Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியான்மாரும் இலங்கையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மாரும் இலங்கையும்
======================

 


ஒரு நாடு இராணுவக் கட்டுக்கோப்புடன் இயங்குவது நல்லதே. ஆனால் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குவது வரவேற்கத்தக்கதல்ல.

மியான்மாரின் ஆங் சான் சூ கீ மீண்டும் இராணுவப் புரட்சியின் விளைவாகச் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் பல வருடங்கள் இவர் இராணுவத்தின் வீட்டுக் காவல், அடையாளம் தெரியாத இடத்தில் சிறை என சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்தான். அன்று அவர் சிறையில் இருக்கும்போது சமாதான தேவதையாகவே உலகினால் அடையாளப்படுத்தப்பட்டார். 1991இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றுக் கொண்டார். 

ஆனாலும் கடந்த தசாப்த காலத்தில் தொடர்ச்சியாக மியன்மாரில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தாக்குதல் தொடர்பாக அவர் காட்டிய மௌனமும் ரோகிங்கியா முஸ்லிம்களை மியன்மாரின் தேசிய இனமாக கருதவில்லை என்ற அவர் கருத்தும் அந்தத் தேவதையின் முகத்திரையைக் கிழித்து அவரின் மத, இன வாதக் கோர முகத்தை உலகிற்கு காட்டியது. இதன் விளைவாக இவருக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசையும் திரும்பப் பெறவேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலித்தது. இதனாலேயே, இம்முறை அவர் சிறைப் பிடிக்கப்பட்ட நிலையில் அதேயளவு அனுதாபம், ஆதரவு இல்லையென்று கூறலாம். 

மியான்மாருக்கும் இலங்கைக்கும் நிறைய விடயங்களில் ஆச்சரியமான வகையிலான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் தேரவாத புத்த மதம் நாட்டு மக்களின் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படுவதோடு இரண்டு நாடுகளிலும் புத்த மதம் தேசிய மதமாகவே அரசினால் போசிக்கப்படுகிறது. மக்களுக்காகவே அரசு என்ற விழுமியத்திலிருந்து விலகி மதத்திற்காகவே நாடு என்ற வகையில்தான் இரண்டு நாடுகளும் இயங்குகின்றன. 

பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இந்த இரண்டு நாடுகளிலுமே, சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும் சிறுபான்மையினருக்கு எதிராகத் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டிக் கலவரம் நடைபெற்றதைப் போலவே மியன்மாரிலும் 1930 இல் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் பர்மிய தேசியவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 200க்கு மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்கள். மியான்மாரில் வாழ்ந்த இந்தியர்களுள் பெரும்பான்மையாவர்கள் தமிழர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1942 இல் ஜப்பானியர்கள் மியான்மாரைக் கைப்பற்ற முன்னேறியபோது அரை மில்லியன் இந்தியர்கள் நாடு திரும்ப முயற்சித்தனர். இவர்கள் நாடு திரும்ப ஜப்பானியர் வருகை மட்டுமன்றி கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிராக பர்மிய தேசியவாதிகள் மேற்கொண்ட இன ஒடுக்குமுறைத் தாக்குதல்களும் காரணமாகும். இந்த இடப்பெயர்வின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காட்டு விலங்குகள், நோய், பட்டினி போன்றவற்றால் வரும் வழியிலேயே இறந்து போனார்கள். இவர்களுள் உயிர் தப்பியவர்கள் 700 km தூரத்தை ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடந்தே கடந்தார்கள்.

இதே காலப்பகுதியில் ஜப்பானியர்களால் பிடிக்கப்பட்ட தமிழர்கள் 415 km தூரமான புகையிரதப் பாதை அமைக்கும் வேலையில் ஏனைய பல யுத்தக் கைதிகளுடன் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது ஏறக்குறைய 150,000 தமிழர்கள் நோய், விலங்குகளின் தாக்குதல், ஜப்பானியர்களின்  சித்திரவதைகளால் இறந்து போனார்கள் என்பது ஒரு உபரித் தகவல்.

