Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி சிறப்பாக பேணுவதற்கு அரசாங்கம் முடிவு.

Featured Replies

போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி சிறப்பாக பேணுவதற்கு அரசாங்கம் முடிவு.

போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி அதனை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங் கத்தின் உயர்மட்ட தரப்பினருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தால் போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டியேற்படும் என்று அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் காரணமின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படும் நிலைமையே காணப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலைமையில் வடக்கிலிருந்து கொழும்புக்கு காரணமின்றி எவரும் வரவேண்டிய அவசியம் இல்லை. தமது ஆள் அடையாளங்களை நிரூபிக்க தவறுபவர்கள் கைதுசெய்யப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது: போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் தொடர்பாக ஒரு சில வாரங்களில் தீர்மானிக்கவுள்ளதாக கடந்தவாரம் நான் தெரிவித்தேன். அதன் பின்னர் அரசாங்க மட்டத்தில் உயர் மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி அதனை சிறந்த முறையில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையை சிறந்த முறையில் அமுல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

இருப்பினும் விடுதலை புலிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தால் போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டியேற்படும். முக்கியமாக புலிகள் விமானத்தாக்குதல்களில் ஈடுபட்டால் போர்நிறுத்த உடன்படிக்கையில் தங்கியிருப்பதா ? இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கவேண்டியேற்படும்.

அரசியல் தீர்வில் உறுதி

இதேவேளை இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படுகின்ற அரசியல் தீர்வின்மூலமே தீர்க்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சமாதான பேச்சுக்கான முயற்சிகளை அரசாங்கம் கடந்த காலங்களில் எடுத்திருந்தது. ஆனால் விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிச்சென்றுள்ளனர்.

-Tamilwin-

போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி சிறப்பாக பேணுவதாகக் கூறுவது ரம்புக்வெலவின் மற்றுமொரு காமெடி.

அரசு போர்நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்தப் போவதாகக் கூறுவது மெகா காமெடி.

பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.