Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன - இரா.சம்பந்தன்

வீரகேசரி நாளேடு

கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் அன்றாடம் கொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவசரகாலச் சட்டம் மக்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்கின்றது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் சபையில் குற்றம் சாட்டினார். அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட்டு இனப் பிரச்சினை தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய இரா. சம்பந்தன் எம்.பி. கடந்தகால அரசியல் வரலாறுகளை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தினார்.

திபெத் மாநில அரசியல் தீர்வு முறைகள், இந்தோனேஷியாவின் அச்சே மாநில பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாக யோசனைகள் 2005, 2004 ஆம் ஆண்டுகளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய மாவீரர் தின உரைகள் ஆகியவற்றையும் மேற்கோள்காட்டி உரை நிகழ்த்திய இரா.சம்பந்தன் எம்.பி.மேலும் கூறியதாவது:

கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் இடம்பெறுகின்ற கொலைகள்,கடத்தல்கள், காணாமல் போதல் போன்றவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுக்களை நியமிப்பதாக கூறுகின்றீர்கள். ஆனால், காணாமல் போனவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துவிட்டார்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றõர். நாட்டில் இடம்பெறுகின்ற கொலைகளை செய்பவர்கள் யார்? காணாமல் போவதற்கு யார் பொறுப்பு விசாரணைகளை நடத்தாமல் ஜனாதிபதி எப்படி அவ்வாறு கூறமுடியும். ஆணைக்குழுக்களை கொண்டு விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளியே கொண்டுவாருங்கள்.

ஜனநாயக மறுப்பு

அவசரகால சட்டம் நாட்டு மக்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்கின்றது. தமிழர்களுடைய சுதந்திரமும் ஜனநாயகமும் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றன. சிங்கள ஒற்றையாட்சி அதிகாரத்துவம் மேலோங்கியுள்ளது. சர்வதேச மனித உரிமை முறைமைகள் மனித விழுமியங்கள் மறுக்கப்படுகின்றன. தமிழர் கலாசாரம் புறக்கணிக்கப்படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Thu Jun 7 7:33:02 EEST 2007

தன்னாட்சி அதிகார சபை நிறுவுவதே தமிழர்களுக்கு உகந்த அரசியல் தீர்வு ஸ்ரீ.ல.சு.கவின் யோசனை நாடு முழுவதிலும் சிங்கள மேலாதிக்கத்தைக் கொண்டுவரும்

தன்னாட்சி அதிகார சபை நிறுவுவதே தமிழர்களுக்கு உகந்த அரசியல் தீர்வாக அமையும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வு யோசனையில், விடுதலைப்புலிகள் அப்போது முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழர்கள் தனி அடையாளம் கொண்டவர்கள். அவர்களுக்கு உள்ளக சுயநிர்ணயம் உண்டு. அது மறுக்கப்பட்டதாலேயே அவர்கள் வெளிப்புற சுயநிர்ணய உரிமையை நாடுகின்றனர்.

இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அரசியல் தீர்வு யோசனை, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரதேசமும் சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் வருவதற்கே வகை செய்யும். தமிழர்களின் உரிமைகள் அந்த யோசனையில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது:

ஸ்ரீல.சு.கட்சியின் தீர்வுயோசனை பேச்சுக்கான இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக இல்லை. பேரினவாத மேலாண்மையையே அது முதன்மைப்படுத்துகின்றது.

ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளன. ஜாதிக ஹெல உறுமய ஒரு படி மேலே சென்று சிங்களவர்கள் மட்டும்தான்

இலங்கையில் வாழவேண்டும் என்கின்றது. இனப்பிரச்சினை என்று ஒன்று இலங்கையில் இல்லை என்றும் அது சொல்கிறது.

ஒஸ்லோ, டோக்கியோ பிரகடனங்களை விட இந்தத் தீர்வு யோசனை மிகவும் குறைவாகவே உள்ளது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த யோசனையை விடவும் மிகக் குறைவானதாகவே இப்போதைய ஸ்ரீல. சு. கட்சியின் யோசனை உள்ளது.

சமஷ்டி முறையில் தீர்வு அமைய வேண்டும் என்று டோக்கியோ பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ரீல.சு.க. இப்போது சமர்ப்பித்துள்ள யோசனையில் சாதி, சமய மேலாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரம் பகிரப்பட்டாலும் கூட...

மத்திய அரசு தனது அதிகாரத்தை விரும்பினால் வழங்கலாம் அல்லது வாபஸ் பெறலாம் என்று இந்த யோசனையில் கூறப்படுகிறது. அதிகாரம் பகிரப்பட்டாலும் கூட அதைக் கட்டுப்படுத்தும் வலிமை பேரினவாத சக்திகளிடமே காணப்படுகிறது.

