Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா இராணுச் சீருடையுடன் சரளமான சிங்களத்தில் பேசி வன்னிச் சமரை நடத்திய விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம்

Featured Replies

சிறிலங்கா இராணுச் சீருடையுடன் சரளமான சிங்களத்தில் பேசி வன்னிச் சமரை நடத்திய விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம் (மேலதிக இணைப்பு)

வவுனியாவில் சிறிலங்கா இராணுவச் சீருடையுடன் சரளமான சிங்களத்தில் பேசியபடி சிறிலங்கா இராணுவத்தினரை சுற்றிவளைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

போக்கறுவன்னியில் நடந்த தாக்குதல் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:

கடந்த சனிக்கிழமை (02.06.07) வவுனியாவுக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்றிருந்தார். இராணுவ அதிகாரிகளைச் சந்தித்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதனை சுட்டிக்காட்டி விவாதித்தார். விடுதலைப் புலிகள், கடந்த சனிக்கிழமை (02.06.07) இரவே நடத்தக்கூடும் என்றும் கூறியிருந்தார்.

இரானுவத்தினருக்கு சில அறிவுறுத்தல்களை அளித்து கொழும்புக்கு சரத் பொன்சேகா திரும்பிவிட்டார்.

கடந்த சனிக்கிழமை (02.06.07) இரவு 7.30 மணியளவில் வவுனியாவை விட்டு சரத் பொன்சேகா வெளியேறிய சில மணி நேரங்களில் கல்மடுவில் நிலைகொண்டிருந்த 57 ஆம் படையணி, விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி தாக்குதலுக்குள்ளானது.

இத்தாக்குதல் அரை மணித்தியாலம் நீடித்தது. 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 10 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். பல மாதங்களுக்கு முன்பாக பிரிக்கேடியர் சுமித் மனவடு தலைமையில் இந்தப் படையணியை சரத் பொன்சேகா உருவாக்கியிருந்தார். மன்னார் நடவடிக்கைகளை மனதில் கொண்டு இந்தப் படையணி உருவாக்கப்பட்டது. கேணல் ரவிபிரிய என்ற மூத்த அதிகாரியும் இந்தப் படையணியில் இடம்பெற்றிருந்தார்.

கல்மடு தாக்குதலுக்கு அரை மணித்தியாலம் பின்னர் வவுனியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆட்டிலறிப் படைத்தளமான 16 ஆம் படையணி, விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளானது.

130 மி.மீ ஆட்டிலறிகள் கொண்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இராணுவத்தினரின் வசிப்பிடம் ஒன்று நாசமடைந்தது. மேலும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றும் வெடித்துச் சிதறியது. இதனையடுத்து அந்த ஆயுதக் களஞ்சியம் அருகே இருந்த மற்ற இரு ஆயுதக் களஞ்சியங்களையும் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டளைத் தளபதி மேஜர் டபிள்யூ.ஏ.றொகான் மேற்கொண்டார்.

அதே நேரத்தில் ஓமந்தையின் மேற்குப் பகுதியில் போக்கறுவன்னி முன்னரங்க நிலைகளை விடுதலைப் புலிகள் இலக்கு வைத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் வன்னி முன்னரங்க நிலைகளை ஊடறுத்து போக்கறுவன்னியில் அமைக்கப்பட்ட மோட்டார் தளத்தை கைப்பற்றினர். 9 ஆம் கெமுனு மற்றும் 4 ஆம் சிங்க படையணிகளில் இருந்த இராணுவத்தினர் பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டனர். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் இராணுவத்தினரின் இரு மோர்ட்டார் செலுத்திகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

கடந்த வருடம் ஒக்ரோபர் 11 ஆம் நாள் முகமாலைச் சமரை நினைவூட்டும் வகையில் வன்னிச் சமர் அமைந்தது. வாகரை நடவடிக்கையில் கூட விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட முகாம்களைத்தான் இராணுவத்தினர் கைப்பற்றினர்.

போக்கறுவன்னிச் சமரில் இராணுவத்தினரின் சீருடை அணிந்து சிங்களத்தில் சரளமாகப் பேசியபடி விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இராணுவச் சீருடையில் ஊடுருவிய புலிகள் அங்கிருந்த கஜபாகு றெஜிமென்ட் படையினரை முன்னுக்கு வருமாறு சிங்களத்தில் அழைத்தனர். விடுதலைப் புலிகளின் சிங்கள மொழியிலான அழைப்பை சந்தேகிக்காத இராணுவ அதிகாரி தனது இராணுவத்தினருடன் முன்னுக்கு வந்தபோது, திடீரென விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான துப்பாக்கிச் சூட்டில் லெப். தர அதிகாரி அந்த இடத்திலேயே பலியானார். அப்போதுதான் தாங்கள் முற்றுகைக்குள் சிக்க வைக்கப்பட்டிருப்போம் என்பதனை இராணுவத்தினர் உணர்ந்தனர்.

இச்சமரை விடுதலைப் புலிகளின் தளபதிகளான கேணல் பானு, கேணல் சொர்ணம் ஆகியோர் வழி நடத்த கனரக ஆயுதப்பிரிவை தளபதி வண்ணக்கிளி மாஸ்ரர் வழிநடத்தினார்.

இச்சமர் கடந்த சனிக்கிழமை இரவு வரை நீடித்தது.

போக்கறுவன்னி சமரில் 2 லெப். தர அதிகாரிகள் உள்ளிட்ட 36 இராணுவத்தினர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை. தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையம் வெளியிட்ட அறிக்கையில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் 13 பேர் காணாமல் போனதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்பு 62 என்றும் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். முகமாலையைப் போல் 100 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் என்று புலிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

குடும்பிமலையில் படையினருக்கு பாரிய இழப்புப்கள்: போலிப் பரப்புரையில் அரச ஊடங்கள்

குடும்பிமலைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை அடுத்து இழப்புக்களை மூடிமறைக்கும் போலிப் பரப்புரைகளில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு ஊடக மையமும் களமிறங்கியுள்ளன.

விடுதலைப் புலிகளால் தந்திரோபய நோக்கோடு பின்வாங்கப்பட்ட நான்கு இடங்களில் சிறீலங்காப் படையினர் ஏற்கனவே முகாம் அமைந்திருந்த நிலையில் அந்த இடங்களை புதிதாக தாம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சில் இணைத்தளக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தாம் விடுதலைப் புலிகளின் நான்கு படைமுகாங்கள் மீது ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதலில் மூலம் முற்றாக அழிந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபான்வில, வேப்பன்வெளி, அக்கரைத்தீவு, மாவடியோடை ஆகிய பகுதிகளையே படையினர் புதிதாகக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்த இடங்கள் படையினர் காலரண்கள் அமைக்கப்பட்ட யுத்த பிரதேசமாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.