 
119559165_374939747241988_15373546157656
 
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.