Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள்

Featured Replies

உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள்

  • பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

ற்கனவே அறிவிக்கப்பட்டபடி பாரிஸ் நகரம் இன்று திங்கட்கிழமை முதல் உயர் தொற்று வலயமாகின்றது (maximum alert zone). இதன்படி நடைமுறைக்கு வரவிருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக உணவகங்கள் மூடப்படமாட்டாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது ஆயினும் அருந்தகங்கள் (Bars) அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படுகின்றன.

81-2-1-1024x630.jpegஉணவகங்கள் தமது வாடிக்கையாளர்களது பெயர், விவரங்கள், தொடர்பு இலக்கங்கள் என்பவற்றைத் தவறாமல் தினசரி பதிவு செய்வதற்கு ஒரு பதிவேட்டைப் பேணுதல் அவசியம். எவருக்கும் தொற்று ஏற்பட்டமை தெரியவந்தால் ஏனையோரை அது குறித்து எச்சரிப்பதற்கும் வாடிக்கையாளர்களுடன் எந்நேரமும் தொடர்புகளைப் பேணுவதற்காகவும் இந்தப் பதிவேடு அவசியமாக்கப்படுகிறது.

மேசைகளுக்கு இடையே பேணப்படவேண்டிய இடைவெளி ஒரு மீற்றராக வரையறை செய்யப்பட்டுள்ளது. உள்ளேயும் வெளிப் புறங்களிலும் நின்றுகொண்டு உண்பது, குடிப்பது முற்றாகத் தடைசெய்யப்படுகிறது.

எல்லா மேசைகளிலும் கைகளை சுத்திகரிக்கும் ‘ஜெல்’ (hydroalcoholic gel) வைக்கப்பட வேண்டும்.

உணவு உண்ணுகின்ற சமயங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இரவில் 10 மணிக்கு அன்றி உணவகங்களுக்கான வழமையான நேரத்தில் அவற்றை மூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது

உணவக நிர்வாகங்கள் முன்மொழிந்தது போன்று வாடிக்கையாளரது உடல் வெப்பநிலையைப் பரிசீலிப்பது போன்ற சோதனைகளைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

உயர் தொற்று வலயங்களில் நடைமுறைக்கு வருகின்ற இக் கட்டுப்பாடுகள் அடுத்த 15 தினங்களுக்கு அமுலில் இருக்கும். அதன் பிறகு தொற்று நிலைமையை மதிப்பீடு செய்து இதில் மாற்றங்கள் செய்யப்படும்.

இன்று பகல் பாரிஸ் பொலீஸ் தலைமையகத்தில் தலைமைப் பொலீஸ் அதிகாரி Didier Lallement நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நகர மேயர் ஆன் கிடல்கோவும் பங்குகொண்டார். பாரிஸ் பிராந்தியத்தில் அமுலுக்கு வரும் புதிய சுகாதார நடைமுறைகள் அங்கு வைத்தே அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை வருமாறு:

அருந்தகங்கள், விளையாட்டு மண்டபங்கள், நீச்சல் தடாகங்கள், நடன மண்டபங்கள், சிறுவர் விளையாட்டு மண்டபங்கள் (bars, gymnases, piscines, salles de danse, salles de jeux) ஆகியன மூடப்பட்டிருக்கும்.

திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும்.

மாணவர் ஒன்றுகூடல்கள், களியாட்டங்கள் தடைசெய்யப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் வகுப்பறைகள், விரிவுரை மண்டபங்களில் மாணவரது எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கப்படும்.

பாரிஸ் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் வணிக வளாகங்கள் (centres commerciaux) நான்கு சதுர மீற்றர்களுக்கு (4 mètres carrés) ஒருவர் என்ற எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.

https://thinakkural.lk/article/77203

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.