Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ‘அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்’ துணைவேந்தர் சூரப்பா பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ‘அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்’ துணைவேந்தர் சூரப்பா பேட்டி

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ‘அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்’ துணைவேந்தர் சூரப்பா பேட்டி

சென்னை, 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. அதுதொடர்பாக சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக எழுந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.


இதுதொடர்பாக அரசியல் கட்சிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக தரவரிசையில் இடம்பிடித்து இருந்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இதற்காக 2017-ம் ஆண்டு அன்றைய உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் ஒப்புதலுடன் பரிந்துரை கடிதம் வெளிப்படை தன்மையுடன் முறையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதை அதிகாரமளிக்கும் குழு ஆய்வு செய்த பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சிறப்பு அந்தஸ்து மெகா ஆராய்ச்சி நிதி திட்டம் ஆகும். இது நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைக்க ஏற்படுத்தப்பட்டது அல்ல. இதன் மூலம் மத்திய அரசு தரும் நிதியை கொண்டு ஆராய்ச்சி, கற்பித்தல், கற்றல், புதுமை கண்டுபிடிப்பு போன்ற கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதற்கு மாநில அரசின் தலைமை செயலாளர் மே 29-ந் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதனை அடிப்படையாக வைத்தும், ஏற்கனவே மாநில அரசாங்கத்திடம் என்ன கூறி இருந்தேனோ? அதையும் ஜூன் 2-ந் தேதி நான் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதமாக எழுதினேன். தனிப்பட்ட முறையில் எந்த கடிதமும் நான் எழுதவில்லை.

மேலும், கடந்த மே 30-ந் தேதி சிறப்பு அந்தஸ்து பெற காலஅவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததால், மே 28-ந் தேதி முதல்-அமைச்சரை சந்தித்து அது தொடர்பாக விளக்கம் அளித்தேன். கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் அதுகுறித்து விளக்கினேன். அப்போது என்ன விளக்கினேனோ அதையேதான் கடிதமாக எழுதினேன்.

இதற்கிடையில் 69 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினை வந்தபோது கூட நான் அதுபற்றி விளக்கம் கேட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக நான் கடிதம் எழுதினேன். அதற்கு மத்திய அரசு பதில் எழுதி இருந்தது. அதில் மாநில அரசின் சட்டத்தின்படி எது பின்பற்றப்படுகிறதோ அதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே நிர்வாகம், இடஒதுக்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. நான் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் தான் இருக்கிறேன். 6 முறை முதல்-அமைச்சரையும், அமைச்சரை பலமுறையும் சந்தித்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் குறித்து மாநில அரசு என்னிடம் கேட்டது. அதை கொடுத்து இருக்கிறேன். மற்றவர்கள் செய்யமுடியாததை நான் செய்கிறேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி தான். கல்விக்கான என்னுடைய முயற்சியை நான் தொடருவேன். என் பணியை மகிழ்ச்சியோடு செய்கிறேன். தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ‘உங்களை பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்ய கவர்னரிடம், முதல்- அமைச்சர் பரிந்துரைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என்று சூரப்பாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘சிரித்தபடி, மேல்நோக்கி பார்த்து கைகூப்பி’ எதுவும் பதில் கூறவில்லை.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/13014700/I-wrote-a-letter-to-the-Central-Government-saying.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலைக்கு மூடு விழா நடத்த சதி - அனல் கக்கும் டாக்டர் எழிலன்

அதிமுகாவின் கையாலகத்தனம் - காலில் விழுந்தெலும் ஏடப்படிக்கு மம்தாமாதிரி எங்கே தைரியம் வரப்போகின்றது - அடிமை அரசு

எதுக்கு சார்!! பல்கலைக்கழகம் எல்லாம்!! பாஜக அரசின் நித்தியானந்தா "ஆசிரமம் இருந்தால் போதாதா????
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறியியல் படிப்புகளுக்கு வரும் பேராபத்து 

 

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரப்பா மீதான புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு

சூரப்பா மீதான புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் புகார்கள் எழுப்பப்பட்டன. 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 


 
குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரியர் தேர்வு விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார் எழுப்பப்பட்டதாக  உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/13132603/2061388/Tamil-News-inquiry-committee-formed-to-probe-allegations.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளுக்குப் பதவி... ஆன்லைன் செமஸ்டர் கோல்மால்? - விசாரணைக் கமிஷனால் மிரண்ட சூரப்பா!

சூரப்பா

சூரப்பா ( Jerome )

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த செமஸ்டர் தேர்வை பெங்களூரு நிறுவனம் ஒன்று ஆன்லைனில் நடத்தியது. இந்த முறையும் செமஸ்டர் தேர்வை நடத்த 9.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது தமிழக அரசு. ``சூரப்பாவின் பதவிக் காலம் முடிவதற்குள் விசாரணைக் கமிஷன் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறி. அவர் கையாண்ட இரண்டு விஷயங்கள்தாம், இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்" என்கின்றனர் கல்வியாளர்கள்.

அண்ணா பல்கலைக்கழகம்
 
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பிறகு, பல மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், மாநில அரசு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார் ஆளுநர். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குத் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருந்தும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவைக் கொண்டு வந்தார் அவர். இதே பாணியில், ஏற்கனவே தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியையும் தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்துக்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா தேவியையும் நியமனம் செய்தார்.