ஐ.தே.கட்சியினர் யோசனைகூட ஒற்றை ஆட்சியை ஏற்றதாகவே உள்ளது. அதிலும் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கேற்ப நாடு ஆளப்படுவதல்ல. சுயநிர்ணயமுள்ள சிறுபான்மையின மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் ஜனநாயகம்.

50 வருடங்களாக தமிழர்களிடம் உள்ள சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிப்புற சுயநிர்ணயத்தை தமிழர்கள் தொடரவேண்டியுள்ளது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்கின்றனர். தனி அடையாளம் கொண்டவர்கள். அவர்களுக்கு உள்ளக சுயநிர்ணயம் உண்டு.

அவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் வெளிப்புற சுயநிர்ணய உரிமையை நாடிச் செல்கின்றனர்.

தமிழர்கள் தமது வரலாற்று ரீதியான இடங்களில் சுயநிர்ணயத்துடன் வாழ வழியமைக்கப்படவேண்டும். தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

உரிமை மறுக்கப்படுவதால் நாடு அழிகிறது. இதற்காக புலிகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அதை ஏற்கமுடியாது. தமிழர்கள் ஜனநாயக ரீதியாகவே போராடினர். ஆனால் வன்முறையால் தமிழர்கள் நசுக்கப்பட்டனர். இந்த நாட்டில் தமிழர்கள்போல் எந்த மக்களும் துன்பத்தை அனுபவிக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க இனப் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்தார். இடைக்காலத்தன்னாட்சி அதிகாரசபையை வழங்க முன்வந்தார். ஆனால், அதற்காக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புலிகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனையை முன்வைத்தனர். முன்வைத்து நான்கு நாட்களில் சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதனால், அந்த முயற்சி பயனற்றுப்போனது.

2003இல் பிரபாகரன் தனது மாவீரர்தின உரையில் மக்களும் நாமும் யுத்தத்தை விரும்பவில்லை என்றார். நாம் முன்வைக்கும் யோசனை இறுதித்தீர்வை நோக்கியது என்றார். பேச்சுக்கு அடிப்படையாகவே முன்வைக்கப்பட்டது என்றார்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை யதார்த்தமான ஒன்று. சந்திரிகா, ரணிலின் ஆட்சியைக் கலைத்து தேர்தலை வைத்து தான் வென்றதன் பிறகு இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை தொடர்பாக தாம் பரிசீலிப்பார் என்றார். ஆனால், அது அப்படியே விடப்பட்டது. உடனிருந்த ஜே.வி.பி. அவரைத் தடுத்ததே இதற்குக் காரணம்.

பேச்சுக்கு வரவில்லை

என்று புலிகள் மீது

எவ்வாறு குற்றஞ்சுமந்த முடியும்?

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனையில் யோசனையில் முரண்பாடுகள் இருந்தால் அதைப் பேசித் தீர்த்துக்கொள்வோம். பேச்சுக்கு வரவே விரும்புகின்றோம் என்று மாவீரர்தின உரையில் உலகிற்கே பிரபாகரன் அறிவித்திருந்தார். அவ்வாறு இருக்கையில், புலிகள் பேச்சுக்கு வரவில்லை என்று எப்படிப் புலிகள்மீது குற்றம் சுமத்துவது.

தமிழ்மக்களின் பிரச்சினை அரசியல் உதைபந்தாட்டமாக மாறிவிட்டது. பலராலும் மாறிமாறி அவர்கள் விளையாடப்படுகின்றனர்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை தமிழர்களுக்கு பொருத்தமான தீர்வு. அதைச் ஸ்ரீல.சு.க. தனது தீர்வு யோசனையில் உள்ளடக்கியிருக்கவேண்டும்.

தமிழ் பேசுபவர்களின் நேர்மையான அரசியல் உரிமை மறுக்கப்படமுடியாது. இந்த அரசு நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும். தமிழர் பிரச்சினைக்கு நேர்மையான தீர்வொன்றை முன்வைக்கவேண்டும்.

சர்வதேச சமூகமும் இதை உணரவேண்டும். சர்வதேச சமூகம் தீர்வு விடயத்தில் முனைப்புக் காட்டுவதாக இல்லை. அவர்கள் அரசின் இராணுவ நடவடிக்கையை எதிர்பார்த்திருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கான தீர்வில் ஒன்றாக வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படாததை ஒருபோதும் ஏற்கமுடியாது. என்றார். (அச>)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.