Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலவீனமான நிலையில் அரசு புலிகளை பேச்சுக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலவீனமான நிலையில் அரசு புலிகளை பேச்சுக்கு அழைப்பு

[06 - June - 2007]

* சாடுகிறது ஐ.தே.க.

கே.பி.மோகன்

விடுதலைப் புலிகளை பலவீனமாக்கிய பின்னரே அவர்களுடனான பேச்சுகளை நடத்த முடியுமென கூறிய அரசு இன்று படையினரை பலிகொடுத்து அரசியல் ரீதியாகவும் பலவீனமடைந்த நிலையில் மீண்டும் பேச்சுக்கு வருமாறு புலிகளை அழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல குற்றம்சாட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

புலிகள் பலவீனமானவர்கள், அவர்கள் படையினர் மத்தியில் புறமுதுகு காட்டுபவர்கள். அதனால் அவர்களை அடித்துப் பிடிப்போம், அப்புறம் பேசுவோம் என்ற நிலைப்பாட்டில் இருந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இன்று அவர்கள் முன்னிலையில் பலவீனமடைந்து மீண்டும் பேச்சுக்கு வர அழைப்பு விடுத்துள்ளது.

`அல்ஜசீரா' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு வரும் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கத் தேவையில்லை அவர்களின் கட்டுப்பாட்டு பகுதிகள் அவர்களின் கீழேயே இருக்கட்டும், சண்டை செய்து கொண்டும் நாம் சமாதானம் பேச முடியும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சின் மூலம் ஆயுதங்கள் கீழே வைத்தால் மட்டுமே பேச்சு என்ற பிடிவாத போக்கு தளர்ந்து விட்டுக் கொடுத்துப்போகும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவற்றை எதிர்த்து எமக்கு புலிப் பட்டம் சூட்டிய இந்த அரசாங்கம் இன்று கிழித்தெறிய வேண்டும் என்ற எமது ஒப்பந்தத்தின் அடிப்படையில் புலிகளுடன் பேச முனைந்துள்ளது.

மாவிலாறு- சம்பூர் தாக்குதலின் பின்னர் காட்டுப் பகுதிகளில் இருந்து கொண்டு வெற்றிக்களிப்பை கொண்டாடிய போது இந்த அரசாங்கம் புலிகளை தாக்கிஅழித்துவிட முடியுமென கங்கணம் கட்டியது. தாக்குதல்களை தொடர்ந்தது. மூன்று மாதங்களுக்குள் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறியது. ஆயினும், 15 மாதங்கள் கடந்தும் இன்னும் அந்த இடத்திற்கு அரசாங்கம் வரவில்லை. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தோல்வி கண்டுள்ளது இந்த அரசாங்கம். இதுவரை 4,500 படையினரை பலி கொடுத்துவிட்டது. 156 பேரை காணாமல்போகச் செய்துள்ளது. 3 இலட்சம் பேரை அகதியாக்கியுள்ளது. ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருகிறது. அதில் பலர் கொலையுண்டுள்ளனர். பொருளாதார வீழ்ச்சியும் அரச வங்குரோத்து நிலைமையும் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் பய பீதி மக்களை அச்சத்தில் இட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு விலை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது சகோதரனும் அமெரிக்க பிரஜையுமான கோதாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்து படையினரை தவறாக வழி நடத்தி பலியாக்கி வருகின்றார். அவர் மூலம் புலிகளுக்கு 80 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை இந்தப் பணம் மூலம் பறிக்கப்பட்டு பயங்கரவாதம் வளர வழி வகுக்கப்பட்டுள்ளது.

அதனால் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஒளிந்து வாழ வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதுதான் மகிந்த சிந்தனையா? கௌரவமான சமாதானம், தர்ம இராச்சியம் எங்கே? அதிபாதுகாப்பு வலய கடத்தல்களுக்கு யார் பொறுப்பு?

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் நாம் கை கோர்த்தபோது தட்டி விட்டார்கள். தமிழர்களையும் முஸ்லிம்களையும் வேற்று நாட்டவர்கள் போல் பார்த்தார்கள். அவர்களுக்கு துரோகிகள் பட்டம் கொடுத்தார்கள். யுத்தம் செய்தார்கள். நாளாந்தம் அழிவுகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதியை கோதாபய வழி நடத்துகின்றார். அதனால் அரசாங்கமும் படைகளும் பலவீனமடைந்து வருகின்றன. அவர் மட்டும் யுத்தத்தை வைத்து பிழைப்பு நடத்துகின்றார். அமெரிக்காவிற்கு பணம் அனுப்பி சேமிக்கின்றார். திட்டமில்லாத அரச கொள்கை, பொருளாதாரம் வீழ்ச்சி, இதற்குக் காரணம் யார்? முகாமைத்துவம் இல்லாத வழி நடத்தலேயாகும்.

இந்த அரசாங்கம் வடக்கிற்கு ஒன்றையும் கிழக்கிற்கு வேறொன்றையும் தெற்கிற்கு அதை விட மாறுபட்டதொன்றையும் உலக நாடுகளுக்கு எல்லாவற்றிற்கும் மாறுபட்ட தொன்றையும் கூறி வருகிறது. அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களை அடிமைகளாக்கியுள்ளது.

பம்பைமடு தாக்குதலில் 95 படையினர் பலியாகியுள்ளதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயுதக்களஞ்சியம் மொன்று பல மணிநேரம் தீப்பற்றி எரிந்து நாசமாகி உள்ளது. 6 கொள்கலன் ஆயுதங்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் உள்ளது. கவச வாகனங்கள் காணாமல் போயுள்ளன. அரசாங்கத்தின் யுத்தக் கொள்கையின் விளைவு இது. இதனால் படையினர் பலவீனமடைந்துள்ளனர்.

1994 இல் புலிகள் கட்டுப்பாட்டு பகுதி என்று சந்திரிகா பிரித்தார். இன்று கொழும்பிலிருந்து தமிழர்களை விரட்டியடித்து நாடுபிரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் இலங்கை மக்கள் எமக்குள் பிரிவு வேண்டாம் இதை எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தமும் இதற்கு சான்று, எமக்கு யுத்தம் வேண்டாம் என்று கூறுகின்றோம்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.