 
 

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவியேற்ற நாளில் இருந்தே, உயர்கல்வித் துறையோடு பல விஷயங்களில் முரண்பட்டார் சூரப்பா. ஆளுநரின் ஆசிர்வாதம் இருந்ததால் சூரப்பாவை எதிர்த்து மாநில அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தநிலையில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில், மாநில அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கு கடிதம் அனுப்பினார் சூரப்பா. இதற்கு ஏ.ஐ.சி.டி.இ தரப்பில் இருந்து வந்த மெயில் குறித்தும் பேட்டியளித்தார். இதனை எதிர்பாராத உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ` மெயிலில் என்ன உள்ளது என்பதை அறிந்த பிறகு, கருத்து தெரிவிப்போம்' என்றார். தமிழக எதிர்க்கட்சிகளின் பாணியில் மாநில அரசுக்கு எதிராக ஒரு துணைவேந்தர் செயல்படுவதை, உயர்கல்வித் துறையில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளும் ரசிக்கவில்லை.

கே.பி.அன்பழகன்
 
கே.பி.அன்பழகன்

அதேநேரம், பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து (GOI) பெறுவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கடிதத்தில், `அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.314 கோடி என ஐந்து ஆண்டுகளில் ரூ.1,570 கோடி தேவைப்படுகிறது. இதற்கான நிதியைப் பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடியும்' என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் இட ஒதுக்கீடு பாதிக்கும் எனக் குரல்கள் வந்தபோது, மாநில அரசின் சட்டத்தின்படி எந்தத் தடையும் இல்லை என மத்திய அரசு கூறியதாக சூரப்பா தெரிவித்தார்.

 

இந்தநிலையில், துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேட்டுப் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், `` அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த செமஸ்டர் தேர்வை பெங்களூரு நிறுவனம் ஒன்று ஆன்லைனில் நடத்தியது. இந்தமுறையும் செமஸ்டர் தேர்வை நடத்த 9.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. வழக்கம்போல பெங்களூரு கம்பெனியே வர வேண்டும் என்பதற்காக துணைவேந்தர் தரப்பினர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த ஆன்லைன் தேர்வை பல்கலைக்கழகத்தால் நடத்த முடியாதா?.. ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் எளிதாக நடத்த முடியுமே என்ற வாதத்தையெல்லாம் சூரப்பா தரப்பினர் புறம்தள்ளிவிட்டனர். இதே ஆன்லைன் தேர்வை, பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகளை வைத்து 2.25 கோடி ரூபாயிலேயே நடத்த முடியும்.

இதுதவிர, ஐ.ஐ.டி-யில் பணியாற்றி வந்த அவரது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கௌரவப் பதவி வழங்கியுள்ளார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் சூரப்பா குடும்பம் சொல்வதுதான் எடுபடுகிறது. இதுகுறித்து அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்ற எண்ணத்தில், விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர்" என்றனர் விரிவாக.

 

தமிழக அரசின் முடிவு குறித்து, பேராசிரியர் சிவக்குமாரிடம் பேசினோம். `` பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் இருக்கிறார். எனவே, பல்கலைக்கழக விதிகளின்படி, விசாரணைக் கமிஷனை அமைப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் உண்டு. இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. அதுவும், சூரப்பாவின் பதவிக் காலம் முடிவதற்குள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறி. சூரப்பாவைப் பொறுத்தவரையில், இரண்டு விஷயங்களில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் செயல்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவக்குமார்
 
பேராசிரியர் சிவக்குமார்

ஒன்று, அரியர் தேர்ச்சி தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ-க்கு சூரப்பா அனுப்பிய கடிதம், இரண்டாவது எமினன்ஸ் அந்தந்து தொடர்பாக பணத்தைப் பல்கலைக்கழமே திரட்டுவது தொடர்பாக மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு அவர் அனுப்பிய கடிதம் ஆகியன. மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலேயே அவர் செயல்பட்டார். மேலும், துணைவேந்தராக வந்த பிறகு சூரப்பா என்னென்ன ஊழல்கள் செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியில் வரவில்லை. எனவே, அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. மாநில அரசு நியமித்துள்ள கமிஷன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்றார் உறுதியாக.

 

அடுத்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம். `` பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், துணைவேந்தராக வருபவர்கள் அரசுக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளித்தால்தான் முடியும். சூரப்பாவைப் பொறுத்தவரையில், வேண்டுமென்றே அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தார். இதுவரையில் எந்தத் துணைவேந்தரும் இப்படி நடந்து கொண்டது கிடையாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இருப்பவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் பல உண்மைகள் வெளியில் வரும். இந்த விசாரணைக் கமிஷனில் சூரப்பாவுக்கு விருப்பம் இல்லையென்றால், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் கிளம்புவது நல்லது" என்றார் இயல்பாக.

பெங்களூரு புகழேந்தி
 
பெங்களூரு புகழேந்தி

விசாரணைக் கமிஷன் தொடர்பாகப் பேட்டியளித்த சூரப்பாவும், ''என் மீதான புகார்களில் உண்மை இல்லை என்று அனைவருக்கும் தெரியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசாகூட முறைகேடு செய்யப்படவில்லை. இந்த புகார்களால் எனது பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சர்யம் அளிக்கின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையைக் கடைபிடித்துள்ளேன். பணி நியமனங்களில் முறைகேடு நடந்திருந்தால் ஆதாரத்தை காட்டட்டும்'' என்றார் கொதிப்புடன்.

சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என விசாரணை குழுவுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கண்துடைப்பா என்பது போகப் போகத்தான் தெரியும்.

https://www.vikatan.com/government-and-politics/education/anna-university-vc-surappa-express-shock-over-tn-government-investigate-against-him

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.