Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்புத் தரப்பின் திரிப்பு அம்பலமானதால் அரசுக்கு இக்கட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-12

பாதுகாப்புத் தரப்பின் திரிப்பு அம்பலமானதால் அரசுக்கு இக்கட்டு

கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வடக்குக், கிழக்குக்கு அனுப்பிவைக்கும் தனது முட்டாள்தனமான முடிவுக்கு உள்நாட்டிலும், தேசிய ரீதியிலும் எழுந்த கடும் எதிர்ப்பைக்கண்டு கடைசியில் அடிபணிந்து விட்டது மஹிந்தரின் அரசு.

தனது அரசின் பிரதமரைக் கொண்டே தமிழினத்திடம் பகிரங்க வருத்தமும் மன்னிப்பும் கோர வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டார் ஜனாதிபதி மஹிந்தர். நேர்ந்த முழுத் தவறுக்கும் அரசு கடைசியாகப் பொறுப்பேற்றுவிட் டது.

தமிழர்களைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அனுப்பும் அராஜகம் வியாழன் விடிகாலை மேற்கொள்ளப்பட்ட போதே அரசுத் தலைமை தன்னைத் திருத்திக் கொண்டிருந்தால் அல்லது திருத்திக் கொள்ள முயன்றிருந்தால் அதில் நியாயமிருந்திருக்கும்.

ஆனால்

இந்தக் கொடூரம் குறித்து தமிழ் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு நேரடியாகத் தொலைபேசியில் தெரிவித்த பின்னரும்

இது தொடர்பாக முழு நாடாளுமன்றமுமே அல்லோலகல்லோலப்பட்டு, அமளி துமளிப்பட்ட பின்னரும்

அடுத்த நாள் உயர்நீதிமன்றம் நேரடியாக இதில் தலையிட்டு இடைக்காலத் தடை உத்தரவு விதித்த பின்னரும்

உள்நாட்டில் ஐ. தே. கட்சி, ஜே. வி. பி., ஆளும் தரப்பில் உள்ள இ. தொ. கா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, புளொட், ஆனந்தசங்கரி அணி என்று பல்வேறு கட்சிகளும், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என்று சர்வதேச நாடுகளும், ஆசிய மனித உரிமைகள் மையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இந்த அராஜகத்தை அப்பட்டமான இன ஒதுக்கல் நடவடிக்கை என ஒரே மூச்சில் கண்டித்த பின்னரும் மூன்று நாள்கள் கழித்து சாவகாசமாக அரசு இந்தக் குற்றத்தை பெரும் தவறு என ஒத்துக்கொள்கின்றது.

அதுவும்

சுமார் நானூறு தமிழர்களை தலைநகரில் பல்லாயிரக் கணக்கானோர் பார்த்திருக்க வல்வந்தமாக அவர்களது விருப்புக்கு மாறாக ஆயுத முனையில் பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் தொடங்கி, சர்வதேசத்துக்கு அளித்த பதில் வரை சகல இடங்களிலும் அப்படி வல்வந்தமாக தமிழ் மக்களை அனுப்பவில்லை என்று பெரும் பொய் மூடையை அவிழ்த்து விட்டுக் கொண்டே இந்த அராஜகத்தை இலங்கைப் பாதுகாப்புத்துறை அரங்கேற்றியது.

தமிழ் மக்கள் விடுதிகளிலிருந்து தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே பஸ்களில் அனுப்பப்பட்டனர் என்று பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஏன், அது அப்படி நடக்கவில்லை, தமிழ் மக்கள் தங்கள் விருப்புக்கு மாறாகவே வவுனியாவுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற உண்மையைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா, ஞாயிறு பிற்பகல் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள முதல், ஞாயிறு காலையில் கூட பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளம் மூலம் தகவல் வெளியிட்ட பொலிஸ் மா அதிபரே அந்த உண்மையை மறைத்தாரே.....?

பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் பார்த்திருக்க, பல நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அனுப்பியமை உண்மை என்பது இப்போது அரசினாலேயே ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கின்றது. இதன் மூலம் தலைநகரில், அவ்வாறு பல்லாயிரம் பேர் பார்த்திருக்கும் விடயத்தையே முழுதாக மூடி மறைத்துத் திரித்துக் கூறும் "தடிப்பு"க் கொண்ட "பொய்பேசும்" கூட்டமாகவே இந்த அரசின் பாதுகாப்புத்துறை உள்ளது என்பதும் இப்போது நிரூபணமாகியிருக்கின்றது. முல்லைத்தீவில் செஞ்சோலை சிறார்கள் மீது நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சிலிருந்து இப்போதைய ஆட்கடத்தல்கள் பிரச்சினை வரையான ஒவ்வொரு விடயத்திலும் இப்படித்தான் பாதுகாப்புத் தரப்பினரால் "உண்மை" உரைக்கப்பட்டு வந்தது; வருகிறது.

அந்தத் திமிரின் தொடர்ச்சியாகவே இப்படித் தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் வல்வந்த மாக எடுக்கப்பட்ட அராஜகத்தையும் மிக இலகுவாக மூடி மறைக்கும் எத்தனம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முட்டாள் தனம் இங்கு பலிக்கவில்லை. அரசு மண்டியிட்டு வருத்தம் கேட்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த அராஜக நாடகத்தின் பின்புலத்தில் புதைந்திருக்கும் மற்றொரு அம்சமும் இப்போது அம்பலத்துக்கு வந்தி ருக்கின்றது. அதுவும் கவனிக்கத்தக்கது.

ஏற்கனவே, தமிழர் தாயகத்தின் மீது பெரும் போரியல் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைக் கட்டவிழ்த்து விட அரசுத் தரப்புத் தயாராகி வருகின்றது என்ற தகவல் கசிந்த வண்ணம் இருக்கின்றது. எந்த நேரமும் தமிழர் தாயகத்தில் பெரும் யுத்தம் மூளலாம் என்ற இக்கட்டு. அப்படி நேர்ந்து, கொடூர யுத்தம் இங்கு வெடித்தால், அதிலிருந்து தப்புவதற்காகத் தமிழ் மக்கள் தலைநகர் கொழும்பு உட்பட பிற இடங்களுக்கு விழுந்தடித்து இடம்பெயருவார்கள், அகதிகளாக வெளியேறுவார்கள் என்பது நிச்சயம். அப்படி வெளியேறும் மக்களையும் தலைநகருக்கோ, தென்னிலங்கைக்கோ இடம்பெயரவிடாது இடைவழியிலேயே தடுத்து, மறிக்கும் தந்திரோபாயத் திட்டத்தையும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது என்ற உள்வீட்டுத் தகவல் இப்போது தலைநகரிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அனுப்பிய சம்பவத்தை அடுத்து வெளிவந்திருக்கின்றது.

அவ்வாறு கொழும்புக்கு வரும் தமிழர்களைத் தடுக்கக் கூடாது என்பதும் இப்போது உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்காலத் தடை உத்தரவில் அடங்கியுள்ளது. இது விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். எது, எப்படியோ, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அரசின் பாதுகாப்புத் தரப்பின் உண்மை சொரூபம் எத்தகையது என்பதை இந்தச் சம்பவங்கள் உலகுக்கு அம்பலப்படுத்தி விட்டன. அந்த வகையில் இந்த அவலத்துக்கு மத்தியிலும் தமிழருக்கு ஓர் ஆறுதல் கிட்டியிருக்கின்றது எனலாம்.

நன்றி உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை த.ஈ.விடுதலைப்புலிகளின் உளவாலிகளின் செயல்தான் இது என்று கதையை புனையவில்லை.

பரபரப்பு பத்திரிகையை பார்த்தால் நல்லாயிருக்கும்.

Edited by Valvai Mainthan

நல்லவேளை த.ஈ.விடதலைப்புலிகளன் உளவாலிகளின் செயல்தான் இது என்று கதையை புனையவில்லை.

பரபரப்பு பத்திரிகையை பார்த்தால் நல்லாயிருக்கும்.

பரபரப்பின் விளம்பர ஏஜன்டா??? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.