சுதந்திரத்தின் பின்னர் இரண்டு நாடுகளிலும் சிறுபான்மைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன. இரண்டு நாடுகளிலுமே இந்திய வம்சாவழியினர் வேற்று மனிதர்களாகவே அரசினால் பார்க்கப்பட்டதுடன் அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் குடியுரிமை அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர். 
மியன்மாரில் 1962 இல் ஆட்சியைப் பிடித்த இராணுவம் 1962 – 1964 க்கு இடைப்பட்ட காலத்தில் 300,000 இந்தியர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களை இந்திய அரசு தனது கப்பல்களை அனுப்பி, இந்தியாவிற்கு அழைத்து வந்தது. 
இதே காலப்பகுதியில்தான்  (1964) அப்போதைய பிரதமரான சிறிமாவோ இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம், பின்னர் 1974 இல் செய்த மாற்றம் என்பவற்றின் அடிப்படையில் 300,000 இந்தியத் தமிழர்கள் இந்திய அரசு அனுப்பிய கப்பல்களில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைவிடவும் இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக அரசின் ஆசிர்வாதத்துடன் தொடர்ந்தும் இன ஒடுக்குமுறைத் தாக்குதல் நடைபெற்று வந்ததைப் பற்றி இங்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.

மியான்மார் எவ்வாறு முதலில் இந்தியர்களை (தமிழர்களை) அடக்கி ஒடுக்கிய பின்னர் ரோகிங்கியா முஸ்லிம்களில் மீது கை வைத்ததோ அதைப்போலவே 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இந்து, கிறிஸ்தவ தமிழர்களை ஒடுக்கிய பின்னர் இலங்கை அரசும் இஸ்லாமியத் தமிழர்கள் மீது வன்முறையைத் தூண்டி வருகிறது. 

இவற்றை விடவும் இன்னும் சில ஆச்சரியமான ஒற்றுமைகள் உள்ளன.

நேற்று வரை தேசியத் தலைவராக இருந்த ஆங் சான் சூ கீயும் இலங்கையில் அதிகாரம் உள்ளவராக இருக்கும் மகிந்தவும் ஒரே ஆண்டு (1945) பிறந்தவர்கள். இருவரும் தமது நாட்டின் பிரபலமான அரசியல்வாதிகளின் பிள்ளைகள்; தந்தையர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள்.

இருவருமே 1990 ஆண்டு காலப்பகுதியில் மனித உரிமைபற்றி அதிகம் பேசி உலக அரங்கில் தங்களை சமாதான தேவதைகளாக காட்டிக் கொண்டவர்கள். பின்னர் கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் இருவருமே சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைத் தாக்குதல்களை தூண்டிவிடுபவர், முன்னெடுப்பவர் அல்லது அனுமதித்தவராக இருந்துள்ளார்கள்.

இன்றுள்ள சூழலில் மியன்மார் மீண்டும் இராணுவத்தின் கைக்குச் சென்றுள்ளது. இலங்கையில் அதேபோல இராணுவத்தின் ஆட்சி நேரடியாக இல்லாத போதும் அரச கட்டமைப்பின் நுனிமுதல் அடிவரை இராணுவத்தில் இருந்தவர்கள், இருப்பவர்களால்தான் நிரப்பப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் இன்று இராணுவத்தின் செல்வாக்கே அதிகரித்து உள்ளது. மியான்மாரில் வெளிப்படையான இராணுவ ஆட்சி நடைபெறுவது மட்டுமே உள்ள  ஒரே ஒரு வேறுபாடு.

இந்த இரண்டு நாடுகளின் செயற்பாடுகளையும், முன்னர் ஆட்சி செய்தவர்கள், இன்று செய்கின்றவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது இலங்கையும் மியான்மாரும் ஒட்டாமல் பிறந்த இரட்டையர்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள பௌத்த மக்கள் பின்பற்றுவது தேரவாத புத்த மதமாக இருந்தாலும் இரண்டு நாட்டு ஆட்சியாளர்களும் பின்பற்றுவது என்னவோ தீவிரவாதப் புத்த மதம்தான் போலிருக்கிறது.

 

 

https://www.facebook.com/101881847986243/posts/266012458239847/?d=n

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.