Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைகளும் பழைய மாணவர் சங்கங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளும் பழைய மாணவர் சங்கங்களும்
======================================

இலங்கையில் மக்கள் தமது மதத் தலங்களுக்கு இணையாக அல்லது அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தாம் கல்வி கற்கும், கல்வி கற்ற பாடசாலையைத்தான். தாம் கல்வி கற்ற பாடசாலையை கோவிலாகவே நினைப்பவர்களும் இருக்கிறார்கள். (பல பாடசாலைகளுக்குள் கோவில்கள் இருப்பது வேறு விடயம்.) இவ்வாறு பாடசாலை மீதான நன்றியுணர்வு , விசுவாசம் என்பவற்றின் விளைவாக  பழைய மாணவர் சங்கங்கள் உருவாகின. கூட்டுறவை வளர்ப்பது மற்றும் பள்ளியின் கடந்தகால மாணவர்களிடையே ஒற்றுமையின் பிணைப்பை ஏற்படுத்துதல், பழைய மாணவர்களிடையே தாம் கற்ற பாடசாலைக்கு தொடர்ந்தும் விசுவாசத்துடன் இருக்கவும் சேவையின் உணர்வை அவர்களுள் ஊக்குவிப்பது என்பன இந்த சங்கங்களின் இலக்குகளாக நியமிக்கப்பட்டன. 

முதலில் நாட்டில் இருந்த பிரபல பாடசாலைகளிலிருந்துதான் பழைய மாணவர் சங்கங்கள் உருவாகின. அவற்றின் பழைய மாணவர்கள் வேறு ஒரு நகரத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் சூழலில் அங்கு தமது பழைய மாணவர் சங்கத்தின் கிளையொன்றை உருவாக்க முற்பட்டனர். அதன் அடுத்த கட்டமாக இவ்வாறான பழைய மாணவர் சங்கங்கள் புலம்பெயர் தேசங்களிலும் கிளை பரப்பத் தொடங்கின. இதே காலப்பகுதியில் இவ்வாறன பிரபல பாடசாலைகளைத் தொடர்ந்த ஏனைய பாடசாலைகளிலும் பழைய மாணவர் சங்கங்கள் உருவாகின. 

இவ்வாறான சங்கங்கள் தமது பாடசாலையின் நலனுக்காக, பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. இதைத் தவிர பழைய மாணவர்கள் தமக்குள்ளே நெருக்கமான வலையமைப்புகளை உருவாக்கவும் தொழிற்சந்தையில் தொடர்புகளை ஏற்படுத்தவும் உதவுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தச் சங்கங்கள் தாயகத்தில் தமது பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மறுசீரமைப்பு வேலைகள், விளையாட்டுத்துறை வளர்ச்சி போன்ற தேவைகளுக்கு தொடர்ச்சியாக பழைய மாணவர்களிடம் நிதி திரட்டி தாம் கற்ற பாடசாலையை வளம் நிறைந்த பாடசாலைகளாக மாற்றுவதில் வெற்றி கண்டும் வருகின்றன.

இந்தப் பழைய மாணவர் சங்கங்கள் தமது பாடசாலைக்கு இவ்வாறான சேவைகளையும் உதவிகளையும் வழங்கியபோதும் அதன் மறுபக்கத்தில் பல பாடசாலைச் சங்கங்களின் செயற்பாடுகள் இந்தச் சங்கங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதைவிடவும், பல நேரங்களில் தாம் கற்ற பாடசாலையையே இழிவுபடுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. பதவிப் போட்டியாலும்,  தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும் சில வேளைகளில் பாடசாலையின் செயற்பாடுகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்  இவ்வாறான செயற்பாடுகளில் சில பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஈடுபடுகிறார்கள் என்பதே பலரின் வாதமாக இருக்கிறது.  

இந்த பழைய மாணவர் சங்கங்கள் சிலவற்றின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது இவர்கள் பாடசாலைக் காலத்திலும் பின்னர் தாம் வாழ்ந்த சமூகத்திலிருந்தும் என்ன கற்றுக் கொண்டார்கள் என்ற கேள்வியே எழுகிறது. இவ்வாறான தனிநபர்கள் தமக்குப் பின்னர் வருபவர்களுக்கு என்ன வகையான உதராணத்தை விட்டுச் செல்கிறார்கள்?

சில பழைய மாணவர் சங்கங்களில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வருடாந்தப் பொதுக்கூட்டம் எனபது ஒரு பெரும் போருக்கு ஒப்பானது. பதவிகளுக்கான அடிதடிகள் சில பழைய மாணவர் சங்கங்களுள் அடிக்கடி நடைபெறுவது வழமையாகி விட்டது. சில சங்கங்களில், அரசியல் கட்சிகள் போலவே கோஷ்டிகளும் அவர்களிடையே கோஷ்டி மோதல்களும் நடைபெறுவதும் வழமையான விடயங்களாகி விட்டது. இதன் உச்சக் கட்டமாக சில சங்கங்களில் தேர்தல் முரண்பாடுகள், பதவிப் போட்டிகளால் நீதிமன்றம் வரை சென்ற சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. தேர்தலின் பின்னர் தலைவராக பதவி வகிப்பவர் தனக்குச் சாதகமானவர்களைப் பயன்படுத்தி தனது விருப்பம் போல சங்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், வெளிப்படைத்தன்மை அற்ற வகையில் இயங்குதல் என்பனவும் சில சங்கங்களில் வழமையாகி விட்டது.

சில சங்கங்களின் தலைமையில் இருப்பவர்கள் தமது பதவிக்காலத்தில் தமது தமது சாதனைகளாகக் காட்டுவதற்காகவே பாடசாலையில் இருந்து வேண்டுகோள் வராத நிலையிலும் வலிந்த பாடசாலை அதிபருடன் தனியாக பேசி, அவரையும் சம்மதிக்க வைத்த பின்னர் தனது நாட்டில் உள்ள உறுப்பினர்களை நன்கொடை தரும்படி நெருக்கடி கொடுப்பதும் தனது பதவிக் காலத்தில்  தனது சாதனையாகக் காட்டுவதற்காக பெரும் எடுப்பில் கலை நிகழ்ச்சிகள் செய்வதும் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளில்  இயங்கும் அனைத்து சங்கக் கிளைகளும் இணைந்து கட்டிய ஒரு கட்டிடத்தைத் திறக்கும் காலத்தில் மற்றைய கிளைச் சங்கங்களுக்கு அறிவிக்காது தான் மட்டும் தனியொருவனாக ஊருக்கு ஓடிப்போய் மாலை மரியாதையுடன் அதைத் திறந்து வைத்து சமூக வலைத்தளங்களில் போட்டுப் படம் காட்டும் சங்கத் தலைவர்களும் இருக்கிறார்கள். 

இது தொடர்பாக வேறு வேறு பாடசாலைகளின் பழைய மாணவர்களைக் கேட்டபோது தெரிய வந்த இன்னொரு விடயம்தான், பல பிரபல பாடசாலைகள் ஒரு வெள்ளை யானையை வைத்துப் பராமரிக்கிறார்கள் என்பதும் அதற்குத் தீனி போட வருடா வருடம் பழைய மாணவர்களால் நிதி கொடுத்தும் மாளாது என்பது. (வெள்ளை யானை என்ற உவமை விளங்காதவர்களுக்கு – இலங்கை அரசுக்கு மத்தள விமான நிலையம் ஒரு வெள்ளை யானை என்று கொள்ளலாம்). வெளிநாட்டில் உள்ள கிளைச சங்கங்கள் டொலரிலும் பவுண்ட்ஸ் இலும் பணம் தரும்தானே என்ற மனநிலையும் இவ்வாறு சில பாடசாலைகள் தேவையற்ற செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இன்னும் சில சங்கங்களின் வெளிநாட்டுக் கிளைகளின் தலைவரும் அவரின் சில பிரதானிகளும், தங்களை தாம் முன்னர் கல்வி கற்ற பாடசாலையின் இயக்குனர் குழுமம் என்றே தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். பாடசாலையில் யார் அதிபராக இருக்கலாம், யார் அடுத்த அதிபராக வரலாம் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக தாங்களே இருக்க வேண்டும் என்று அவர்களே முடிவெடுக்க விரும்புகிறார்கள். இதற்காக மற்றைய நாட்டுக் கிளைகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தை, மறைமுகப் பிரச்சாரம் என்று அரசியல் செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலை. இதைவிடவும்,  தமது சொற் கேட்பவர்களைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தமக்குப் பிடிக்காத ஒருவர்மீது சேறு பூசும் வேலையையும் பின்னால் இருந்து செய்விக்கிறார்கள். 

சில சங்கங்கள் மீது வெவ்வேறு காலங்களில் பலமான ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே ஊரில் உள்ள தாய்ச் சங்கங்கள் மீதுதான் இவ்வாறான குற்றச் சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. பாடசாலை அதிபர்களும் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடிவதில்லை. பெரும்பாலும் கட்டுமான வேலைக்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதில்தான் அதிக முறைகேடுகள் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் இவற்றுள் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவதுமில்லை, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுமில்லை. ஊழல் நடைபெற்றாலும் பாடசாலையின் பெயர் கெட்டுவிடும் என்று முன்னைய காலங்களில் அனைவரும் சேர்ந்து அதனை மூடி மறைத்து விடுவார்கள். ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய காலத்தில் இவ்வாறான விடயங்கள் சமூகவளைத் தளங்களில் பதிவிடப்பட்டு பாடசாலைகளின் பெயரும் புகழும் சந்தி சிரிக்கும் நிலையேற்பட்டுள்ளது.  

இவ்வாறு சுயநலத்தோடும் சர்வாதிகாரப் போக்கோடும் தொழிற்படும் ஒவ்வொருவரும் முதலில் தமது பொறுப்புகள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பழைய மாணவர் சங்கங்களில் கொடுக்கப்படும் பதவிகள் என்பது அவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் இல்லை, பொறுப்பு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அடிப்படையில் தொழிற்படாது, பாடசாலையையும் அது சார்ந்த சமூகத்தையும் வளப்படுத்துவது என்ற பொது நோக்கிற்கு தன்னால் வழங்கக் கூடிய பங்களிப்பு என்ன என்பதை நோக்கியதாகவே ஒவ்வொரு சங்க செயற்குழு உறுப்பினரின் சிந்தனை இருக்க வேண்டும். சங்கம் எடுக்கும் ஒவ்வொரு விடயமும் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் (விடயத்தின் தன்மையைப் பொறுத்து) கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கும் கலாச்சாரம் பேணப்பட வேண்டும். அதேபோல வெள்ளை யானைக்கு வேட்டி கட்டுவதை விட்டுவிட்டு குறைந்த செலவில் மாணவர் சமுதாயத்துக்கும் பாடசாலைக்கும் அதிக நன்மை தரக்கூடிய விடயங்களில் பழைய மாணவர் சங்கங்கள் அதிக கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும். 

செயற்குழுவிலோ பொதுக் குழு மட்டத்திலோ எழும் பிரச்சனைகள் அந்தந்த சந்தர்ப்பங்களிலேயே சுமூகமான முறையில் கலந்துரையாடி முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். சமூக வலைத் தளங்களில் உண்மையையும் பொய்யையும் இட்டுக்கட்டி எழுதுதல், நீதிமன்றம் செல்லுதல், சங்க உறுப்பினர்களையும் பாடசாலை அதிபரையும் தூற்றுதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்தும் வீண் சண்டை, புறம் கூறுதல், பொது வெளியில் சேறு பூசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவீர்களாக இருந்தால் உங்கள் பாடசாலையை நீங்களே இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

https://www.facebook.com/101881847986243/posts/242861407221619/?d=n

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்தை வாசித்த பொழுது, நான் என்னுள் இந்த கேள்வி எழுவதை தடுக்கமுடியவில்லை. சில மாதங்களுக்கு முன் கீழே உள்ளவாறு “ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது!! ” ஆனால் எத்தனை பழைய மாணவர் சங்கங்களோ அல்லது யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் படித்த பழைய மாணவர்களோ அல்லது கிளிநொச்சி விவசாயபீடத்தில் படித்தவர்களோ யாரோனும் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தார்களா?? அறிய ஆவலாக உள்ளது. 

நான் கூட இதை என்னுடன் படித்தவர்களுடன்(யாழ்ப்பாணத்திலும் இங்கேயும்) கேட்டுப்பார்த்தேன்.. சரி யோசிப்பம் என்பதுடன் முடிந்துவிட்டது. இந்த முயற்சியில் இலாபம் உடனே வரமாட்டாது ஆனால் நீண்டகால நோக்கில் பயன் தரக்கூடியது.. 

விளங்கிக்கொள்ள முடியாத சமூதாயம்.. 

கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி..

// வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம்.கிளிநொச்சி.முல்லைத்தீவு.வவுனியா.மன்னார்.மாவட்டங்களின் இளைஞர் யுவதிகளின் கவனத்துக்கு மிகவும் அவசரம் அனைவரும் பகீரவும்

******************************************************
அருமையான வாய்ப்பும் பின்னணியில் உள்ள அரசியலும்!!
இலகுவாக என்ன செய்யலாம்??

ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது!! கடந்த செப்டெம்பர் 28 இல் இது பற்றி பகிர்ந்திருந்தேன்..
ஆனால் எங்கள் இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை!! மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது!!

நம் இளைஞர்கள் அக்கறை காட்டவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது!!
காணி கிடைத்தால் முழுநேர விவசாயம் தான் செய்யவேண்டியதில்லை!!! காணியில் வெறுமனே விவசாயம் மட்டும் தான் செய்ய முடியும் என்ற  மாயையில் இருந்து  முதலில் வெளியே வாருங்கள்!!//....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.